தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப்படம் “வாண்டு”. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர் சொல்வார்கள் அதை அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் வாண்டு.
இயக்குநர் படம் பற்றி கூறுகையில்
1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப்படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் தான் இப்படத்தின் விறு விறு கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும் என்றார்.
எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியிருக்கும், இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட் உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.