‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்

‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

அவர் இயக்கும் 10-வது படமாக இது உருவாகவிருக்கிறது.

Director Venkat Prabus next movie update

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பட்ஜெட் படங்கள்.; முழு விவரம் இதோ..

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பட்ஜெட் படங்கள்.; முழு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடம் பொங்கல் சமயத்தில் விஜய்யின் ‘மாஸ்டர்’ & சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் ரிலீசானது.

இவையிரண்டும் தியேட்டருக்கு ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வரவழைத்தது.

பின்னர் சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.

இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில் தனுஷின் ‘கர்ணன்’ கார்த்தியின் ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி வெற்றி பெற்றன.

கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வந்தாலும் தியேட்டர்கள் திறப்பது என்பது இப்போது நடக்காத காரியம்.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

அந்த விவரம் வருமாறு…

காகித பூக்கள், உழைக்கும் கரங்கள், சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு , உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித்திருமகன்,
ஆகிய படங்கள் உட்பட 40 படங்கள் திரை அரங்குகள் திறக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கொரோனா பிரச்சினை முடிந்த உடன் படங்களை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து பேச வேண்டும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

40 Tamil Movies is ready for Theatrical release

வைரமுத்துக்கு கேரளாவில் விருது.. நடிகைகள் எதிர்ப்பு..; விருது பரிசீலனை.; விருது வேண்டாம் பணத்தை நிவாரணமாக கொடுப்பதாக கவிஞர் காமெடி

வைரமுத்துக்கு கேரளாவில் விருது.. நடிகைகள் எதிர்ப்பு..; விருது பரிசீலனை.; விருது வேண்டாம் பணத்தை நிவாரணமாக கொடுப்பதாக கவிஞர் காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவின் மிகவும் உரிய இலக்கியத்திற்கான விருதான ஓஎன்வி விருது வழங்கப்பட்டு வலுகிறது.

இந்த முறை தமிழ் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது.

எனவே முதல்வர் ஸ்டாலின் & தமிழ் திரையுலகினர் வைரமுத்துவை பாராட்டினர்.

இந்நிலையில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாடகி சின்மயி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.

இவருடன் மலையாள திரையுலகைச் நடிகை பார்வதி, இயக்குநர் அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

பல பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு கேரளாவின் ஓஎன்வி விருதை வழங்குவதா? என கண்டன குரல்கள் எழுந்தது.

இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.

இந்த முடிவுக்கு தமிழக பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓ.என்.வி. விருதை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விருதுப்பணம் 3 லட்சத்துடன் 2 லட்சம் சேர்த்து ரூ.5 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

விருதும் கொடுக்கல பணமும் கொடுக்கல.. அப்புறம் எப்படி திருப்பி கொடுப்பார் கவிஞர் வைரமுத்து..

Malayalam film industry had questioned the jurys decision to give the award to Vairamuthu, who has been accused of sexual harassment by many women..

JUST IN கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு – ஸ்டாலின்.; முழு தகவல்கள்

JUST IN கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு – ஸ்டாலின்.; முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த தொகை குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ரூ.5 லட்சம் வைப்புநிதியை, அவர்கள் 18 வயது பூர்த்தியான பின் எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது ரூ.5 லட்சம் வைப்புநிதி, வட்டித் தொகையோடு சேர்த்து வழங்கப்படும்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

“தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29-5-2021) தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு, அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும்,

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத் துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN CM Stalin announces ₹5 lakhs deposit to children orphaned by Corona

JUST IN நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா காலமானார்.; அவரை பற்றி ஒரு பார்வை..

JUST IN நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா காலமானார்.; அவரை பற்றி ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா 2வது அலையின் வீரியம் அதிகமாகி இருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 488 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த நிலையில் நடிகரும், விநியோகஸ்தரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார்.

இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு உயிரிழந்தார்.

வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன் வயது 58.

கடந்த 30 ஆண்டுகளில் சினிமா துறையில் பல்வேறு வடிவங்களில் பணியாற்றியுள்ளார்.

பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளார் வெங்கட் சுபா.

இவர், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்தவர்.

வெங்கட் சுபா நடித்த சீரியல்/படங்கள்..

SERIALS :
1. Priyamanavale Sun tv
2. Puthukavidhai Vijay tv
3. Kadaikuttu singam vijay tv
4. Thirumagal sun tv
5. Kana kaanum kaalangal vijay tv

MOVIES

1. Singam 3
2. Gorilla
3. Velainu vanthutta vellaikaran
4. Friendship
5. Naragasuran
6. Rum
7. Masala padam
8. Kadugu
9. Jaisimha ( Telugu )
10. Kasaba ( malayalam )
11. Desingu raja
12. Seedhakathi
13. Oru pakka kadhai

கடந்த சில நாட்களில் இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நகைச்சுவை நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, நிதிஷ் வீரா, நடிகர் அருண் காமராஜாவின் மனைவி சிந்துஜா, பாடகர் கோமகன், கில்லி பட புகழ் நடிகர் மாறன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Youtuber Venkat Suba passed away due to Corona.

