BREAKING எம்எஸ் தோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

BREAKING எம்எஸ் தோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhoni biopic hero Sushant Singh Rajput committed suicideஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ரிலீசானது.

தோனி கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

மேலும் அமீர் கானின் “பி.கே” படத்திலும் அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவருக்கு 34 வயதாகிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரின் இந்தத் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

எம்எஸ் தோனி படத்தில் வாழ்க்கையில் உண்மையாக உழைத்தால் உயரத்தில் அடையலாம் என அருமையாக நடித்திருப்பார். ஆனால் இன்று அவருக்கு என்ன பிரச்சினையோ..? தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

Dhoni biopic hero Sushant Singh Rajput committed suicide

மீம்ஸ்களில் அவமானப்படுத்தப்பட்ட அப்துல் கலாம்..; நடிகர் விவேக் அட்வைஸ்

மீம்ஸ்களில் அவமானப்படுத்தப்பட்ட அப்துல் கலாம்..; நடிகர் விவேக் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek abdul kalamகொரோனா ஊரடங்கு காலத்தில் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.

அதிலும் அண்மையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்ட உடன் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் இணையத்தில் பரவியது.

ஒரு சிலர் மீம்ஸ்களில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் படத்தை வைத்து உருவாக்கி வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டரில்..

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேண்டுகோள்…

கேலி செய்ய பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அய்யாவின் படங்களை மீம்களில் பயன்படுத்த வேண்டாம்.

நாம் அனைவரும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவரை மதிக்கவேண்டும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி” என்று பதிவு செய்துள்ளார்.

தற்போது விவேக் நடிப்பில் இந்தியன் 2, அரண்மனை 3 போன்ற படங்கள் உருவாகி வருகிறது.. கொரோனா பிரச்னைக்கு பிறகு இதன் சூட்டிங் தொடங்கும்.

ஜிவி. பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ் & அதீதி ராவ் ‘லவ்’

ஜிவி. பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ் & அதீதி ராவ் ‘லவ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush aditi raoவசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “ஜெயில்” சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்!

அங்காடி தெரு, வெயில், அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது புதிய கண்ணோட்டத்தில்,
ஜி .வி பிரகாஷ் குமார், அபர்நதி, நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.

தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி வெளியாகிறது.

அங்காடி தெரு, வெயில் படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை, நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ், அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள். கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார்.

தனுஷ், ஜி.வி.பிரகாஷ் அசுரன் படத்திற்கு பிறகு இசையில் இணைந்துள்ளார். இந்த பாடலை ஜூன் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஸ்ரீதரன் மரியதாசன்

ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டவர்.

தயாரிப்பு மேற்பார்வை பி.டி. செல்வகுமார், கேமரா கணேஷ் சந்திரா, பாடல்கள் கபிலன், இசை ஜி.வி.பிரகாஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வசந்தபாலன்.

விஜய்- சூர்யா மோகன் லால்-மம்முட்டி ஆகியோரின் பாடிகார்ட் தாஸ் மரணம்

விஜய்- சூர்யா மோகன் லால்-மம்முட்டி ஆகியோரின் பாடிகார்ட் தாஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

body guard dasபொது நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்து கொண்டால் அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்பவர்கள் BODY GUARDS பாடிகாட்ஸ் தான்.

இந்த பாதுகாவலர்களில் ஒருவர் தாஸ் சேட்டன்.

கேரளாவை சேர்ந்த இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, மோகன் லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நம்பிக்கையானவர். அவர்களின் பாதுகாப்புக்கு இவர் மிகவும் முக்கியமானவர்

அண்மையில் மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தாஸ்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாஸ் சேட்டனின் மரண செய்தியை அறிந்த பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு சேவையில் ஆஸ்திரேலியாவை அசத்திய இந்திய நர்ஸ்..; ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

கொரோனா தடுப்பு சேவையில் ஆஸ்திரேலியாவை அசத்திய இந்திய நர்ஸ்..; ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gilghristஒருவர் கொரோனாவினால் மரணம் என்றால் கூட அவரது உறவினர்களே பிணத்தை வாங்க மறுக்கின்றனர்.

கொரோனா பாதித்தவர் அருகில் கூட எவரும் செல்ல முடியாத நிலையும் உள்ளது.

ஆனால் தன் சேவையால் ஆஸ்திரேலியா நாட்டை அசர வைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த செவிலியர் ஷேரன் வர்கீஸ்.

இவர் கேரளாவின், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த தம்பதி லல்லிசென் மல்லிசேரி-ஆன்சி பிலிப்பின் மகள் ஷேரன் வர்கீஸ்.

இந்த மாணவி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கச் சென்றார்.

2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பை முடித்த பின் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த அவர், அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து சேவை செய்து பணியாற்ற விரும்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.

அப்போது முதியோர் இல்லத்தில் சேவை செய்து வந்த ஷேரன், கவனத்துடன் செயல்பட்டார்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் அனைவரையும் பாதுகாத்தார்.

ஷேரன் வர்கீஸின் சேவையை ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாக பாராட்டி உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டும் பாராட்டியுள்ளார்.

”ஷேரன் அவர்களே… இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதானவர்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது.

உங்களின் பெற்றோருக்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்து விட்டீர்கள்” என பாராட்டி உள்ளார்.

நடிகையின் அம்மாவுக்கு கொரோனா.; கூட்டுக்குடும்பத்தில் சிக்கிய 45 பேர் தவிப்பு

நடிகையின் அம்மாவுக்கு கொரோனா.; கூட்டுக்குடும்பத்தில் சிக்கிய 45 பேர் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepika singhகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பாதிப்பால் உலகளவில் இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறி விட்டது.

இந்த நிலையில் பிரபல ஹிந்தி டிவி நடிகை தீபிகா சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

தனது அம்மாவிற்கு கொரோனா வைரஸ் ்தொற்றியுள்ளது.

தங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் 45 பேர் ரிஸ்க்கில் உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More Articles
Follows