தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா

தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது.

1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசியவிருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார்.

இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி இருக்கிறார். பொதுவாக ரசிகர்கள் கைதட்டுவார்கள் சில பேர் பால் அபிஷேகம் செய்வார்கள் ஆனால் இவரோ பாராட்டு விழா நடத்துகிறார் என்றால் சுசீலா அவர்களின் புகழ் வானுயர்ந்ததே. மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு இத்தனை கோடியா.?

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு இத்தனை கோடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை பலரும் படமாக்க உள்ளனர் என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

மிஷ்கினின் உதவி பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஐயர்ன் லேடி என்ற பெயரில் படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.

சசிகலா கேரக்டரில் வரலட்சுமி நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர்கள், பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோரும் ஜெயலலிதா படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

இதில் இயக்குனர் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவி படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவுள்ளது.

மக்கள் செல்வனை சங்கத் தமிழனாக மாற்றும் விஜய்சந்தர்

மக்கள் செல்வனை சங்கத் தமிழனாக மாற்றும் விஜய்சந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)நம் கை மற்றும் கால் விரல்களை சேர்த்தால் கூட விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை எண்ணிவிட முடியாது.

தினம் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டும் சில இயக்குனர்களிடம் ஒப்புக் கொண்டும் வருகிறார்.

தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடிக்க, சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

எம்.பிரபாகரன் கலையை கவனிக்க பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனித்து வருகிறர்.

ன்றனர்.

முதல்கட்ட சூட்டிங்கை முடித்த படக்குழுவினர் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

சூர்யா 38 படம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஜிவி. பிரகாஷ்

சூர்யா 38 படம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள `என்ஜிகே’ வருகிற மே 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது-

தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதனை தொடர்ந்து விரைவில் `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சூர்யாவே தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த தகவலை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆடியோ இறுதி வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு அடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள பட அறிவிப்பையும் அண்மையில் அறிவித்தனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சூட்டிங்கை இந்தாண்டு ஜூலையில் தொடங்கவுள்ளனர்.

தற்போது முதற்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் தெலுங்கில் ஹிட்டான கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கெனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் ராஷ்மிகா தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.

தென்சென்னையை மீண்டும் தன் வசமாக்கும் Dr ஜெ.ஜெயவர்தன் MP?

தென்சென்னையை மீண்டும் தன் வசமாக்கும் Dr ஜெ.ஜெயவர்தன் MP?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updatesவருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

மேலும் 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் தமிழகத்தை இந்திய அரசியலே உற்று கவனித்து வருகிறது.

இந்நிலையில் தென் சென்னை தொகுதி மற்றும் அதன் வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன் குறித்து காண்போம்.

கடந்த 2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன.

இந்த தொகுதியில் 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திரு சி ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின்னர் கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அப்போது தமிழத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது.

அச்சமயம் டாக்டர் ஜெயவர்தன் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் வசித்து வருகிறார்.

இவர் 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.

தற்போது இந்த 2019 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மீண்டும் அதே வெற்றி உற்சாகத்துடனும் களம் காண்கிறார்.

தென் சென்னை தொகுதி மக்களிடம் எந்த கெட்ட பெயரும் வாங்காமல் நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் இவர்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

இளம் வேட்பாளரும் அடிப்படையில் மருத்துவருமான Dr. ஜெ.ஜெயவர்தன் M.P அவர்களுக்கா? அல்லது தொகுதிக்கு அறிமுகமே இல்லாத தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கா? என்பதை சில நாட்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது என கள ஆய்வு செய்யும் நிபுணரிடம் கேட்டபோது…

“தென்சென்னையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இரண்டு மாபெரும் தலைவர்களும் இல்லாமல் தமிழகத்தின் பிரதான இருபெரும் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

தென்சென்னையை பொறுத்தவரை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி கெட்டபெயர் எதுவும் எடுக்காமல் தொகுதிக்கு அறிமுகமான Dr. ஜெ. ஜெயவர்தனுக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை.

ஆனால் திமுகவை பொறுத்தவரை அவர்களுது வேட்பாளருக்கே முதலில் அறிமுகம் தேவை.” என்றனர்.

1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட திரு ஆர் வெங்கட்ராமன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் (1910-2009) பணியாற்றினார் என்பது கூடுதல் தகவல்..

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updates

Current MP Dr J Jayavardhan with TN CM EPS

More Articles
Follows