தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்

தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)இளைஞர்கள் என்றாலே ஏதாவது ஒரு துறையில் கால் பதித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அதிலும், சினிமாத் துறை என்றால் கேட்கவே வேண்டாம், ஆசைகளும், கனவுகளும் நிறையவே இருக்கும். இருப்பினும், அதில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அதில், அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது. அபிலாஷ் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சி.எஸ். படித்தவர். இருப்பினும், அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பத்தால் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படம் இயக்கியதைப் பற்றியும், விருது வென்றதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டதாவது

எனது சொந்த ஊர் நெய்வேலி. படிப்பதற்காக சென்னை வந்தேன். படித்துக் கொண்டிருக்கும்போதே ஃபேஷன் புகைப்படக்காரராக இருந்தேன். அதன்பிறகு ‘புலி’ படத்தில் மேக்கிங்கில் பணியாற்றினேன். பிறகு ‘மெர்சல்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். ஒருநாள் இப்படத்தின் ஒரு வரி மனதில் தோன்றியது. ஆனால், அந்த கதைக்கு என் அறை நண்பர் அசோக் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால், கல்லூரியில் படிக்கும்போதே நிறைய கவிதைகள் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஆகையால், அவரிடம் கதையைக் கூறி இப்படத்திற்கு நீ தான் எழுத வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். இப்படத்தின் இறுதி 10 நிமிட காட்சிகளில் அவருடைய வசனங்கள் அனைவராலும் பேசப்படும்.

ஏனென்றால், இப்படம் ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, ஆக்ஷனை வைத்து சரியான விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதற்கு அசோக்கின் எழுத்து பக்க பலமாக இருந்தது.

இப்படம் மொத்தமாக 48 மணி நேரத்திலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். குறைந்த நேரத்தில் இப்படம் எடுக்க சவாலாக இருந்தது நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பு தான். ஆனால், அவர்கள் எந்த தயக்கமும் காட்டாமல் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் கதாநாயனும் கிடையாது, வில்லனும் கிடையாது. புதிய கோணத்தில் இப்படம் அமைந்திருக்கும்.

விருது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் படமியக்கவில்லை. ஆனால், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவிற்கு அதுவும் தமிழ் படத்திற்கு விருது கிடைத்துள்ளது என்ற செய்தி கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். எனது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். விருது வழங்கும் சமயத்தில் என்னால் அமெரிக்கா செல்ல இயலாததால் எனது அம்மா தான் பெற்றுக் கொண்டார்.

அடுத்து வெள்ளித்திரையில் இயக்கப் போகிறேன். அதற்கான கதை 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. விரைவில் படப்பிடிப்பைத் துவங்குவோம்.

இவ்வாறு இயக்குநர் அபிலேஷ் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படமாக ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ விருது பெற்றுள்ளது. அந்த படத்திற்கு வசனம் எழுதிய அசோக் தன் அனுபவத்தைக் கூறியதாவது

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி தான் எனது சொந்த ஊர். சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தேன். நானும் அபிலாஷும் கல்லூரியில் படிக்கும்போது ஒரே அறையில் தங்கியிருந்தோம். சிறுவயதில் சினிமா பார்ப்பதோடு சரி. மற்றபடி சினிமாவில் வரவேண்டும் என்ற எந்த ஆசையும் இல்லை. அபிலேஷ் மூலம் தான் எனக்கு சினிமா ஆசை வந்தது.

அபிலாஷ் கதை கூறி இப்படத்திற்கு நீ தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறியதும் என்னால் முடியுமா என்று முதலில் தயங்கினேன். ஆனால், அபிலேஷ் என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். நான் எழுதிய பின் அதைப் பார்த்து முதலில் விமர்சனம் செய்தது அபிலேஷ் தான். நிச்சயம் வசனம் எல்லோராலும் பேசப்படும் என்று கூறினார். நாம் வெளியிலிருந்து என்னதான் நல்ல விமர்சனங்களை வாங்கினாலும், எழுதும்போதே இயக்குநரிடம் இருந்து வருவது தான் சிறந்ததாக இருக்கும்.

சிறுவயது முதலே தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம். மற்ற பாடங்களைவிட தமிழில் தான் அதிக மதிப்பெண் வாங்குவேன். அதற்கு காரணம் என்னுடைய அப்பா தான். நான் ஒரு சந்தேகம் கேட்டால் அதுபற்றி சுமார் அரைமணி நேரமாவது அந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசுவார். அவர் கூறிய விஷயங்கள் என்னுடைய ஆழ்மனதில் பதிந்த விஷயங்கள் இன்று எழுத்தாக உருமாறியிருக்கிறது. அதேபோல், எழுதுவதற்கு பக்குவம் அவசியம். அது இருந்தால் நன்றாக எழுத முடியும்.

நான் சினிமா துறையில் கால் பதிக்கப் போகிறேன் என்றதும் அப்பாவுக்கு விருப்பமில்லை. ஆனால், அம்மாவுக்கு என் மேல் உள்ள நம்பிக்கையில் மறைமுக ஆதரவு கொடுத்தார். அதன்பிறகு கதையை அவர்களிடம் கொடுத்தேன். படித்ததும் அவர்களுக்கும் என் மேல் நம்பிக்கை வந்தது.

