திரைத்துறைக்கு ஊரடங்கில் தளர்வு கேட்கும் பெப்சி; எடப்பாடி ஏற்பாரா?

திரைத்துறைக்கு ஊரடங்கில் தளர்வு கேட்கும் பெப்சி; எடப்பாடி ஏற்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI seeks lock down relaxation RK Selvamani request to Chief Minister கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் இன்று மே 4 முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை சில மாநிலங்கள் அறிவித்துள்ளன.

அதாவது சில வணிகங்களுக்கு மட்டும் சில விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்துள்ளன.

இது பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களை பொறுத்து மாறுப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.

இந்த நிலையில் இது போன்று சினிமாவிற்கும் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பெப்சி தலைவர் ஆர்கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“தற்போது ஊரடங்கு சட்டம்‌ போடப்பட்டு ஏறக்குறைய 50 நாட்களை தொட இருக்கிறோம்‌. கரோனா வைரஸ்‌ பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள்‌ ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின்‌ அனைத்து வேலைகளையும்‌ நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50-வது நாளை கடக்க உள்ளோம்‌.

வெற்றிகரமான 100 நாள்‌, வெள்ளிவிழா, பொன்விழா என திரைப்பட வெற்றிகளைச் சந்தோஷமாகக் கொண்டாடிய திரைப்படத்துறை இந்த வேலைமுடக்கப்பட்ட 50-வது நாள்‌ என்று அறிவிக்கக்கூடிய துர்ப்பாக்கியமான துன்பமான சூழ்நிலையில்‌ உள்ளோம்‌.

தமிழ்த்திரைப்பட துறையினர்‌ நலவாரியம்‌ மூலம்‌ ரூ.1,000/- மும்‌, தமிழ்த்திரைப்பட கலைஞர்கள்‌ மூலம்‌ பெறபட்ட நன்கொடை வழியாக 1,500 ரூபாய்க்கான உணவுப்பொருள்களும்‌, அமிதாப் பச்சன்‌ மூலம்‌ சோனி டிவி மற்றும்‌ கல்யாண்‌ ஜூவல்லரி வழங்கிய ரூ.1,500 மதிப்பிலான உணவுப்பொருள்களும்‌ ஏறக்குறைய ரூ.4,000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 50 நாள்‌ வேலை முடக்கத்தில்‌ பசிப்பிணியில்‌ இருந்து எங்கள்‌ தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்‌.

இனியும்‌ வேலை முடக்கம்‌ நீடிக்கப்பட்டால் கரோனா வைரஸ்‌ பாதிப்பிலிருந்து தப்பித்த தொழிலாளர்கள்‌ பசிப்பிணியில்‌ பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில்‌ உள்ளார்கள்‌ என்பதை வருத்தத்துடன்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌.

தற்போது 17 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன்‌ கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போல்‌ திரைப்படத்துறைக்கும்‌, தொலைக்காட்சிகளுக்கும்‌ நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன்‌ கேட்டுக் கொள்கிறோம்‌.

குறைந்த பட்சம்‌ திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங்‌, ரீ-ரெக்கார்டிங்‌, டப்பிங்‌ போன்ற போஸ்ட்‌ புரொடக்‌ஷன்‌ பணிகளுக்கும்‌ தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும்‌ அனுமதி வழங்கினால்‌ சம்மேளனத்தின்‌ 40, 50 சதவீத தொழிலாளர்கள்‌ வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும்‌ என்பதையும்‌ அவர்கள்‌ பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும்‌ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

இந்த பணிகளை சமூக இடைவெளியுடன்‌ பணி செய்ய வைக்க இயலும்‌, என்பதால்‌ திரைப்படங்களுக்கு போஸ்ட்‌ புரொடக்‌ஷன்‌ பணிகளுக்கும்‌ மற்றும்‌ தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மத்திய, மாநில அரசுகள்‌ விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும்‌ நிபந்தனைகளையும்‌ ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன்‌ மருத்துவ பாதுகாப்புகளுடன்‌ சுகாதாரமான முறையில்‌ இந்த பணிகளைச் செய்வோம்‌ என்று உறுதி அளிக்கின்றோம்‌”

இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்மவணி தெரிவித்துள்ளார்.

FEFSI seeks lock down relaxation RK Selvamani request to Chief Minister

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.. ராஷி கண்ணாவே சொல்லிட்டாங்க.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.. ராஷி கண்ணாவே சொல்லிட்டாங்க.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rashi Khanna to romance with Suriya in Aruvaaஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளவர் ராஷி கண்ணா.

இவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

‘சூரரைப் போற்று’ படத்தை முடித்துவிட்டு ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

அந்த படத்தில் தான் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறாராம்.

தனது சமூக வலைதளத்தில் ராஷி கண்ணா ரசிகர்களுடன் சாட்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது “உங்களுடைய அடுத்த படங்கள்” என்று ரசிகர் கேள்வி எழுப்பினார்.

