மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு

மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு

ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இதில் அமீர்,சாந்தினி ஸ்ரீதரன் இமான் அண்ணாச்சி குட்டி புலி சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.. இந்த படம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்துள்ளதாவது..

அமீர் நடித்த
“உயிர் தமிழுக்கு“ ப்ரிவீவ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
நான் யோகி, வடசென்னை ராஜன் மனநிலையில் உள்ளே அமர்ந்திருந்தேன்.

ஆனால் அவர் தோன்றும் முதல் காட்சியிலேயே அந்த இமேஜை உடைத்து சிரிக்க வைத்து காதல்,காமெடி, ஆக்‌ஷன், அரசியல் பகடியென
படம் முழுக்க மாஸ் எண்டர்டைனராக ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் அமீர்
சமீபத்தில் நடிகரான இயக்குநர்கள் கதை நாயகனாகவே திரையில் தோன்றினார்கள் அமீர் தொழில்முறை கதாநாயகனாகவே அதகளப்படுத்தியிருக்கிறார்.

படம் முழுவதும் அவருடைய நடிப்பில் பருத்திவீரன் கார்த்தியின் உடல் மொழியும் குறும்பும் அச்சு அசலாக தெரிகிறதென நினைத்தேன் சற்று தாமதமாகத்தான் உணர்ந்தேன் அந்த பருத்திவீரனே இவர்தானென்று எதார்த்தமான,
கலகலப்பான, நேர்த்தியான திரைப்படமாக இருந்தது ‘உயிர் தமிழுக்கு “ இப்படத்தின்
மூலம் திறமையான இயக்குநர் அமீர் தன்னை தவிர்க்கமுடியாத கமர்சியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்தியிருக்கிறார்.

இத்திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் சிரிப்பும், கும்மாளமாகவும் கொண்டாடுவதைக்கான ஆவலோடு இருக்கிறேன்.

அறிமுக இயக்குநர் ஆதம் பாவாவிற்கும்,அமீர் சாருக்கும் வாழ்த்துக்கள் 💐
நாராயணன்
உதவி இயக்குநர்

———-

உயிர் தமிழுக்கு
முதல் பிரதி பார்த்தேன்
அருமையான மாஸ்
கமர்சியல் படம்.

படம் பக்கா theatre mood ல்உள்ளது அமீரின் உடல் மொழி மற்றும் வாய் மொழி இரண்டும் ஒரு பக்கா கம்ப்ளீட் கமர்சியல் ஹீரோவாக முன்னிருத்துகிறது காதல், சண்டை காட்சிகளிலும் அவர் நடிப்பில் ஒரு மாஸ் இருந்தது அமீர் அண்னனுக்கு இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வை நானறிவேன் அது படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

என்னை அறியாமல் பல காட்சிகளில் சிரித்து ரசிக்க முடிந்தது ஒவ்வொரு காட்சியிலும் அண்ணனின் நடிப்பு அசால்ட் மதுரை ரகம் வடசென்னை ராஜனை பார்த்த ரசிகர்கள் இந்த அழகான எம் ஜி ஆர் பாண்டியனை நிச்சயம் ரசிப்பார்கள் படம் பிரம்மாண்டமாக ரிச்னஸ்ஸாக இருந்தது.

இமான் அண்ணாச்சி + அமீர் . சத்யராஜ்+ கவுண்டமணி கூட்டனியை பல இடங்களில் நினைவுபடுத்துவது.. ஆரோக்ய காமெடி கமர்ஷியல் கலாட்டா இவை அனைத்தும் ஒரு கமர்சியல் படஆடியன்ஸுக்கு புல் மீல்ஸ் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.

