Hats-off மகனே.. ‘மகான்’ ஒரு ‘sweet’ கனவாய்..; சிலிர்க்கும் ‘சீயான்’ விக்ரம்

Hats-off மகனே.. ‘மகான்’ ஒரு ‘sweet’ கனவாய்..; சிலிர்க்கும் ‘சீயான்’ விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது.
ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்’.

– காந்தி மகான்.

வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

Social mediaவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானை கொண்டாடிய அனைவரின் அன்பையும், ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும், பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன்.

அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்.. அழகு. நன்றிகள் பல்லாயிரம்.

பாபிக்கு thanx. நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை. சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talentனு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you.

த்ருவ். தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டுவந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு.. hats-off மகனே.

வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் gangற்கு ஒரு பெரிய salute. எங்களுடன் ‘நீயா, நானா’ என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock On!

மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thank you..

இவ்வாறு மகான் வெற்றி குறித்து சிலிர்க்கிறார் சீயான் விக்ரம்.

Hats off Son.. Mahaan is unforgettable experience says Vikram

3 ஹீரோஸ்… 3 மூவிஸ்… ஆனா ஒரே டைட்டில்..; கதையாச்சும் மாறுமா.? கன்ப்யூசனில் ரசிகர்கள்

3 ஹீரோஸ்… 3 மூவிஸ்… ஆனா ஒரே டைட்டில்..; கதையாச்சும் மாறுமா.? கன்ப்யூசனில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பில்லா, தீ, பொல்லாதவன், மாப்பிள்ளை, காக்கி சட்டை, படிக்காதவன், தங்கமகன் இப்படி ஒரே பெயரில் 2 படங்கள் வந்துள்ளதை பார்த்து இருக்கிறோம்.

ஒரு படம் வந்தால் பல வருடங்கள் கழித்து அதே பெயரில் மற்றொரு படம் வந்திருக்கும்.. சில நேரம் ரீமேக்.. சில நேரம் புதுக்கதையுடன் வந்திருக்கும்.

ஆனால் இப்போது ஒரே பெயரில் சில நாட்கள் இடைவெளியில் வெவ்வேறு மொழிகளில் 3 படங்கள் தயாராகி வருகிறது.

அந்த பெயர்… நம் தேசிய கீதத்தை குறிக்கும் ‘ஜன கண மன’….

தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்சி நடிக்கும் படத்தின் பெயர் ‘ஜன கண மன’. தான்.

மலையாளத்தில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘ஜன கன மன’.

டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்கத்தில் உர்ருவாகியுள்ள இந்தப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமாக தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அறிவிக்கப்பட்ட படமும் ‘ஜன கண மன’. சுருக்கமாக JGM.

ரசிகர்கள் கன்ப்யூஸ் ஆகாமல் படத்தை பார்த்து ரசித்தால் ஓகே தான்.

டைட்டில் மட்டும்தானே ஒன்னு.. கதை வேற தானே..

Vijay Devarakonda new film title gets new problem

‘ஹரா’வில் அல்டிமேட் கூட்டணி..; யோகிபாபுவை யோக பாபுவாக மாற்றிய விஜய்ஸ்ரீ

‘ஹரா’வில் அல்டிமேட் கூட்டணி..; யோகிபாபுவை யோக பாபுவாக மாற்றிய விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனை நாயகனாக்குகிறார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஹரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரத்தில் கோவை பகுதிகளில் தொடங்கவுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘ஹரா’ படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படம் தந்தை மகள் சென்டிமென்ட் கதையில் உருவாகிறது.

2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு நடிக்க சம்மதித்திருப்பதை உறுதி செய்து டிவீட் செய்துள்ளார் டைரக்டர் விஜய்ஸ்ரீ.

அந்த டிவீட்டில் ‘ஹரா படத்தில் யோகிபாபு நடிக்க சம்மதித்ததில் மோகன் தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்

அதேபோல் நடிகர் யோகி பாபுவும் மோகன் சார் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் இருப்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்’ எனப் பதிவிட்டுள்ளார் விஜய்ஸ்ரீ.

Yogi Babu is on board for Mohan’s Haraa

ரவிதேஜாவின் ‘டைகர்’ படத்தை வழங்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பாளர்

ரவிதேஜாவின் ‘டைகர்’ படத்தை வழங்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

அத்துடன் இப்படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது.

‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்.

‘டைகர் ’நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா, உகாதி தினமான ஏப்ரல் 2-ஆம் தேதியன்று மாதப்பூரில் உள்ள ஹெச் ஐ சி சி என்னுமிடத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் ‘டைகர்’ படத்தின் பிரீ =லுக் மதியம் 12 மணியளவில் வெளியிடப்படுகிறது.

பான் இந்தியா திரைப்படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவு படைப்பு இது.

‘டைகர்’ நாகேஸ்வரராவ் 1970களில் தென்னிந்தியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட மோசமான மற்றும் துணிச்சல்மிக்க திருடன். இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட திரைப்படம். ஆற்றல்மிக்க இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா தன்னுடைய தோற்றத்தை முழுமையாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, தோற்றப்பொலிவு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு முன் ரவி தேஜா ஏற்றிராத கதாபாத்திரம் இது.