தமிழில் ‘அரண்மனை 3’ மற்றும் சூர்யா – ஹரி இணையும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Rashi Khanna to romance with Suriya in Aruvaa

எத்தனை கோடிகளை கொட்டினாலும் ரசிகர்களை ஏமாற்றாத ‘மாஸ்டர்’ ப்ளான்

எத்தனை கோடிகளை கொட்டினாலும் ரசிகர்களை ஏமாற்றாத ‘மாஸ்டர்’ ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Vijay refuse to release Master in OTT platformsகடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியை மாஸ்டர் படம் ரிலீசாகவிருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கால் மக்களும் வணிகமும் முடங்கியுள்ளது.

எனவே சில சினிமா தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ஆன்லைன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மக்களும் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருப்பதால் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அமோக லாபம் பார்க்க அமேசான் பிரைம் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளரை அணுகி அந்த படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க முயற்சித்துள்ளதாம்.

ஆனால் தயாரிப்பாளர் விஜய்யிடம் கலந்து ஆலோசித்து விட்டே முடிவு சொல்வதாக சொல்லியிருந்தாராம்.

எத்தனை கோடிகளை கொட்டி கொடுத்தாலும் ஓடிடி பிளாட்பாரத்தில் ’மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம்.

என் ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்த்து ரசித்து கொண்டாட தான் நான் படம் நடிக்கிறேன். அவர்களை ஏமாற்ற மாட்டேன்” என உறுதியாக விஜய் மறுத்துவிட்டாராம்.

Why Vijay refuse to release Master in OTT platforms

அஜித் கூட ஆல்ரெடி நடிச்சிட்டோம்ல.; தல ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா மிதுன்

அஜித் கூட ஆல்ரெடி நடிச்சிட்டோம்ல.; தல ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meera Mithun reveals that she already acted with Ajithநடிகர் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா? என பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நான் ஆல்ரெடி அஜித் கூட நடிச்சிட்டேன் என ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

நாம தல படத்தை ஒரு படம் விடாம பாத்துருக்கோம்.. இந்த நடிகை எந்த படத்தல நடிச்சாங்க அப்படின்னு தல ரசிகர்களுக்கே ஷாக்கான விஷயம் ஆகிவிட்டது.

‘என்னை அறிந்தால்’ படத்தில் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய காட்சி படத்தில் இடம்பெறவில்லை எனக் கூறி அந்த காட்சி போட்டோவை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun reveals that she already acted with Ajith

லாக் டவுன் சூட்டிங்; கௌதம் சொல்ல சொல்ல தன்னை இயக்கிய த்ரிஷா

லாக் டவுன் சூட்டிங்; கௌதம் சொல்ல சொல்ல தன்னை இயக்கிய த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha and Gautam menon team up again even in lock down கொரோனா ஊரடங்கில் மக்களை வீட்டிலேயே வைத்திருக்க பல பல யுக்திகளை சினிமா கலைஞர்கள் செய்து வருகின்றனர்.

வெளியே செல்லாமல் மொபைலில் சூட்டிங் நடத்தி எடிட்டிங் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அண்மையில் ஃபேமிலி என்ற குறும்படத்திற்காக அமிதாப், ரஜினி, மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் வீட்டிலேயே இருந்து நடித்து கொடுத்தனர். பின்னர் எடிட்டர் அந்த வீடியோக்களை இணைத்து வெளியிட்டார்.

அந்த குறும்படத்தின் மூலம் கிடைத்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர்.

அதுபோல் கமல்ஹாசனும் அன்பும் அறிவும் என்ற பாடலை தங்கள் வீட்டில் இருந்தபடியே பல பாடகர்களை அவர்களை வைத்து இயக்க சொல்லி அந்த பாடலை வெளியிட்டார்.

தற்போது இயக்குனர் கௌதம் மேனன் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் த்ரிஷா நடித்துள்ளார்.

வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு ஆக்டிங்கை கௌதம் சொல்ல சொல்ல அதை த்ரிஷா செய்துள்ளார்.

இதை ட்விட்டரில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதை த்ரிஷா படமாக்கி எடிட்டிங்கிற்காக அனுப்பியுள்ளார்.

விரைவில் இக்குறும்படம் வெளியாகும் என தெரிகிறது.

Trisha and Gautam menon team up again even in lock down

பிக்பாஸ் 4 சீசனுக்கு தயாராகும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் 4 சீசனுக்கு தயாராகும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Ramya Pandiyan is a part of Bigg Boss season 4பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தொடங்கிய போது அவருக்கு சினிமாவில் வாய்ப்பில்லை என்று பலரும் விமர்சித்தனர்.

ஆனால் பிக்பாஸ் சீசன் 1, 2, 3 என 3 எபிசோடுகளை கடந்து விட்டது. தற்போது கமலை தவிர யாரும் அதை சிறப்பாக வழங்கிவிட முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக சூட்டிங் தொடங்கப்பட உள்ள நாட்கள் தெரியவில்லை.

ஆனால் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நிச்சயம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி உறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் தன் இடுப்பழகை காட்டி இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்தவர் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Will Ramya Pandiyan is a part of Bigg Boss season 4

More Articles
Follows