தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரியில் அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை.
பதவிக்காக பேரம் பேசி காலத்தை கடத்துகிறார்கள். அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர்,
“பெட்ரோல் டீசல் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதுதான் அதற்கு காரணம்.
ஆனால் அவர்கள் மாநில அரசுகளின் மேல் பழி போடுகிறார்கள். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக விற்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் ஏழைகள் வயிற்றில் அடித்து விலை உயர்த்தப்படுகிறது.
அதனால் கலால் வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் கொரோனா தொற்ற கட்டுப்படுத்த ஊரடங்கை படிப்படியாக குறைக்க வேண்டும்.
புதிய அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காக பேரம் பேசி காலத்தை கடத்துகிறார்கள். மக்களை கைவிட்டுவிட்டார்கள்.
அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை. மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்காக சண்டை போடுகிறார்கள்.
தேர்தலின்போது புதுச்சேரியை நிதிக் கமிஷனில் சேர்ப்போம், மில்களை மீண்டும் இயக்குவோம் என பா.ஜ.க பல தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் தற்போது நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
Ex cm Narayanasamy slams new government