பெப்சிக்கு நிதி குவியுது.; ஆனா 15000 தியேட்டர் ஊழியர்களை கண்டுக்கல.. விநியோகஸ்தர் விரக்தி

பெப்சிக்கு நிதி குவியுது.; ஆனா 15000 தியேட்டர் ஊழியர்களை கண்டுக்கல.. விநியோகஸ்தர் விரக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Distributor talks about FEFSI and theatres staffs கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளது.

இதில் கோடிகளில் புரளும் சினிமாவும் அடங்கும்.

எனவே தங்கள் துறை சார்ந்தவர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஆனால் முற்றிலும் வேலையிழந்துள்ள தியேட்டர் ஊழியர்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என நெல்லை, துாத்துக்குடி மாவட்ட வினியோகஸ்தர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

”பெப்சி உறுப்பினர்களில் சிலர் வசதியாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கு தான் லட்சம், கோடி என நிதிகள் குவிகிறது.

அவர்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ‘பெப்சி’ அமைப்பினர் வேலை நிறுத்தம் செய்வர். அதனாலேயே அவர்களுக்கு நிதி கிடைத்து விடுகிறது.

ஆனால் தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

வேலையிழந்து நிற்கும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Distributor talks about FEFSI and theatres staffs

அந்த காட்சியில நடிக்க விஜய் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ..? புலம்பும் ரவீனா

அந்த காட்சியில நடிக்க விஜய் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ..? புலம்பும் ரவீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dubbing Artist Raveena talks about Master and Vijays Character சினிமாவில் நாம் ரசிக்கும் பல ஹீரோயின்களுக்கு குரல் வளம் அழகாக இருப்பதில்லை. சிலருக்கு தமிழ் மொழியே தெரியாது.

அவர்களுக்கு டப்பிங் கொடுத்து நம்மை ரசிக்க வைப்பவர்களில் ஒருவர் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி.

இவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கூட மாளவிகா மோகனனுக்கு ரவீனா தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மாஸ்டர் பட குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ரவீனா.

மாஸ்டர் படம் பார்த்தேன். வழக்கமான விஜய் படம் போல் மாஸாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.

ஆனால் சில காட்சிகளை பார்த்தபோது, விஜய் எப்படி தான் இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என்று நினைத்தேன்” என தெரிவித்துள்ளார் ரவீனா.

Dubbing Artist Raveena talks about Master and Vijays Character

நடிகை பிரகதிக்கு பாலியல் பிரச்சினை கொடுத்த காமெடியன்

நடிகை பிரகதிக்கு பாலியல் பிரச்சினை கொடுத்த காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pragathi recalls Comedy Actors misbehavior with her பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி.

விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரகதி கொடுத்துள்ள அண்மை பேட்டியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு காமெடியனை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில்…

காமெடி நடிகர் ஒருவர் நன்றாக பழகினார். ஆனால் நாளடைவில் அவரது பேச்சும் செயலும் சரியாக இல்லை.

எனவே அவரை கேரவனுக்குள் அழைத்து பேசினேன்.

தவறான முறையில் என்னை அணுக சிக்னல் கொடுத்தேனா? அல்லது எனது உடல் மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா?

சூட்டிங்கில் திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக சொல்கிறேன் என்றேன்.

அதன் பிறகு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை”. என பிரகதி தெரிவித்துள்ளார்.

அந்த காமெடியன் யாரோ? என்பது தெரியவில்லை.

Pragathi recalls Comedy Actors misbehavior with her

என் இனிய தமிழ் மக்களே… தனிமைப்படுத்தப்பட்டார் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே… தனிமைப்படுத்தப்பட்டார் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Director Bharathiraja quarantined him self தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் எவரும் எதிர்பாராத வகையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார்.

உடல் நலமில்லாமல் இருக்கும் தன் சகோதரியை பார்க்க சென்றுள்ளார்.

அந்த மாவட்ட எல்லையில் இயக்குனருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

கொரோனா தொற்று எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர்.

ஆனாலும் அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை சிவப்பு மண்டலத்தில் இருந்து பாரதிராஜா வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்களாம்.

Director Bharathiraja quarantined him self

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65; தமன் இசையில் 2021 தீபாவளிக்கு ரிலீஸ்

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65; தமன் இசையில் 2021 தீபாவளிக்கு ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65 movie set to release on Diwali 2021ரஜினியின் தர்பார் படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ படங்களைத் தொடர்ந்து இந்த கூட்டணி இணைகிறது.

சன் டிவி தயாரிக்கும் இந்த படம் ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஏஆர். ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என எதிர்பார்த்த நிலையில் தமன் இசையமைக்கிறார் என ஒரு தகவலும் வந்துள்ளது.

தமன் இசைக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல மார்கெட் உள்ளதால் முருகதாஸ் தமனை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 2021 தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Thalapathy 65 movie set to release on Diwali 2021

சம்பளம் வாங்கும் ரஜினி தயாரிப்பாளருக்கே அரிசி-பருப்பு கொடுப்பதா.?; புது சர்ச்சை

சம்பளம் வாங்கும் ரஜினி தயாரிப்பாளருக்கே அரிசி-பருப்பு கொடுப்பதா.?; புது சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini donation to Film Producers became controversy கொரோனா வைரஸ் பாதிப்பாலும் பல நாடுகளின் ஊரடங்காலும் ஒட்டுமொத்த உலகமே முடங்கியுள்ளது எனலாம்.

இதில் திரை உலகமும் விதிவிலக்கு அல்ல.

கோடிகளில் புரளும் சினிமாத் துறை இந்த ஊரடங்கால் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலிவடைந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ரஜினியினம் 750 + 250 தயாரிப்பாளர்களுக்கு 20 டன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்த செய்தியை நம் தளத்தில் முதன்முதலாக வெளியிட்டு இருந்தோம்.

தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் தயாரிப்பாளர் திருமலை என்பவரும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த உதவி தற்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…

தயாரிப்பாளர்கள் ரஜினியின் நிவாரணம் உதவி பெறுவது தன்மான இழுக்கு. அவர்கள் இதை பெற கூடாது.
வசதியான தயாரிப்பாளர்கள் மற்ற தயாரிப்பாளர்களுக்கு ரூ. 50000 அல்லது ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு தயாரிப்பாளர் சுரேஷ் என்பவர்… தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்குகிறவர் நடிகர் ரஜினி. அவரிடம் அரிசி பருப்பு வாங்குவது கேவலமானது. அது சரியானது அல்ல.

லாரன்ஸ் செய்த உதவியை போல அவர் பெரும் தொகையை கொடுத்திருக்கலாம். அதை தயாரிப்பாளர்கள் பிரித்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளரும் பாபு கணேஷ் அவர்கள் கூறியுள்ளதாவது…

ரஜினிகாந்த் இது போன்ற நிவாரணங்களை கொடுப்பதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டு ஒரு படத்தில் நடித்து கொடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Rajini donation to Film Producers became controversy

More Articles
Follows