‘தப்பாட்டம்’ தந்த தாறுமாறு வைரல்… எலான் மஸ்க் போஸ்ட்.. குஷியில் துரை சுதாகர்

‘தப்பாட்டம்’ தந்த தாறுமாறு வைரல்… எலான் மஸ்க் போஸ்ட்.. குஷியில் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தப்பாட்டம்’ தந்த தாறுமாறு வைரல்… எலான் மஸ்க் போஸ்ட்.. குஷியில் துரை சுதாகர்

ஜூன் 11… காலையில் இருந்தே போன்கால்ஸ் வந்து.கொண்டே இருக்கிறது.

2017ல் வெளியான ‘தப்பாட்டம்’ படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம்.

குறிப்பாக ‘தப்பாட்டம்’ என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம்.
தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது.

அதன் விளைவால் தான் ‘களவாணி 2’, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

இன்று ஜூன் 11 எலான் மாஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்த பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும்.

எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.

நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டு இருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி…

Durai Sudhakar

Durai Sudhakar happy with Elan musk post of Thappattam

தனுஷூடன் கிரிக்கெட்.. அஜித்தின் வரலாறு.. மகாராஜா என் பாக்கியம்.. – விஜய்சேதுபதி

தனுஷூடன் கிரிக்கெட்.. அஜித்தின் வரலாறு.. மகாராஜா என் பாக்கியம்.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷூடன் கிரிக்கெட்.. அஜித்தின் வரலாறு.. மகாராஜா என் பாக்கியம்.. – விஜய்சேதுபதி

*நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நடிகர் வினோத்…

“‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.

அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும் நன்றி”.

எடிட்டர் ஃபிலோமின்ராஜ்…

“இந்தப் படம் ஒரு பஸூல் போல தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்”.

நடிகை அபிராமி…

“விஜய்சேதுபதியின் 50வது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி”.

இயக்குநர் நித்திலன்…

“என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி சார் தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை மம்தா மோகன்தாஸ்…

“‘எனிமி’ படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட ‘மகாராஜா’ படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது சார் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது…

ராமோஜிராவ் மரணம் அடைந்த செய்தி கேட்டேன்.. அவருக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை.. ஆனால் புதுப்பேட்டை பட ஷூட்டிங் சமயத்தில் நான் ராமோஜிராவ் அரங்கத்திற்கு சென்று இருந்தேன்.. அங்கு பிரம்மாண்ட அதிசயங்களை கண்டேன்.

ராமோஜிராவின் கற்பனை வளத்தை கண்டு வியந்தேன்.. ஒரு மனிதனால் எப்படி இந்த கற்பனைகளை உருவாக்க முடிந்தது என்று எண்ணி வியந்தேன்.. அங்கு சேரி பகுதி இருந்தது. அரண்மனை இருந்தது.. ஹோட்டல் இருந்தது. நாம் நினைக்கும் எல்லாம் இருந்தது.

எங்களுடைய கற்பனைகளுக்கு அவர் உருவம் கொடுத்திருந்தார். அங்கு நான் செல்வராகவன் தனுஷ் கிரிக்கெட் விளையாடினேன். அஜித் நடித்த வரலாறு படத்தில் ஷூட்டிங் அங்கு நடைபெற்றது. அப்போது தூரத்தில் இருந்து அஜித்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்று எனக்கு கனவு பாரம் நிறைய இருக்கிறது.. அதனால் தூக்கம் குறைந்துவிட்டது.. அன்றெல்லாம் எப்போது வேண்டுமானாலும் நிறைய நேரம் தூங்குவேன்.. அங்கு அந்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. அவரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இயக்குனர் நித்திலன் மகாராஜா பட கதையை சொல்லும்போது அவரின் குரங்கு பொம்மை படத்தைக் கூட நான் பார்க்கவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்பு தான் அந்த படத்தை பார்த்தேன்.. ஒரு இயக்குனராக அவர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.

