தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.
ஒரு படத்திற்கு மட்டும் கிட்டதட்ட 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறாராம் இவர்.
இவர் நடிக்கும் படம் தொடர்பான எந்த ஒரு நிகழ்விலும் இவர் கலந்துக் கொள்வதில்லை. இதை என்னவோ எல்ஐசி பாலிசி போல கடைப்பிடித்து வருகிறார்.
ஆனால் நகை கடை திறப்பு விழா, தன் காதலனுடன் ஊர் சுற்றுதல் என ஜாலியாக இருக்கிறார்.
இவரை நம்பியே எடுக்கப்பட்டு வெளியான மாயா பட நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளவில்லை.
அன்றைய தினம் இவர் சேலத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார் என்பது தனிக்கதை.
அண்மையில் நடைபெற்ற சைரா, பிகில், தர்பார் உள்ளிட்ட இவரின் படங்களின் எந்த விழாவிலும் இவர் கலந்துக் கொள்ளவில்லை.
கோடிகளில் சம்பளம் வாங்குபவர் இவரின் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று இவரது ரசிகர்களை கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தனியார் டிவி 2020 விருது நிகழ்ச்சயில் கலந்துக் கொண்டார்.
சினிமாவில் நடித்தால்தானே விருது கிடைக்கும். அந்த பட விழாக்களில் கலந்துக் கொள்ளாத நயன்தாரா விருது நிகழ்ச்சியில் மட்டும் ஏன் கலந்துக் கொள்கிறார்? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Fans slams Nayanthara for participating in Cinema award events