தமிழக அரசின் வரியால் சினிமா டிக்கெட் விலை ரூ. 200ஐ தொட்டது

தமிழக அரசின் வரியால் சினிமா டிக்கெட் விலை ரூ. 200ஐ தொட்டது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Due to Tamailnadu Local body Entertainment Tax Cinema Ticket rate crossed Rs 200கடந்த ஜீலை மாதம் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமுலுக்கு வந்தது.

இதனால் சினிமா டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டது. அப்போது தமிழக அரசின் வரி மட்டும் எதிர்ப்பை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

அண்மையில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதற்கு மீதான 10 சதவீத கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழக அரசின் இந்த வரி விதிப்பை முற்றிலும் விலக்கும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர திரையுலகத்தை சேர்ந்த அமைப்புகள் முதல்வரை சந்திக்க அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில் தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் 25% வரை டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.

இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.150, குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி ரூ.150 (தமிழக அரசின் கேளிக்கை வரி சேர்த்து) + ஜிஎஸ்டி (ரூ.42)=ரூ.192 சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

இத்துடன் ஆன்லைன் புக்கிங் சார்ஜ்ஜை சேர்த்தால் ரூ. 225 தொடுகிறது.

இந்த புதிய விலை உயர்வு வருகிற திங்கட்கிழமை அதாவது அக்டோபர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனால் திரையுலகினரும் சினிமா ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Due to Tamailnadu Local body Entertainment Tax Cinema Ticket rate crossed Rs 200

ticket rate

பாலாஜி சக்திவேல்-விஜய் மில்டன் கூட்டணியில் சுபிக்ஷா

பாலாஜி சக்திவேல்-விஜய் மில்டன் கூட்டணியில் சுபிக்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

??????????????????????????????????????காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல்.

இதனையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ‘ரா.. ரா.. ராஜசேகர்’ என்ற படத்தை இயக்கினார்.

ஆனால் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விஜய் மில்டனின் ’ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் பாலாஜி சக்திவேல்.

யார் இவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கடுகு படப்புகழ் நாயகி சுபிக்ஷா நாயகியாக நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு மாநகரம் படப்புகழ் ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார்.

Subiksha teams up with Balaji Mohan and Vijay Milton Project

மாரி2 படத்தில் தனுஷுடன் இணையும் மற்றொரு ஹீரோ

மாரி2 படத்தில் தனுஷுடன் இணையும் மற்றொரு ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush maari2015ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாரி படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது மாரி 2 படத்தை இயக்கவுள்ளார் பாலாஜிமோகன்.

இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

இந்நிலையில் இதில் மற்றொரு ஹீரோவும் இணையவுள்ளராம்.

அவர் நடிகர் கிருஷ்ணா என்பதை இயக்குனரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் உடன் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி என கிருஷ்ணாவும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Krishna teams up with Dhanush for Maari 2

krishna in maari 2

 

மீண்டும் கார்த்தியுடன் டூயட் பாடும் ஸ்பைடர் நாயகி

மீண்டும் கார்த்தியுடன் டூயட் பாடும் ஸ்பைடர் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Theeran Adhigaram Ondru movie Karthi Rakul Preet Singh teams up againவினோத் இயக்கத்தில் உருவாகும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் கார்த்தி.

எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படத்தில் ஸ்பைடர் பட புகழ் ரகுல் ப்ரீத்சிங் நடித்து வருகிறார்.

இப்படம் நவம்பர் 17-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

இந்த இரு படங்களை தொடர்ந்து ராஜத் இயக்கவுள்ள ஒரு படத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

After Theeran Adhigaram Ondru movie Karthi Rakul Preet Singh teams up again

8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு கிடைத்த யு/ஏ சர்ட்டிபிகேட்

8 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு கிடைத்த யு/ஏ சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After 8 years Vijay movie got UA certificate in censorபெரும்பாலும் விஜய் நடித்த படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

இதனால் விஜய்க்கு பெண் ரசிகைகளும் அதிகம்.

எனவே விஜய் படமும் சென்சாரில் யு சர்ட்டிபிகேட் பெறும் வகையிலே உருவாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இவரது மெர்சல் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

இது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இவரது படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டு வேட்டைக்காரன் படத்திற்கு யு/ஏ கிடைத்தது.

அதன்பின்னர் வெளியான சுறா, காவலன், வேலாயுதம்… முதல் புலி, தெறி, பைரவா வரை யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

After 8 years Vijay movie got UA certificate in censor

மெர்சலுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; விஜய் ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

மெர்சலுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; விஜய் ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal censored with UA certificateஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெர்சல்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.

இப்படம் அக். 18ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பியிருந்தனர்.

இதற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஜய் படங்கள் பெரும்பாலாவை யு சான்றிதழை பெற்றிருந்தது.

ஆனால் மெர்சல் படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு குறைவு இருக்காது என இயக்குனர் அட்லி தெரிவித்திருந்தார்.

எனவேதான் இப்படத்திற்கு யு/ஏ கிடைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த யு/ஏ எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mersal censored with UA certificate

More Articles
Follows