எனக்கு 25வது படமாக சீதக்காதி படம் அமைந்தது.. அந்த படம் கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம்.. அதுபோல தற்போது மகாராஜா படம் என 50வது படமாக அமைந்துள்ளது. இதற்கும் மகிழ்ச்சி..

நான் ஹீரோவாக நடித்து பிறகு சில படங்களில் வில்லனாக நடித்த அதற்காக நான் இறங்கி வந்து விட்டேன்.. அல்ல எந்த வேடம் என்றால் நான் ஏற்க தயாராக இருக்கிறேன்.. ஒரு வட்டத்திற்குள் சிக்கல் விரும்பவில்லை.

இந்தப் படத்தில் பாய்ஸ் மணிகண்டன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.. அவர் சிறந்த நடிகர் அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் துபாய் நாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தபோது பாய்ஸ் மற்றும் பைவ் ஸ்டார் படங்களுக்கு என் போட்டோவை அனுப்பி இருந்தேன்.. இதை நான் சித்தார்த்திடமும் சொல்லி இருக்கிறேன்..

எனக்கு ஆரம்பப் புள்ளி வைத்த அருள் தாஷை என்னால் மறக்க முடியாது.. என் மகாராஜா 50 வது படமாக இருக்கும் இந்த நிலையில் அவரை நான் நினைத்துப் பார்க்கிறேன்.. எனக்கு வாழ்வு அளித்த மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் பத்திரிக்கையாளர்கள் ரசிகர்கள் இயக்குனர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் எனக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாய்ப்பு கொடுத்தார்.. அப்போது என்னை யாரும் நம்பவில்லை.. என்னுடைய உறவினர்கள் ஏன் நானே என்னை நம்பாத காலத்தில் என்னை நம்பி எனக்கு நாயகன் வேடம் கொடுத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி சீனு ராமசாமி அவருக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Vijaysethupathi open talk about his life in Maharaja meet

பிதா அன்மாஸ்கிங் இனி ட்ரெண்டாகும்.. அரசியலை விட சினிமாவில் அரசியல் அதிகம்.; பிரபலங்கள் பேச்சு

பிதா அன்மாஸ்கிங் இனி ட்ரெண்டாகும்.. அரசியலை விட சினிமாவில் அரசியல் அதிகம்.; பிரபலங்கள் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிதா அன்மாஸ்கிங் இனி ட்ரெண்டாகும்.. அரசியலை விட சினிமாவில் அரசியல் அதிகம்.; பிரபலங்கள் பேச்சு

பிதா திரைப்பட அறிவிப்பு விழா  

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது…

மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும்.  எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி  நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது,  கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள்

இயக்குநர் சரவணன் சுப்பையா பேசியதாவது…
இப்படத்தின் தயாரிப்பாளர் நிறையப் படம் செய்துள்ளார். பல படங்கள் செய்யும் நிலையில் இந்தப்படத்தைத் தயாரிக்கக் காரணம் இந்தக்கதை தந்த இம்பாக்ட் தான். இந்தக்கதையை உருவாக்கிய கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

இயக்குநர் சரண் பேசியதாவது…
பிதா அன்மாஸ்கிங். இந்த அன்மாஸ்கிங் என்பது இனிமேல் தமிழ் சினிமாவில் டிரெண்டாக இருக்கும். ஒரு தயாரிப்பாளர் ஹீரோவாக களமிறங்குகிறார். கார்த்திக் குமார் இயக்குகிறார் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே நான் வந்துள்ளேன். படத்தின் காட்சிகள் பார்த்தேன் வனிதாவையே கட்டுப்போடுட்டு விட்டார்கள் என்றால் இவர்கள் ரசிகர்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக உள்ளது. பெரிய நம்பிக்கை தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

K R வெங்கடேஷ் பேசியதாவது…
அனைத்து பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிதா எனும் பெயரில் இன்னொரு படம் வருவதாகச் சொன்னார்கள். ஒரு தொகுதியில் ஜெயிக்க கூடிய கேண்டிடேட் பேரில் 10 கேண்டிடேட் போடுவார்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள மதி மிகப்பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  

