‘இறுதிப் பக்கம்’ இயக்குனரின் முதல் பக்கத்தை தொடங்கிவைத்த கௌதம் மேனன்

‘இறுதிப் பக்கம்’ இயக்குனரின் முதல் பக்கத்தை தொடங்கிவைத்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட உலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம் ‘ என்கிற திரைப்படம்.ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.

இவர் மென்பொருள் பொறியாளர். கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த சினிமா விருப்பத்தின்படி திரையுலகத்திற்கு வந்துள்ளார்.

இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம் மிக்கவர்களைப் படக்குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து, அந்தத் திறமைசாலிகளைப் பக்கபலமாக வைத்துக்கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

அவர் படத்தைப் பற்றி கூறும்போது,

“பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும் .

ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான். இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும் .

ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும்.வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.

அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த ‘இறுதிப் பக்கம்’. ஒரு கொலை நடந்து இருக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள்.

வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக ‘இறுதிப் பக்கம் ‘ இருக்கும் ” என்கிறார் .

மனோ வெ.கண்ணதாசன் மேலும் பேசும்போது…

“ஒரு திரைப்படத்திற்கு முக்கியமாக இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று நல்ல கதை. இன்னொன்று படக்குழு. அந்த படக்குழு மட்டும் சரியாக அமைந்து விட்டால் 70% படம் முடிந்ததுபோல் நம்பிக்கை வந்து விடும் .அப்படி எனக்கு நல்ல திறமைசாலிகள் கொண்ட படக்குழு தேடினேன் அமைந்தது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலு, ஏராளமான குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர் .இப்போது ஏ.ஜி.எஸ்ஸின் ‘நாய் சேகர் ‘ படத்திற்கு அவர் தான் ஒளிப்பதிவாளர்.

இதற்கு இசையமைத்துள்ள ஜோன்ஸ் ரூபர்ட், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பொறியாளன் ‘ மாயன் ‘ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் .

எடிட்டர் ராம்பாண்டியன் ‘ஆண்டவன் கட்டளை ‘, ‘கிருமி ‘ போன்ற படங்களில் உதவி எடிட்டராகப் பணியாற்றியவர்.

இப்படி அனுபவம் உள்ள பலம் வாய்ந்த படக்குழு அமைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஶ்ரீநிவாசன் அவர் நடித்த வெப்சீரிஸ் பார்த்து நான் அவரது திறமையை மிகுந்த திறமைசாலி என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘கள்ளச் சிரிப்பு’ அறிந்திருந்தேன்.

மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து இருக்கிறார்கள்.

நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவன். அதனால் எனது திரைக்கதையை அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் காட்டி பிடித்திருந்தால் மட்டும் பணியாற்றுங்கள் என்ற ரீதியில் தான் அனைவரையும் அணுகினேன்.

கதை மேல் ஏற்பட்ட நம்பிக்கை மட்டுமே அவர்களை பணியாற்றச் சம்மதித்து இந்த படம் உருவாகி இருக்கிறது. என்கிறார்.

‘இறுதிப் பக்கம்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பிடித்துப்போய் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

இதைத் தங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி நெகிழ்ந்து போய் உள்ளது படக்குழு.

படத்தை ஆக்சன் ரியாக்சன் பிலிம்ஸ் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

படம் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக உள்ளது. விரைவில் வெளியாகவுள்ளது.

Director Gautham Menon released Iruthi Pakkam movie first look poster

கமலின் கண்களை குளமாக்கிய ‘ஜெய்பீம்’..; விதை நீங்க போட்டது என சூர்யா நெகிழ்ச்சி

கமலின் கண்களை குளமாக்கிய ‘ஜெய்பீம்’..; விதை நீங்க போட்டது என சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம்.

இந்த படம் இன்று நவம்பர் 2 முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், தமிழ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

1995ல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளனர்.

பழங்குடி இருளர் இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீல் சந்துரு என்பவராக சூர்யா நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் சிறப்பான விமர்சனத்தை நம் தளத்தில் பார்த்தோம்.

இப் படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் படக்குழவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனும் படத்தை பார்த்து தன் பாராட்டை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்…‛‛ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.

கமலின் இந்த பதிவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!! என சூர்யா பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan praises Suriya’s Jai Bhim movie

50% சீட்.. 25 நாட்கள்.. 100 கோடி வசூல்..; ‘டாக்டர்’ உங்க ஆப்ரேஷன் சக்ஸஸ்

50% சீட்.. 25 நாட்கள்.. 100 கோடி வசூல்..; ‘டாக்டர்’ உங்க ஆப்ரேஷன் சக்ஸஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, அர்ச்சனா, வினய், இளவரசு, கிங்ஸ்லீ உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் டாக்டர்.

கேஜேஆர் ஸ்டூடியோ உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தார் சிவா. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

கொரோனா சமயத்தில் கூட ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சனிக்கிழமை தியேட்டர்களில் வெளியிட்டனர்.

காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

கடந்த மாதம் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்து இருந்த நிலையிலும் இப்படம் வெளியான 25 நாட்களில் ரூ.100 கோடி வசூலை அள்ளியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அப்படியென்றால் டாக்டர் சிவகார்த்திகேயன் செய்த ஆப்ரேசன் சக்ஸ்ஸ் தானே..

Sivakarthikeyan’s Doctor film collected Rs 100 crore at the box office

இன்ஞ்ச் கேப்ல ப்ரியா இடையில் கைவைத்த ஹரிஷ் கல்யாண்..; தாராளபிரபுவே இது தகுமா.?

