தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஊடகவாதியான யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “காட்டுப்பய சார் இந்த காளி”.
ஜெய்வந்த் தயாரித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக அகிரா நடித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினார் யுரேகா.
யுரேகா பேசியதாவது…
வட மாநில இளைஞர்கள் தமிழ்நாட்டை ஆக்ரமித்துள்ளனர்.
தொடர்ச்சியாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.
எனவே சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும். ரெட் லைட் ஏரியா வந்தால் தான் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் குறையும்.
சிவப்பு விளக்கு பகுதி தமிழர்களுக்காக அல்ல. இங்கே வாழும் வடமாநில இளைஞர்களுக்காக கேட்கிறேன்..” எனப் பேசினார்.