தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற நிறைய சிரமங்கள் உள்ளது.
குறிப்பாக சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்கள் மீண்டும் சென்னை வர இ-பாஸ் பெற வேண்டும்.
முக்கியமாக பஸ் போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது.
சிலர் கொரோனா தொற்று பயம் காரணமாக கார் & பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது…
கொரோனா தொற்று தற்போமைய சூழலில் முழு தளர்வு என்பதற்கு வாய்ப்பில்லை.
சென்னைக்கு வருவதற்கான இ-பாஸ் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தொழிலாளர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.
பணியாளர்கள் சென்னைக்கு வந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து கொடுத்தால்தான் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்” என கூறினர்.