தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜீலை மாதம் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமுலுக்கு வந்தது.
இதனால் சினிமா டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டது. அப்போது தமிழக அரசின் வரி மட்டும் எதிர்ப்பை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
அண்மையில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதற்கு மீதான 10 சதவீத கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழக அரசின் இந்த வரி விதிப்பை முற்றிலும் விலக்கும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர திரையுலகத்தை சேர்ந்த அமைப்புகள் முதல்வரை சந்திக்க அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில் தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் 25% வரை டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.150, குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்துள்ளது.
இதன்படி ரூ.150 (தமிழக அரசின் கேளிக்கை வரி சேர்த்து) + ஜிஎஸ்டி (ரூ.42)=ரூ.192 சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
இத்துடன் ஆன்லைன் புக்கிங் சார்ஜ்ஜை சேர்த்தால் ரூ. 225 தொடுகிறது.
இந்த புதிய விலை உயர்வு வருகிற திங்கட்கிழமை அதாவது அக்டோபர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனால் திரையுலகினரும் சினிமா ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Due to Tamailnadu Local body Entertainment Tax Cinema Ticket rate crossed Rs 200