இயக்குநர் வம்சி டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் திரைக்கதையை ஆய்வுகளுக்கு பிறகு முழுமையாக எழுதி நிறைவு செய்திருக்கிறார்.

அவருடைய கனவுப் படைப்பான இப்படத்தை தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உருவாகிறது. இதற்காகவும் இயக்குநர் வம்சி பிரத்யேகமாக உழைத்திருக்கிறார்.

‘டைகர்’ நாகேஸ்வரராவின் வாழ்க்கை கதை, ஒரு திரைப்படத்திற்கான முழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

இது போன்ற வெகுஜன மக்களை கவரும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ரவி தேஜா பொருத்தமானவர் என்பதால் அவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் ‘டைகர்’ நாகேஸ்வரராவ் ஏராளமான ஆக்சன் கட்சிகளுடன் பிரம்மாண்டமாக உருவாகும் என்பதால், இதன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 70-களில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் உருவாக்கத்தில் பிரபலமான தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா பணியாற்ற, படத்திற்கான வசனங்களை ஸ்ரீகாந்த் விஸ்ஸா எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்களின் விவர பட்டியல்.

கதாநாயகன். = ரவி தேஜா
எழுத்து & இயக்கம். = வம்சி
தயாரிப்பாளர். = அபிஷேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் = அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வெளியிடுபவர் . = தேஜ் நாராயணன் அகர்வால்
இணை தயாரிப்பாளர். = மயங்க் சிங்கானியா
வசனகர்த்தா. = ஸ்ரீகாந்த் விஸ்ஸா
இசை. = ஜீ. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு = ஆர் மதி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு. = அபினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு = யுவராஜ்

Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Grand Launching & Pre-Look On April 2nd

பான் வேர்ல்ட் 3D படமாக ‘விக்ராந்த் ரோணா’..; மோகன்லால் சிரஞ்சீவி சிம்பு கூட்டணி

பான் வேர்ல்ட் 3D படமாக ‘விக்ராந்த் ரோணா’..; மோகன்லால் சிரஞ்சீவி சிம்பு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் 3-D அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள படம் “விக்ராந்த் ரோணா”.

இத்திரைப்படம், உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

தயாரிப்பாளர்கள் படத்தின் புரமோசன் வேலைகளை பிரமாண்ட வகையில் மும்முரமாக துவங்கியுள்ளார்கள்.

இந்த வார இறுதியில் ‘விக்ராந்த் ரோனா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் அற்புதமான டீசரை, வெவ்வேறு மொழி திரைத்துறைகளைச் சேர்ந்த மூன்று ஸ்டார்கள் இணைந்து வெளியிட உள்ளனர்.

இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முறையே சிரஞ்சீவி, மோகன்லால் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளனர்.

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் 3-D அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படங்களுல் ஒன்றாகும். கடந்த ஆண்டு தயாரிப்பாளர்கள் படத்தின் கிளிம்ப்ஸே காட்சித்துணுக்கை, நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3டியில் வெளியிட்டது முதல், கிச்சாவின் ரசிகர்கள் மத்தியில், டீஸர் மற்றும் டிரெய்லரைப் பார்க்க பெரும் ஆவலை கிளப்பியுள்ளது.

கிச்சாவின் பிறந்தநாளான செப்டம்பர் 2 அன்று, படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்திய முதல் கிளிம்ப்ஸே காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

இது விக்ராந்த் ரோனா என்ற எதிரிகளை பயமுறுத்தும் இருளின் அரசனுடைய அறிமுகத்தை தருவதாக அமைந்திருந்தது.

பான் வேர்ல்ட் 3டி படமான ‘விக்ராந்த் ரோணா’ இந்திய நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். துபாயின் புர்ஜ் கலீஃபாவில் டைட்டில் வெளியீட்டு விழா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாயகியாக ஒப்பந்தம், அதனுடன் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியிடப்படும் என்று அறிவித்தது வரை, ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பிரமாண்டமாக அமைந்திருந்தது.

Zee Studios, Shalini Artss உடன் இணைந்து தனது அடுத்த மெகா முயற்சியை, பான் வேர்ல்ட் 3D படத்தை அறிவித்தது.

‘விக்ராந்த் ரோணா’ படத்தில் கிச்சா சுதீப் முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிருப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

பான் வேர்ல்ட் 3டி திரைப்படமான “விக்ராந்த் ரோணா” கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

மேலும் அரபு, ஜெர்மன், ரஷ்யன், மாண்டரின், ஆங்கிலம் உட்பட இன்னும் பல மொழிகளிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீபா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படத்தை ’ Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

Mohan Lal , Chiranjeevi , STR joins for Vikrant Rona 3D film

‘மெரினா புரட்சி’ இயக்குனரின் அடுத்த அதிரடி PEARLCITY MASSACRE

‘மெரினா புரட்சி’ இயக்குனரின் அடுத்த அதிரடி PEARLCITY MASSACRE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத் திரைப்படமாக தயாரித்திருந்தனர்.

M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ நார்வே,கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.

தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளனர்.

மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் படத்தை பற்றி இயக்குனர் M.S.ராஜ்..

“PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத்திரைப்படம் உண்மையில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது.

மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளது.

.துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர்.

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு, இந்த பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்.” என கேட்டுக்கொண்டார்.

Marina Puratchi direcor’s next is PEARLCITY MASSACRE

More Articles
Follows