துபாயில் சந்தித்த இசை ஸ்வரங்கள் இளையராஜா – ரஹ்மான்

துபாயில் சந்தித்த இசை ஸ்வரங்கள் இளையராஜா – ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இளையராஜா.

இவர் தற்போது ‘துபாய் எக்ஸ்போ 2020’ என்ற இசை நிகழ்ச்சியை துபாய் நாட்டில் நடத்தியுள்ளார். இந்த கச்சேரி மார்ச் 5 பிரம்மாண்டமாக நடைபெற்றது.

துபாயே மிரளும் அளவுக்கு இந்த கச்சேரி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இளையராஜாவின் இசையை கேட்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதாம்.

இந்நிலையில், துபாய் நாட்டில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார் இளையராஜா.

அவரை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றி காண்பித்துள்ளார். அவருடன் எடுத்த போட்டோவை, இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
‘மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.

Ilayaraja made a surprise visit to Rahmans studio at Dubai

2K கிட்ஸின் காதலை சொல்லும் கவின் – அபர்ணாதாஸ் ஜோடி

2K கிட்ஸின் காதலை சொல்லும் கவின் – அபர்ணாதாஸ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பிக்ஸ் மூவீஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்த படத்தை ராஜேஷ். எம் உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார்.

இதில் கவின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் ஜோடியாகிறார். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

‘முதல் நீ முடிவும் நீ’ படபுகழ் ஹரிஷ், ‘வாழ்’ படபுகழ் பிரதீப் ஆண்டனி ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

இந்த படம் 2கே கிட்ஸின் காதலை மையப்படுத்தி உருவாகி உள்ளதாம்.

சென்னை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

Kavin and Abarnadoss starring new movie updates

நட்ராஜ் – பூனம்பஜ்வா ஜோடி.; ‘ஜெய்பீம்’ பட சர்ச்சை பெயரே தலைப்பானது

நட்ராஜ் – பூனம்பஜ்வா ஜோடி.; ‘ஜெய்பீம்’ பட சர்ச்சை பெயரே தலைப்பானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குருமூர்த்தி’.

இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு ச்சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது.

இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் விதமாக-இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் காமெடி, சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள்.

இதற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரி ‘மாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவைச் சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும்நடந்து முடிவடைந்திருக்கிறது.

ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் பட பிடிப்பு ஒரேஷெட் யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதி க்கட்ட (போஸ்ட் புரொடக்ஷன் ) வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.

இதில்: நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை : ஒளிப்பதிவு டைரக்டர் தேவராஜ் கவனித்திருக்கிறார். இசையை சத்ய தேவ் உதய சங்கர், அமைத்திருக்கிறார் .பாடல்கள்:மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன்,

எடிட்டிங் : S.N. பாசில், கலை : தாகூர், நடனம்: ராதிகா, சண்டை.:. பயர் கார்த்திக், ஸ்டில்ஸ்: மதன், மக்கள் தொடர்பு:பெருதுளசி பழனிவேல், வசனம்: கீர்த்தி வாசன்,

தயாரிப்பு:.சிவசலபதி , சாய் சரவணன்,
கதை, திரைக்கதை, டைரக்ஷன் கே.பி.தனசேகர்.

Natraj and Poonam Bajwa starring Gurumoorthy movie updates

MGR காலத்து ‘குதிரைவால்’ மனிதனை காண குஷியோடு காத்திருக்கும் ரசிகர்கள்

MGR காலத்து ‘குதிரைவால்’ மனிதனை காண குஷியோடு காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால்.

கலையரசன், அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார்.

மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம்.

இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் சமூககருத்துக்கள் கொண்டவையாக இருக்கும், குதிரைவால் முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் என்கிறார்கள்.

மார்ச் 18 முதல் தியேட்டரில் வெளியாகிறது குதிரைவால்.

Kuthiraivaal movie release date updates

இந்த டீசரை பார்த்தால் உங்களுக்கு இந்த செய்தியின் தலைப்பு புரியும்…

சிலையை கும்பிடுறோம்… பெண்களே கடவுள்…; நடிகர் சிவகுமார் பேச்சு

சிலையை கும்பிடுறோம்… பெண்களே கடவுள்…; நடிகர் சிவகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.

அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா பிப்ரவரி 5ல் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது…

“உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன்.

நான் பிறந்தபோது 10 மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா.

என் அம்மா எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு கூட ஊட்டி விட்டதில்லை. அவர் தனி ஆளாக நின்று விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார்” (அழுதபடியே பேசினார் சிவகுமார்).

விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்பவர்கள் பெண்கள்தான்.

கடவுளை யாரும் பார்த்ததில்லை. சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். ஆனால் பெண்கள்தான் கடவுள்”

இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.

Womens were God Sivakumar emotional speech at Uzhavar Viruthukal

விவசாயத்தை இன்ஜினியர்கள் மாற்றலாம்..; பேசி பேசியே காய்ந்த மரத்தை வளர வைத்த சூர்யா-கார்த்தி

விவசாயத்தை இன்ஜினியர்கள் மாற்றலாம்..; பேசி பேசியே காய்ந்த மரத்தை வளர வைத்த சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.

அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது…

“எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரம் திடீரென காய்ந்துவிட்டது. இனி அந்த மரம் வளராது என தோட்டக்காரர் சொன்னார்.

ஆனால் நாம் மரம் அருகே உட்கார்ந்து பேசினால் மரம் வளரும் என படித்தேன். அதை கார்த்தியிடம் சொன்னேன்.

அந்த மரத்தின் பக்கத்தில் சென்று, ‘உன் பக்கத்தில் உள்ள மரம் எப்படி வளருது. அதை மாதிரியே நீயும் வளர்ந்தால் என்ன?’ என்று அந்த மரத்திடம் பேசினேன்.
நான் ஒருநாள் மட்டும்தான் பேசினேன். கார்த்தி தினமும் மரத்துடன் பேசினார்.

தற்போது, காய்ந்த அந்த மரம் உயரமாக வளர்ந்துவிட்டது.”

இவ்வாறு சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது…

கல்லூரியில் ப்ராஜெக்டை காசு கொடுத்து மாணவர்கள் வாங்க வேண்டாம். இன்றைய சமூகத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நான் ஆலிவ் ஆயில் பயன்படுத்த வில்லை நம்ம ஊரு நல்லண்ணெய் தான் சாப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும். நுகர்வோரை விவசாயம் நோக்கி பார்க்க வைப்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது.

இன்ஜினியர்களுக்கு பஞ்சமே இல்லாத மாநிலம் தமிழ்நாடு. நானும் இன்ஜினியர் தான். ஆனால் இப்போ வேறு தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்.

இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

Suriya and Karthi speech at Uzhavar Virudhugal 2022 event

More Articles
Follows