அமீர் அண்ணனுக்கும், இயக்கி தயாரித்த ஆதம் பாவாவுக்கும், வெளியிடும்
நண்பர் சுரேஷ் காமாட்சிக்கும்
உயிர் தமிழுக்கு முக்கியமான படம் வாழ்துக்கள் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

அன்புடன் அஸ்லம்

——-

ஒரு மதிய வேளை, திடீரென அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் முன்னோட்ட காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மதுரை, தேனி பின்னணியில் வரும் படங்கள் என்றாலே ஒரு தனி குஷி தான். அதுவும் அரிவாள்களைத் தவிர்த்து.. மதுரை வட்டாரத்தின் இன்னொரு பரிமாணமான நட்பு, லந்து, அலப்பரை, காதல்,அரசியல் என மாசி வீதி இட்லியும், மட்டன் சுக்காவுமாக ஒரு ட்ரீட் கிடைத்தால்.. டபுள் குஷி தானே.!!

சமீபத்தில் திரையரங்குகளுக்குள் நுழைந்தாலே.. இடைவிடாது சுடும் எந்திரத் துப்பாக்கிகள், திடீரென துண்டிக்கப்பட்டு உருளும் தலைகள், திரையெங்கும் நிறையும் ரத்த சகதிகள், வெடித்து சிதறும் கார்கள்.. இவைதான் நம் கண்களிலும், காதுகளிலும் ரீங்காரமிடுகின்றன. கண்ணையும் காதையும் மூடினாலும் இந்த ரீங்காரங்கள் நிற்பதில்லை.

‘உயிர் தமிழுக்கும்’ அப்படியான ரத்தம் தெறிக்கும் அரசியல், கேங்கஸ்ட்டர் படமாகத் தான் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு அரங்கில் உட்கார்ந்தேன்.

ஆனால், ரத்த படலத்தை முற்றிலுமாகத் தவிர்த்து.. ஒரு அழகான காதல் கதையை அரசியல் பின்னணியில் நகைச்சுவையும், கொண்டாட்டமும் நிறைத்து சொல்லியிருக்கிறார்கள்.

மதுரை பகுதிகளின் ஆளுமைகளுக்கு ஒரு அலட்சியமும், திமிரும், லந்தும் கலந்த வசீகரமான மேனரிசம் இருக்கும்‌. அமீரிடம் இந்த மேனரிசம் ஒரு மாஸ் கதாநாயகனுக்கான கரிஷ்மாவாக அழகாக விளையாடுகிறது.

சில காட்சிகள் பார்த்து பழகிய காட்சிகள் என்றாலும் அதை அமீர் மதுரை அலப்பரையோடு நிகழ்த்தும் போது.‌. நமக்கு ஒரு புது சுவாரஸ்யம் கிடைக்கவே செய்கிறது.

சமகால வாழ்க்கைச் சூழலில்.. சிரித்து கொண்டாடி மனதை லேசாக்கும் ஒரு படம் கொடுத்ததற்கு ‘உயிர் தமிழுக்கு’ குழுவினருக்கு மனநிறைந்த பாராட்டுக்கள்.

எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ஆதம் பாவா தமிழ் திரையுலகிற்கு ஒரு நல்வரவு. வித்யாசாகரின் மறுவரவு.. படம் நமக்கு கொடுக்கும் இன்னொரு ட்ரீட்.

படத்தை தன் தோளில் சுமக்க வல்ல ஒரு கரிஸ்மேட்டிக் ஹீரோ இந்தப் படத்தின் மூலம் அவதரித்துள்ளார் என்றால் அது மிகையல்ல‌.!

தமிழ் வெல்லும் 💐💐
அருண்
உதவி இயக்குநர்

Good response for Uyir Tamizhuku from all

‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’.. எலக்சன் படத்திலிருந்து லவ் டூயட் இதோ..

‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’.. எலக்சன் படத்திலிருந்து லவ் டூயட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’.. எலக்சன் படத்திலிருந்து லவ் டூயட் இதோ..

*விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

*ரீல் குட் ஃபிலிம்ஸின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

மே மாதம் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற
‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’ என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடி பாடலாக தயாராகி இருக்கும் இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.

