தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை.?

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Aniruch combo will join again in VIP3தனுஷ் தயாரித்து நடித்த விஐபி படத்தின் முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கினார்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் பெரும் ஹிட்டடித்தது.

எனவே 2ஆம் பாகத்தையும் தனுஷ் தயாரித்து நடித்தார்.

இப்படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இப்படம் முதல் பாக அளவுக்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும், ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனவே இதன் 3ஆம் பாகத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதை தனுஷே இயக்க வாய்ப்புள்ளதாகவும் அனிருத் இசையமைக்கக் கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘அடுத்த வருடம் 2019 தனுஷுடன் இணைவேன் என அனிருத் கூறியிருந்தது நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

Dhanush and Anirudh combo will join again in VIP3

தேவராட்டம் படத்திற்காக கௌதம் உடன் ஆட்டம் போடும் மஞ்சிமா

தேவராட்டம் படத்திற்காக கௌதம் உடன் ஆட்டம் போடும் மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manjima Mmohan on board in Devarattam opposite to Gautham Karthikஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 15 வது படத்தின் பெயர் “தேவராட்டம்”.

இப்படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். எடிட்டிங் செய்கிறார் பிரவீன்.

இப்படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க, முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.

இந்நிலையில் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ள தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Manjima Mmohan on board in Devarattam opposite to Gautham Karthik

devarattam team

பிரச்சினை இல்லாமல் மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்தார் சிம்பு

பிரச்சினை இல்லாமல் மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu completed his portions in Chekka Chivantha Vaanam and Shoot wrapped

சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த செல்வராகவனின் கான் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதற்கு முன் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படமும் பல பிரச்சினைகள் தாண்டியே வெளியானது.

சிம்பு சூட்டிங்குக்கு சரியாக வராத காரணத்தால் படத்தின் கதையையே மாற்றியதாக ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) படக் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இப்படிதான் அண்மை காலமாக சிம்பு படத்தின் செய்திகளை பார்த்து வந்தோம்.

ஆனால் முதன்முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதை சரியாக முடித்துக கொடுத்துள்ளார் சிம்பு.

அந்த படம்தான் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் திரைப்படம்.

இப்படத்தில் சிம்பு உடன் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.

தற்போது சிம்பு காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Simbu completed his portions in Chekka Chivantha Vaanam and Shoot wrapped

விஜய்யுடன் இணைந்தார் வரலட்சுமி; தளபதி62 படத்தலைப்பு ஆயுதப் பெயரா.?

விஜய்யுடன் இணைந்தார் வரலட்சுமி; தளபதி62 படத்தலைப்பு ஆயுதப் பெயரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi joins with Vijay for Thalapathy 62 shooting updatesஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

தற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 62 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

அப்போது வரலட்சுமி காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால், அவர் சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்டத்திற்கு கோடாரி எனப் பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் இயக்கிய விஜய்யின் 2 படங்களுக்கு கத்தி, துப்பாக்கி என ஆயுதப் பெயரை வைத்திருந்தனர்.

எனவே அந்த ராசிப்படி இந்த படத்திற்கு ஆயுத பெயரை வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Varalakshmi joins with Vijay for Thalapathy 62 shooting updates

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வாணி ராணி சீரியல் நடிகை கைது

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வாணி ராணி சீரியல் நடிகை கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV Serial Actress Sangeetha has been arrested in Prostitution caseசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் சின்னத்திரை நடிகை சங்கீதா உட்பட பாலியல் தொழில் செய்ததாக மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் 3 இளம் நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளாராம்.

கைது செய்யப்பட்டுள்ள சங்கீதா பிரபல வாணி ராணி தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TV Serial Actress Sangeetha has been arrested in Prostitution case

காவிரிக்காக காலா வசூலை தியாகம் செய்யும் ரஜினிகாந்த்

காவிரிக்காக காலா வசூலை தியாகம் செய்யும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths Kaala movie will not release in Karnatakaரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் உலகமெங்கும் வரும் ஜூன் 7ம் தேதியன்று வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

தமிழகத்தில் இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தைக் காரணம் காட்டி, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.

இருந்தபோதிலும் காலாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தகை சபை தடை விதித்துள்ளது.

மக்கள் விரும்பினால் படத்தை வெளியிடுவோம் என கர்நாடக முதல்வர் குமாரசாமியும் கூறிவிட்டார்.

ரஜினிகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கினால் ஏதாவது நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால், அரசியலில் ரஜினி இறங்கவிருப்பதால் தமிழகத்திற்கு எதிராக ரஜினியும் எதையும் செய்ய மாட்டார். மேலும் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையில் மிகவும் மோசமாக உள்ளதால் கடும் விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடும்.

எனவே கர்நாடகத்தில் காலா வெளியாவது சந்தேகம்தான்.

கர்நாடகாவில் ‘காலா’ வெளியாகவில்லை என்றால் சுமார் ரூபாய் 20 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இருப்பினும் அந்தத் தொகையை வேறு வழியில் ஈடு செய்துவிடலாம் என்று நினைக்கிறார்களாம் படக்குழுவினர்.

தமிழகத்திற்காக காவிரிக்காக ‘காலா’வை கர்நாடகாவில் தியாகம் செய்துவிட்டார் என்ற பெயர் நிச்சயம் ரஜினிக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே தமிழகத்திற்கு வந்துதான் கர்நாடக ரஜினி ரசிகர்கள் காலாவை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது.

Rajinikanths Kaala movie will not release in Karnataka

More Articles
Follows