104 நாடுகளிலிருந்து 1400 குறும்படங்கள் பங்குபெற்றன. அதில் என் நண்பர் அபிலேஷ் இயக்க, நான் எழுதிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றது. இதையறிந்ததும், எங்கள் இருவரது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.

இனி என்னுடைய பயணம் சினிமா மட்டும் தான். வெள்ளித்திரையில் வெற்றியடைவதுதான் என்னுடைய லட்சியம்.

இவ்வாறு ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ குறும்படத்திற்கு வசனம் எழுதிய அசோக் கூறினார்.

’48 பிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் பீனா சந்திரகலா, ரவி மாதவன் அங்கமுத்து ஆகியோர் இக்குறும்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

அல்வா கொடுத்த விஸ்வாச விநியோகஸ்தர்.; திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்

அல்வா கொடுத்த விஸ்வாச விநியோகஸ்தர்.; திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)இந்தாண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்துடன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தையும் மோத விட்டனர்.

இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதில் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரிக்க, கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

எனவே பேட்ட படத்தை விட விஸ்வாசம் பட அதிக வசூல் என ட்விட்டர் வட்டாரத்தில் பரபரப்பாக வதந்திகளை பரப்பினர். இதற்காகவே சில லட்சங்களையும் செலவு செய்தனர்.

உடனே ரஜினியை முந்திவிட்டார் அஜித் என ட்விட்டர் குருவிகளும் கூவத் தொடங்கியது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு இணையத்தள பேட்டியில் விஸ்வாசம் வசூல் வதந்தியை உடைத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் வேண்டுமென கேட்க, அப்படியொரு வதந்தியை பரப்பினார்களாம்.

அதாவது விஸ்வாசம் படம் ரூ. 150 கோடி வசூல் என கூறிவிட்டு ரூ.80 கோடியை தான் தயாரிப்பாளர்களிடம் கொடுத்தார்களாம்.

இந்த நிலையில் மீண்டும் வேறு வழியில்லாமல் இப்படத்தை விநியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது புதிய ட்விட்டை போட்டுள்ளது.

அதாவது பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டிருக்கிறோம் எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனை மறந்துவிடவோ மறைத்து விடவோ முடியாது. என பதிவிட்டுள்ளனர்.

சரி விடுங்கப்பா.. வாய் வலிக்கிற வரை கத்தட்டும்.

பா. ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா-தினேஷ்-கலையரசன்

பா. ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா-தினேஷ்-கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மூன்று கதாநாயகர்களை ஒரு படத்தில் இயக்கவுள்ளாராம்.

இதில் ஆர்யாவுடன், நடிகர் தினேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இபபடத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவி நிறுவனம் தயாரிக்கிறது.

கமல் & ரகுல் பிரித்தி சிங் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் ஷங்கர்

கமல் & ரகுல் பிரித்தி சிங் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை விறுவிறுப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதில் கமலுடன் பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக், பிரியா பாவனி சங்கர், காஜல் அவர்வால், வித்யூ ஜமால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது.

இந்த நிலையில் சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஈவிபி பூங்காவிலும் மற்றும் தி.நகரிலும் இப்பட காட்சிளை படமாக்கியுள்ளார் ஷங்கர்.

இதில் கமலுடன் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

இந்தியாவில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகாக வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கிறார் இந்த இந்தியன் தாத்தா.

ரஜினியை அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

ரஜினியை அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து விட்டாலும் ரஜினியுடன் நடிக்கவில்லையே என ஏங்கி கிடந்தார் த்ரிஷா.

இந்தாண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் அந்த ஏக்கம் தீர்ந்து விட்டது.

அதுபோல் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்துவிட்டாலும் மலையாளத்தில் நடிக்கவில்லையே என காத்திருந்தார்.

அதுவும் கடந்த வருடம் வெளியான ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்ததன் மூலம் தீர்ந்தது.

தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார்.

அதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தற்போது கார்த்தி, ஜோதிகா நடித்து வரும் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் தான் மோகன்லால் & த்ரிஷா இணையும் படத்தை இயக்கவுள்ளார்.

அருண் விஜய்யை மீண்டும் போலீசாக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன்

அருண் விஜய்யை மீண்டும் போலீசாக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் அருண்விஜய்க்கு ரீ எண்ட்ரி என்றே சொல்லலாம்

அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்தும் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.

குற்றம் 23, தடம், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களை இதற்கு சாட்சியாக சொல்லலாம்.

அண்மையில் வெளியான சாஹோ படமும் இவருக்கு நல்ல பெயரை தந்துள்ளது.

தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த்தாக ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் கிரைம் திரில்லர் படத்தில் நடிக்க போகிறாராம்.

அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கெனவே குற்றம் 23 படத்திலும் இதே வேடத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows