லோ பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படமெடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோஸ்

லோ பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படமெடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja Inaugurates SRI STUDIOSதமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.

இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்..

இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், வேல்ராஜ், விஜய் மில்டன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

மேலும் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் Red Epic W Helium கேமராவும் சில லென்ஸ் உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து ஹாலிவுட்டில் படம் எடுக்க பயன்படுத்தும் அதிநவீன கேமரா மற்றும் தொழில் நுட்ப கருவிகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் எப்படி சிறப்பாக படம் எடுக்கலாம் என்பதற்கான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

2007 முதல் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் பயன்படுத்த லேட்டஸ்ட் டெக்னாலஜியில் ஸ்ரீ ஸ்டுடியோவின் பங்களிப்பு தவறாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

சிறிய பட்ஜெட் படங்களாக உருவான கோலிசோடா, மூடர்கூடம் படங்களாகட்டும் தற்போது தயாராகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.O, காலா ஆகிய படங்களாகட்டும் ஸ்ரீ ஸ்டுடியோவின் லேட்டஸ்ட் டெக்னாலஜி இடம் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனர் ஸ்ரீதர் சிங்கப்பூரில் பிலிம் டைரக்சன் படித்தவர்.

தற்போது ஹாலிவுட்டிலும் இவரது பணி தொடர்வதோடு அங்குள்ள திரைப்பட கல்லூரியில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி பாடம் எடுக்கும் கௌரவ விரிவுரையாளராகவும் இருக்கிறார்.

ஹாலிவுட் தரத்திலான தொழில்நுட்ப கருவிகளை தமிழ்சினிமாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் முதல் ஆளாக இருக்கிறது இவரது நிறுவனம்.

படம் தயாரித்தலின் மூன்று நிலைகளான ப்ரீ புரடக்சன், புரடக்சன், போஸ்ட் புரடக்சன் என்கிற பணிகளிலும் ஸ்ரீ ஸ்டுடியோ உதவிகரமாக இருக்கிறது.

தற்போது ஒரு திரைப்படம் எடுக்க தயாராகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியும். டிஜிட்டலில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும் குறைந்த செலவில் படம் தயாரிக்க விரும்புவர்களுக்கும் ஸ்ரீ ஸ்டுடியோ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Director Bharathiraja Inaugurates SRI STUDIOS

sri studios

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் தனுஷ்

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush bagged the tamil remake rights of Arjun Reddyசந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது.

இயக்குநர் ராஜமெளலி, சமந்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

எனவே இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ரீமேக்கில் தனுஷே நடிக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் காதலில் தோல்வியுற்ற ஒருவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை இன்றைய சூழலுக்கு ஏற்ப காட்டியிருக்கிறார்களாம்.

அதாவது நவீன தேவதாஸ் படம் என தெரிவிக்கிறார்கள்.

Dhanush bagged the tamil remake rights of Arjun Reddy

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara still out from Colamaavu Cokila movieநயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை சுருக்கமாக அழைக்க கோகோ என்று பெயரிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பதை நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும நிலையில் இப்படத்தில் உள்ள ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Nayanthara still out from Colamaavu Cokila movie

பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Seeman and Ameer condolence to Student Anitha deathநீட் மருத்துவ தேர்வு முறையால் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான், இயக்குனர் அமீர் நேரில் சென்றனர்.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குனர் அமீர்.

அவர் பேசியதாவது…

“அனிதாவின் குடும்பத்தார் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்த்த போது வராதவர்கள், உயிர் போன பின்புதான் வருவீர்களா? எனக் கேட்கிறார்கள்.

டெல்லிக்கு எத்தனை முறை ஓடியிருப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

ஓட்டுக்காகவும், பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள் அவர்கள்.” என ஆவேசமாக பேசினார்.

Directors Seeman and Ameer condolence to Student Anitha death

தற்கொலை செய்த அனிதாவும் என் மகள்தான்; பிக்பாஸிலும் பேசும் கமல்

தற்கொலை செய்த அனிதாவும் என் மகள்தான்; பிக்பாஸிலும் பேசும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Bigg Boss show Kamalhassan will talk about NEET issue Anitha deathநீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியவர் பள்ளி மாணவி அனிதா.

மருத்துவ துறையில் நுழைய முடியாது என்பதால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் பேசியதாவது…

அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம். கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும்.

கனவுடன் வாழ்ந்த மாணவியை கண்மூட வைத்து, நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். இதனால் கண்ணீரோடு கோபமும் வருகிறது.

அக்ஷரா, ஸ்ருதியை போன்று அனிதாவும் எனக்கு மகள்தான்” என்று பேசியிருந்தார்.

மேலும் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் பேசும் கமல், இன்றைய நிகழ்ச்சியில் நேற்று நீட் தேர்வுக்கெதிராக போராடி மறைந்த மாணவி அனிதாவின் தற்கொலை பற்றிப் பேசுகிறார்.

‘எதிர்காலத்தைப் பொய்த்துவிட்டு இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்…’ என அவர் பேசும் நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.

In Bigg Boss show Kamalhassan will talk about NEET issue Anitha death

நயன்தாராவின் அறம் பட போஸ்டரில் அனிதா மரணம் எதிரொலி

நயன்தாராவின் அறம் பட போஸ்டரில் அனிதா மரணம் எதிரொலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharas Aramm poster designed for Anitha suicide because of NEETநீட் தேர்வு முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்ற மாணவி அனிதா, மனவேதனையால் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் தமிழகமே கொந்தளித்து உள்ளது.

இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை வரை அவரது உடலை எடுக்க விடமாட்டோம் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள அறம் பட போஸ்டரில் நீட் தேர்வால் மரணம் அடைந்த அனிதாவின் மரணம் குறித்து அச்சிட்டுள்ளனர்.

Nayantharas Aramm poster designed for Anitha suicide because of NEET

இதோ அந்த போஸ்டர்…

ARAM neet poster

More Articles
Follows