Romantic duet song from Election is here

அதர்வா பிறந்த நாளில் DNA ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நெல்சன் வெங்கடேசன்

அதர்வா பிறந்த நாளில் DNA ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நெல்சன் வெங்கடேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா பிறந்த நாளில் DNA ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நெல்சன் வெங்கடேசன்

நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சித்தா’ படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார்.

அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்.

இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் டிரைலர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

DNA first look launched on Atharvaa Birthday

பெண்கள் தங்கள் நலனை சிந்திப்பது சுயநலமா.? சத்யபாமா நிகழ்ச்சியில் சமந்தா பேச்சு

பெண்கள் தங்கள் நலனை சிந்திப்பது சுயநலமா.? சத்யபாமா நிகழ்ச்சியில் சமந்தா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் தங்கள் நலனை சிந்திப்பது சுயநலமா.? சத்யபாமா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சமந்தா பேச்சு

*சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய ஆரோக்கிய மேம்பாட்டிற்கான “ஷீ ஃபர்ஸ்ட்” சேவையை டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் சமந்தா தொடங்கி வைத்தனர்.*

சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மே மாதம் 5 ஆம் தேதி, 2024 அன்று பெண்கள் மேம்பாட்டுக்கான ‘அன்பு’ என்ற புதிய சேவையை பெருமையுடன் தொடங்கியது.

பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அன்பு ஹெல்த் கார்டுகளை பெண் ஊழியர்கள், மாணவிகள் மற்றும் பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு சத்யபாமாவின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் வழங்கினார்.

வரவேற்புரையை துணைத் தலைவர் மரிய பெர்னாடெட் தமிழரசி & இந்த முயற்சியின் சிறப்பம்சங்களை துணைத் தலைவர் கேத்தரின் ஜான்சன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைவர் டாக்டர் மேரி ஜான்சன் மற்றும் துணைத் தலைவர் அருள் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் தனது உரையில், ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது குடும்பத்தின் அஸ்திவாரமாகத் தொடர உதவுவதற்கு மிக முக்கியமான அம்சமாகும் என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி ஒவ்வொரு பெண்ணின் மனதையும் சென்றடைய மேற்கொண்ட முயற்சியாகக் குறிப்பிட்டு, பெண்களிடையே நல்வாழ்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தம் வகையில் துவக்கியுள்ளோம்” என்றார்.

“ஆரோக்கியமான பெண் குடும்பத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்” என்று கூறி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பெண்கள் சுய சுகாதார முன்னேற்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இந்த நிகழ்விற்கு புகழ்பெற்ற நடிகை சமந்தா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்… அவர் தன்னை சத்யபாமா குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், இந்த சேவை முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும்… “பெண்கள் தங்கள் நலனைப் பற்றி சிந்திப்பது சுயநலம் என்று கருதி முக்கியத்துவம் தருவதில்லை” மற்றும் தற்போது பெண்களின் ஆரோக்கியம் பற்றிய புள்ளி விவரங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.. அதனால் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை.” என்றார்.

சத்யபாமாவின் அன்பு ஹெல்த் கார்டு முயற்சி இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்” என்று நடிகை சமந்தா கூறினார்.

இந்த ஹெல்த் கார்டுகள் மூலம் பொது மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் தரமான பராமரிப்பு சேவைகளை வழங்கும் சத்யபாமா மருத்துவமனையில் மேமோகிராம், இரத்த பரிசோதனை பகுப்பாய்வு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, கண் பராமரிப்பு, வாய்வழி சுகாதாரம், வயிற்று ஸ்கேன், ஹெச்பி எண்ணிக்கை ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம்.

சத்யபாமா மருத்துவமனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது.

பெண்களின் ஆரோக்கியம் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அடுத்த தலைமுறையை வாழ்வில் கொண்டு வருவது பெண்கள் தான். எனவே, அவர்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது முக்கியம்.