#VenkatSubha #CoronaVirus #COVID19 #RIPVenkat

இம்சை அரசர்கள் : ரஜினி விக்ரம் சூர்யா நிப்பாட்டிட்டாங்க.. கமல் விஜய் சிம்பு எப்பவாச்சும் ஓகே.. அஜித் ரிஸ்க் எடுக்கல.. தனுஷ் சிவகார்த்திகேயன் அடங்கமாட்டாங்க.!

இம்சை அரசர்கள் : ரஜினி விக்ரம் சூர்யா நிப்பாட்டிட்டாங்க.. கமல் விஜய் சிம்பு எப்பவாச்சும் ஓகே.. அஜித் ரிஸ்க் எடுக்கல.. தனுஷ் சிவகார்த்திகேயன் அடங்கமாட்டாங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kollywood heroesகோலிவுட்டுல பாதி ஹீரோ இருக்காங்களே.. இந்த டைட்டில் பாத்தா ரொம்ப குழப்பமா இருக்கா..?? இல்ல புரிஞ்சுட்டா..

சரி விஷயத்துக்கு வருவோம்..

அண்மைக்காலமாக கோலிவுட் ஹீரோக்களே படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இவையில்லாமல் பாடல் எழுதுவது.. பாடலை அவர்களே பாடுவது என இம்சை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அதாவது பாடுவதாக நினைத்து பேசியே கொல்கின்றனர்.. ஹீரோக்களின் ரசிகர்கள் அதனை ரசிக்கலாம். ஆனால் பொதுஜனத்தின் நிலையை புரிந்து கொள்வார்களா.?

ரஜினிகாந்த் தன் 45 வருட சினிமா வாழ்க்கையில் மன்னன் & கோச்சடையான் ஆகிய 2 படங்களில் மட்டுமே பாடலில் தன் குரலை பதிவு செய்தார்.. அவருக்கே தெரிந்திருக்கும் போல.. அவர் அந்த ரிஸ்க்கை தொடரவில்லை.

கந்தசாமி & சாமி 2 படங்களில் விக்ரம் பாடுவதாக நினைத்து பேசினார்.

சூரரைப் போற்று படத்தில் பாடலின் நடுவே சூர்யாவும் வசனங்களை பேசினார்.

கமல் விஜய் & சிம்பு ஆகியவர்கள் பாடிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளன. ஆனாலும் அவர்கள் அதிகமாக பாடல்களை பாடுவதில்லை. சிம்பு அவ்வப்போது பாடி வருகிறார்.

அஜித் அந்த ரிஸ்க்கை இதுவரை எடுக்கவில்லை. ஜெய் ஒரு படத்தில் இந்த ரிஸ்க் எடுத்து ரசிகர்களை சோதித்தார்.

தனுஷ் & சிவகார்த்திகேயன் தங்கள் படங்களிலும் அடுத்தவர் படங்களிலும் பாடி வருகின்றனர். சில பாடல்கள் நிஜமாகவே சூப்பர் தான்.

ஆனால் எல்லா பாடல்களை பாட வேண்டும் என நினைப்பார்களோ என்னவோ.. அடிக்கடி பாடி இம்சைக்கின்றனர்.

இன்னா மயிலு என்ற பாடலில் சிவகார்த்திகேயன் பேசினார்.

சமீபத்தில் டாடா பை பை என்ற பாட்டும் நேத்து என்ற பாடலிலும் தனுஷ் பேசி இருந்தார்.

உங்கள் ரசிகர்கள் இதை ரசிக்கலாம். ஆனால் பாடலை இப்படி கொல்ல வேண்டாம்.

நாளைய தலைமுறையினர் பேசினாலே அது பாடல் என நினைத்துவிட போகிறார்கள். பின்னணி பாடகர்களின் வாய்ப்புகளை கெடுக்க வேண்டாம்.

எப்பொழுதாவது உங்களுக்கான பாடலை தேர்ந்தெடுத்து பாடுங்கள்.. நாங்களும் இன்பமாய் ரசிக்கிறோம்..

இசையமைப்பாளர்களே ஒரு சில படங்களில் தான் பாட்டு பாடுகின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அனிருத்தும் நிறைய படங்களில் பாடுகிறார். இளம் நாயகர்களுக்கு அவரது குரல் செட்டாகி விடுகிறது. ஆனால் தர்பார் படத்தில் ரஜினிக்கு அனிருத் குரல் செட்டாகவில்லை என்பதே நிஜம்.

Netizens slams celebrities singing songs

More Articles
Follows