தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இதனால் சினிமா சூட்டிங் மற்றும் தியேட்டர்கள் திறக்க தடை விதிக்கப்ட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.
நாளை செப்டம்பர் 1 முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமுலுக்கு வருகிறது.
இதில் 75 பேருடன் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
ஆனாலும் திரையரங்குள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் திரையுலகினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால் இந்த ஆறு மாத காலத்தில் திரையுலகம் 2 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார்.
மேலும் இந்த பொது முடக்கத்தால் பெப்சி தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், டெக்னிசியன்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.