கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் டிராய் ஸ்னீட் மரணம்

கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் டிராய் ஸ்னீட் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gospel singer Troy Sneed dies from corona virusகொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 30.000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில் பிரபல பாடகரான டிராய் ஸ்னீட், கரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளார்.

பிளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 52.

1999-ல் வெளியான ஹையர் ஆல்பத்துக்காக கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் டிராய் ஸ்னீட் என்பது குறிப்பிடத்தக்கது.

Gospel singer Troy Sneed dies from corona virus

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி டிடி; ‘வலிமை’யாக வருவேன் என உறுதி

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி டிடி; ‘வலிமை’யாக வருவேன் என உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV Anchor DD aka Dhivya Dharshini gets injured in lock downபிரபல டிவியில் முன்னனி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி (டிடி).

தனுஷ் உடன் பவர் பாண்டி, விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார் டிடி.
டிவியில் மட்டுமில்ல சமூக வலைதளங்களில் இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் உரையாடுகின்றனர். ஆனால் டிடி வரவில்லை என்பதால் ஆர்வத்துடன் கேட்டனர்.

இந்த நிலையில் தனக்கு காலில் முறிவு ஏற்பட்டதாலேயே ஆன்லைனில் வர முடியவில்லை என டிடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிடி கூறியிருப்பதாவது:

ஊரடங்குக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது. என் கால் வலது முட்டியை சரி செய்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய இடது கால் முட்டியில் முறிவு ஏற்பட்டது. வலி இருக்கிறது.

ஆன்லைனில் படங்கள் பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய மனதை செலுத்த முயற்சி செய்து வந்தேன். இதை இங்கு பதிவிட மெல்ல வலிமை பெற்றேன்.

இதை சொல்லாமல் இருந்ததற்கு என் மீது அன்பு வைத்திருக்கும் மக்கள் என் மீது கோபம் கொள்வார்கள் என்று எனக்கு தெரியும்.

யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. விரைவில் மீண்டு உங்களிடம் வந்து உங்கள் அன்பை பெறுவேன்.

என்னுடைய மருத்துவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள். நேர்லை வருமாறு கேட்டவர்கள் நான் முடியாது என்று சொன்ன காரணத்தை இப்போது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டிடி தன் உடல் நிலை குறித்து கூறியுள்ளார்

TV Anchor DD aka Dhivya Dharshini gets injured in lock down

BREAKING தாயார் மரணமடைந்த 3 நாட்களில் நடிகர் இர்பான்கான் மரணம்

BREAKING தாயார் மரணமடைந்த 3 நாட்களில் நடிகர் இர்பான்கான் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award Actor Irrfan Khan passes awayஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான்.

இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.

2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் இர்பான் கானின் தாயார் சாயிதா பேகம், முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.

இவருக்கும் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. .

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இர்பான் கானும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 54.

இர்பான்கான் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக அவர் நடித்த ஆங்கிரேஸி மீடியம் என்ற படம் ரிலீசானது இங்கே கவனிக்கதக்கது.

National award Actor Irrfan Khan passes away

ஆணியே புடுங்க வேணாம் போலதான் இது.; துல்கருக்கு பிரசன்னா ஆதரவு

ஆணியே புடுங்க வேணாம் போலதான் இது.; துல்கருக்கு பிரசன்னா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issueஅனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.

தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.

இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதனையடுத்து அந்த காட்சிக்கு விளக்கமளித்து துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில், மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது.

அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் (பிரபாகரன்) பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issue

Namma oorla like how we use “aaniye pudingavenam” or “enna koduma saravanan” the name is used from a famous old film dialog. Dear ppl i understand the sentiment involved with the name but let’s not spread hate based on misunderstanding.

சிரஞ்சீவிக்காக மீண்டும் உதயநிதியை உதறிய காஜல் அகர்வால்.?

சிரஞ்சீவிக்காக மீண்டும் உதயநிதியை உதறிய காஜல் அகர்வால்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal walks out of Udhayanidhi movie for the 2nd timeகாஜல் அகர்வால் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட சூட்டிங் சமயத்தில் நடந்த விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் இப்பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதயநிதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம்.

ஆனால் மற்றொரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கவிருந்ததால் உதயநிதி படத்திலிருந்து காஜல் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ தொகையை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது… கொரட்டல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் உதயநிதி படத்திலிருந்து விலகிவிட்டார்.

ஏற்கெனவே நண்பேன்டா படத்திலும் உதயநிதியுடன் நடிக்க மறுத்து விலகி விட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் தான் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது என்பது வேறு கதை.

Kajal walks out of Udhayanidhi movie for the 2nd time

‘ஓ மை கடவுளே’ பட நடிகைக்கு வாய்ப்பளித்த ஏஆர். முருகதாஸ்

‘ஓ மை கடவுளே’ பட நடிகைக்கு வாய்ப்பளித்த ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss and Vani Bhojan team up for Web Seriesடிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

அப்பட வெற்றியால் தற்போது அவர் கைவசம் 5 படங்கள் உள்ளதாம்.

இந்த நிலையில் தற்போது வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார் வாணி போஜன்.

இந்த வெப் சீரிஸை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க அவரின் துணை இயக்குனர் இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

AR Murugadoss and Vani Bhojan team up for Web Series

More Articles
Follows