திருமதி சுந்தரவள்ளி பேசியதாவது…
தமிழ் நாட்டில் அதிக படம் பார்த்த ஆட்களில் ஒரு ஆள் நான். தமிழ் சினிமா இப்போது இளைஞர்கள் கையில் சென்றுள்ளது. மறுக்கப்பட்ட கதைகளை, தவிர்க்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்தி இந்திய அளவில் எடுத்துச் செல்லும் சினிமாக்கள் வருகிறது. இப்படமும் இளைஞர்களால் உருவாகியுள்ளது. எனக்கு டிரெய்லர் பிடித்திருந்தது. காட்சிகள் இசை எல்லாம் நன்றாக உள்ளது. இப்படம் நல்ல கருத்தைச் சொல்லும் என நம்புகிறேன். கதையின் நாயகன் மதியழகன், தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நன்றி.

நடிகர் குணா பேசியதாவது
மண்டியிட்டு வாழ்வதைவிட சண்டையிட்டு சாவதே மேல் என்ன சொன்னான் என் அண்ணன் வேலு பிரபாகரன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கான காரணம் அண்ணன் வேலு பிரபாகரன் தான்.  இந்த படைப்பைத் தம்பி கார்த்திக் நன்றாக எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன்.   தயாரிப்பாளர் மதியழகன் பல திரைப்படங்களை எடுத்துள்ளார், அவர் சமீபத்தில் எடுத்த சாமானியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் இந்த வீடு பேங்கினுடையது உங்களுடையது அல்ல என,  மக்களிடம் கொள்ளையடிக்கும் பேங்க் பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த கதையை எழுதியவர் தான் கார்த்திக். அவரை வைத்து இப்போது மதியழகன் நடித்து எடுத்திருக்கும் படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

நடிகர்  மணிகண்டன் பேசியதாவது…
பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாகச் செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்.

பாபி மாஸ்டர் பேசியதாவது…
மதி சாருக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. அவரெடுத்த எல்லாப்படத்திலும் நான் இருப்பேன். அவரது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை எப்போதும் முழுமையாக நம்புபவர் அவர். மதி சாரின் எல்லாப்படங்களிலும் என் பங்கு இருக்கும். ஒரு நல்ல ஹீரோ சினிமாவுக்கு அறிமுகமாகிறார் அவர் பெரிய உயரம் செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

திருமுருகன் காந்தி பேசியதாவது…
திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது.  அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது..
டிரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரை பிரபலங்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்த பாராட்டை மனதில் வைத்து நல்ல திரைக்கதையை அமைத்துப் படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். இப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.  

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது…
 எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும் ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும்.  எக்ஸாம் தோல்வி  அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட்   என்ற நிலை இப்போது இருக்கிறது ஆனால் அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள்  வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை அது உங்களை வந்தடையும்.  இப்படம் கதை எனக்குப் பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையைச் செய்தேன்.  இந்தப்படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன் எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது…

இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.. இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள்.

ஆனாலும் கடைசி படம் (சாமானியன் ) பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம்.

இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள் நன்றி.

இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது..
எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது..
நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.  நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள்.

சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை.. நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர்கள் : V மதி, வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா மற்றும் பலர்

தொழில் நுட்ப குழு
எழுத்து இயக்கம் : V கார்த்திக் குமார்
தயாரிப்பாளர்: D பால சுப்ரமணி & C சதீஷ் குமார்
பேனர்: ஸ்ரீனிக் தயாரிப்பு
கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ்
இசை: ரஷாந்த் அர்வின்
ஒளிப்பதிவாளர்: பிராங்க்ளின் ரிச்சர்ட்
எடிட்டர் & கலரிஸ்ட் : MS.பாரதி
பாடல் வரிகள் – மதன் கார்க்கி, விவேக், விஜேபி ரகுபதி
வணிக நிர்வாகி: உமாபதி ராஜா
கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன்
ஸ்டண்ட் டைரக்டர்: கனல் கண்ணன், ஸ்டன்னர் சாம்
ஆடை வடிவமைப்பாளர் – பவித்ரா சதீஷ்
ஆடை: SP சுகுமார்
ஒப்பனை: ரஷ்யா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

Mathi starrer Pitha unmasking event Celebrities Speech

பிரபல யூடியுபர் நடிகர் VJ ரவி காதல் திருமணம்.; மணப்பெண் யார்.?

