தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட்டில் வாரிசு அரசியல் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து நட்டி நட்ராஜ், சாந்தனு ஆகியோரும் தமிழ் சினிமாவில் குழு அரசியல் இருப்பதாக கருத்து பதிவிட்டு இருந்தனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
இவர்களை அடுத்து சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தயாரிப்பாளர்களிடையே குரூப்பிசம் இருப்பதாக கருத்து பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது…
“பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது.
அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான். தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.
அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.