இன்ஞ்ச் கேப்ல ப்ரியா இடையில் கைவைத்த ஹரிஷ் கல்யாண்..; தாராளபிரபுவே இது தகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி (இளம்) ஹீரோக்கள் 30 மற்றும் 35 வயதை கடந்தவர்களே. இதில் சிம்பு, விஷால், அதர்வா தவிர பலரும் திருமணம் ஆனவர்களே.

எனவே இவர்கள் தண்டச்சோறு கேரக்டர்கள்.. லவ்வர் பாஸ், காலேஜ் பாய்ஸ் கேரக்டர்களில் பெரிதாக நடிப்பதில்லை.

எனவே இளம் ஹீரோ… சாக்லேட் பாய்… கேரக்டர்கள் ரோல்கள் ஹரிஷ் கல்யானுக்கு கிடைத்து வருகிறது. அவரும் இதுதான் சமயம் என புகுந்து விளையாடி வருகிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.

இதனையடுத்து வெளியான ப்யார் ப்ரேமா காதல் படம் இவருக்கு ரொமான்டிக் ஹீரோ என்ற பெயரையும் பெற்று தந்தது.

எனவே சினிமாவை தாண்டியும் இவரின் ரொமான்ஸ் எல்லை சமீபகாலமாக விரிவடைந்து வருகிறது.

அண்மையில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படம் அக்டோபர் மாதம் ஓடிடியில் ரிலீசானது. இந்த படத்திற்கு நம் FILMI STREET தளத்தில் நல்ல மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

(இது விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்கு சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்புலு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.)

ஓ மணப்பெண்ணே’ படக்குழுவினர் பட ரிலீசுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஹீரோ மற்றும் ஹீரோயின் தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போதே நாயகி பிரியா பவானி சங்கரின் இடுப்பில் கை வைத்தப்படி போஸ் கொடுத்தார் ஹரிஷ்.

மேலும் மேடையில் படக்குழுவினருடன் போஸ் கொடுத்த போதும் பிரியா இடையில் தான் இவரின் கை இருந்தது. (கிடைத்த கேப்ல எல்லாம் சிக்ஸ்ர் அடிப்பது இதுதானோ..?)

படத்தில் தான் ரொமான்டிக் ஹீரோ என்று நினைத்தால் நிஜத்திலும் அதுவும் பொதுவெளியிலும் ரொமான்டிக் ஹீரோ என்று நினைக்கிறோரோ.? என்னவோ.?

பிரியா பவானி சங்கருக்கு தற்போது தான் பட வாய்ப்புகள் அதிகளவில் வந்துக் கொண்டு இருக்கின்றன. மேலும் பிரியாவுக்கு ஆல்ரெடி பாய் ப்ரெண்ட் இருப்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

எனவே பிரியா-க்களே கொஞ்சம் உஷாராவே இருங்க….

Harish Kalyan and Priya Bhavani shankar’s off screen chemistry creates controversy

விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் மஹிமா

விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் மஹிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொல்லிமலை, வரலாற்றில் வல்வில் ஓரி என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது.

பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்திமிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் நம்பிக்கை. கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாயகங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.

இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில், பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது.

ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார், தேவதர்ஷினி, தினா, அர்ஜே உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.

உணவு தயாரித்து தரும் தொழிலாளி முதல் உதவி இயக்குநர்கள் வரை அத்தனை பேரும் மிகுந்த ஒத்துழைப்போடு வலிகளையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக வேலை செய்து கொடுத்தது படத்தினுடைய தனி சிறப்பாகும் என்று தயாரிப்பாளர் கே முருகன் சிலாகித்துக் கூறினார்.

பிரமாண்ட பொருட்செலவில் எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில் பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகாயகங்கை அருவிக்கரையில் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில.

நடிகர்கள் :

பிரபுதேவா
மஹிமா நம்பியார்
கலையரசன்
நாசர்
அர்ஜெய்
தீனா
தேவதர்ஷினி
இயக்குநர் நட்டு தேவ்
ஜெய்சன் ஜோஸ்
சந்தோஷ்
முரளி
விஜய்
ரேவதி தரண்
குஹாசினி
தீபிகா
சுபாஷ்
சரவணன்
ஸ்ரீராம்
அகத்தியர்
ஸ்ரீதேவி

படக்குழு:

தயாரிப்பாளர்: கே முருகன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் சரவண ரவிக்குமார் (எஸ்பிபி காலனி – ஈரோடு) இயக்குநர்: பா விஜய்
ஒளிப்பதிவு தீபக் குமார் பதி
கலை: சரவணன்
இசை: கணேஷ்
எடிட்டர் : சான் லோகேஷ்
ஸ்டண்ட் : கணேஷ்
உடைகள் : சாய்
ஆடை வடிவமைப்பாளர்: டோரதி
ஒப்பனை: குப்புசாமி
ஸ்டில்ஸ்: அன்பு
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Prabhudeva-starrer film produced by K Murugan of M S Movies and directed by Pa Vijay shot in Aagaya Gangai for first time

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நலனுக்காக முதல்வரிடம் ஜோதிகா சூர்யா நன்கொடை

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நலனுக்காக முதல்வரிடம் ஜோதிகா சூர்யா நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’. தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது.

இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது.

இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா வழங்கினார்.

இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Surya and Jyotika donate Rs 1 crore to Irular Educational Trust

More Articles
Follows