பிரபல யூடியுபர் நடிகர் VJ ரவி காதல் திருமணம்.; மணப்பெண் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல யூடியுபர் நடிகர் VJ ரவிக்குமார் காதல் திருமணம்.; மணப்பெண் யார்.?

யூடியுப் சேனல்களில் பிரபலமானவர் விஜே ரவிக்குமார். இவரது நடிப்பில் உருவான வெப் சீரியல்கள் டியூப் லைட் மற்றும் செக்மேட் என்ற சேனல்களில் வெளியானது..

இவரது நடிப்பில் உருவான நிறைமாத நிலவே மற்றும் காதலே காதலே உள்ளிட்ட தொடர்கள் இணையதள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

தற்போது ‘மன்னிப்பாயா’ மற்றும் ‘நிரா’ வலைத்தொடர்களில் ரவி நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். இவருக்கென ரசிகை கூட்டமும் உள்ளது.

இதில் செக்மேட் என்ற யூடியுப்பில் ஒளிபரப்பாகி வரும் நிரா என்ற வெப்சீரியலை ரவி இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதில் திரைப்பட நடிகை வெண்பா ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார் வி ஜே ரவி.

புதுமுக இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரவி.. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் விக்ரம் பிரபு நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரவி.

இந்த நிலையில் வருகிற ஜூன் பத்தாம் தேதி சென்னை போரூரில் இவரது திருமணம் நடைபெற உள்ளது.

சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்த இவர் பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடிக்க உள்ளார். இது தொடர்பான வீடியோவை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Youtuber Actor VJ Ravi marriage news

புது படம் ‘பித்தல மாத்தி’ ரிலீஸ்..; மகிழ்ச்சியில் புது மாப்ள உமாபதி ராமையா

புது படம் ‘பித்தல மாத்தி’ ரிலீஸ்..; மகிழ்ச்சியில் புது மாப்ள உமாபதி ராமையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புது படம் ‘பித்தல மாத்தி’ ரிலீஸ்..; மகிழ்ச்சியில் புது மாப்ள உமாபதி ராமையா

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜூன் மாதம் 11ம் தேதி திரு உமாபதி ராமையா வின் திருமணம் நடைபெற உள்ளது. இதே மாதம் 14ம் தேதி வெளியாகும் இந்த பித்தளை மாத்தி திரைப்படம் வெற்றி பெற்று அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம் .

Umapathys PithalaMathi releasing on 14th June 2024

ரொமான்டிக் சித்தார்த்தை ‘மிஸ் யூ.’ சொன்னீங்களா.? இனிமே சொல்ல மாட்டீங்க

ரொமான்டிக் சித்தார்த்தை ‘மிஸ் யூ.’ சொன்னீங்களா.? இனிமே சொல்ல மாட்டீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரொமான்டிக் சித்தார்த்தை ‘மிஸ் யூ.’ சொன்னீங்களா.? இனிமே சொல்ல மாட்டீங்க

*மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் நிறுவனம் ‘7 MILES PER SECOND’.
இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதன் முதலாக பட தயாரிப்பில் இறங்குகிறார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார். ‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் இந்த காதல் கதையை ‘மிஸ்’ பண்ணாமல் நடிக்க ஒத்து கொண்டுள்ளார் சித்தார்த்.

இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாக உருவாக்கியுள்ளார் டைரக்டர் .

ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர்.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குனரோடு திரைக்கதை அமைத்துள்ளார்.

இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் காதலித்து ரசித்து பார்த்த ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம்.

பாடல்கள்: மோகன் ராஜன் & ரோகேஷ்
கலை: சிவசங்கர்
சண்டைப் பயிற்சி: தினேஷ் காசி

Siddharth and Aashika starring Miss You movie

More Articles
Follows