தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக வளர வேண்டும் என நினைத்து வந்தவர் ஆர்என்ஆர் மனோகர்.
பல போராட்டங்களுக்கு பிறகு தான் அதாவது 40 வயதை நெருங்கிய நிலையில் தான் இவருக்கு சினிமாவிலே வாய்ப்ப்புகள் கிடைத்தது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஆர்.என்.ஆர்.மனோகர்.
1994-ல் வெளியான ‘மைந்தன்’ படம் மூலம் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் அறிமுகமானார்.
2009-ம் ஆண்டு நகுல் நடித்த மாசிலாமணி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். இரண்டாவது படமாக வேலூர் மாவட்டம் படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும் ‘கோலங்கள்’ படத்தில் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றி நடிகராகவும் அறிமுகமானார்.
அப்படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. தவிர, ‘புதுமைபித்தன்’, ‘தென்னவன்’, புன்னகை பூவே’, ‘வந்தே மாதரம்’ ஆகிய பாடங்களிலும் கதாசிரியராக பணியாற்றியவர்.
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு இவர்தான் வசனம் எழுதினார் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் ‛‛ ஆண்டன் கட்டளை, கவண், விஸ்வாசம், தென்னவன், சபரி, சலீம், வீரம், என்னை அறிந்தால், ஈட்டி, மிருதன், காப்பான், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார் மனோகர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் கடந்த 20 நாட்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று நவம்பர் 17ஆம் தேதி காலமானார்.
சிறந்த நடிகரான மனோகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இவரது மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
இவரது மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த நிலையில் அந்த வருடம் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி காலை பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி பலியானார்.
மாணவர்களின் நீச்சல் பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என பலரும் அப்போது பலரும் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் பள்ளியில் நீச்சல் பயிற்சியாளரான ராஜசேகர், அருண்குமார், ரவி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நீச்சல் குளத்தின் இன்சார்ஜ் ரங்காரெட்டி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பின்னர் பள்ளி நீச்சல் குளத்திற்கும் சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Director RNR Manohar passed away