சத்யபாமா பொது மருத்துவமனையில் பின்வரும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆலோசனை சேவைகள்..:
கண்
காது மூக்கு தொண்டை
மகளிர் நோய் மருத்துவ இயல்
மருத்துவ சேவைகள்
பொது அறுவை சிகிச்சை
குழந்தை மருத்துவம்
இரையகக் குடலியவியல் (Gastroentrology)
நீரிழிவு நோய்
பல்
இரத்த சோதனை:
முழுமையான இரத்த எண்ணிக்கை
கல்லீரல் செயல்பாடு சோதனை
சிறுநீரக செயல்பாடு சோதனை
எலக்ட்ரோலைட்டுகள்
HbA1c
டைபாய்டு பரிசோதனை

மற்ற சேவைகள்
எக்ஸ்ரே
ஈசிஜி
அனைத்து பகுதிகளிலும் அல்ட்ராசவுண்ட் குறிப்பாக வயிறு பகுதி
மேமோகிராம்
தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி

“ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், மரியாதை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் நடத்தப்படும் உங்கள் ஆரோக்கியத்திற்கான பயணம் இங்கே தொடங்குகிறது” என்று சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் கூறினார்.

Samantha speech at Sathyabama Deemed University event

குழந்தைகளை அலறவிடும் ‘அரண்மனை-4’.: குலுங்கி குலுக்கி சிரிக்கும் குடும்பங்கள்

குழந்தைகளை அலறவிடும் ‘அரண்மனை-4’.: குலுங்கி குலுக்கி சிரிக்கும் குடும்பங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகளை அலறவிடும் ‘அரண்மனை-4’.: குலுங்கி குலுக்கி சிரிக்கும் குடும்பங்கள்

கடந்த வாரம் மே மூன்றாம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது அரண்மனை 4.

சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு கோவை சரளா சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.

இந்த படம் வெளியான நாள் முதலே குழந்தைகளையும் குடும்பங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் 4 நாள் இந்த படம் நான்கு நாட்களில் ரூபாய் 23 கோடியை இந்த படம் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அளவில் ₹ 20 கோடியையும் உலக அளவில் மொத்தம் 23 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

குழந்தைகளை கவரும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளும் குழந்தைகளுக்கான காட்சிகளும் அதிகம் உள்ளன.. இதை பார்க்கும் குழந்தைகள் குஷியில் மகிழ்வதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைவேளைக்கு பின்னர் காமெடியில் படம் களைகட்டி இருப்பதால் குடும்பங்கள் ரசித்து மகிழ்கின்றன… மேலும் கிளைமாக்ஸ் அம்மன் பாடலில் குஷ்பூ சிம்ரனும் இணைந்து ஆடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது எனலாம்..

ஏப்ரல் இறுதிவரை கிரிக்கெட் மேட்ச் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் காணப்பட்டதால் தியேட்டரில் கூட்டம் பெரிய அளவில் இல்லை.. ஆனால் தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் தியேட்டரில் குடும்பங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Aranmanai 4 movie getting good response from family audience

ரஞ்சித் – மாரி மீண்டும் கூட்டணி..; துருவ் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

ரஞ்சித் – மாரி மீண்டும் கூட்டணி..; துருவ் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !!*

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய திரைப்படங்களை வழங்கவுள்ளன. இந்நிலையில் தற்போது தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இளம் நட்சத்திர நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாகக் கொண்டுவருகிறது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார், எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டிங் சக்திகுமார், கலை இயக்கம் மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், “பைசன் காளமாடன்”, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

Dhruv Vikram

‘Bison’ is ready to roar!🦬

Applause Entertainment and Neelam Studios have joined forces to bring to you ‘Bison Kaalamaadan’! With Mari Selvaraj steering the ship and Dhruv Vikram like you have never seen him before. Brace yourself for an unforgettable cinematic experience!

#BisonKaalamaadan #BisonKaalamaadanFilmingNow

@ApplauseSocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @mari_selvaraj @beemji @Tisaditi
#DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi @rajisha_vijayan @KalaiActor
@gobeatroute @aimsathishpro @pro_guna @proyuvraaj

Dhruv Vikram next titled Bison Kaalamadan

More Articles
Follows