தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான தர்பார் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.
இந்த படத்தில் ரஜினி போலீஸ் கமிஷ்னராக நடித்துள்ளார்.
இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவர் வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.
இந்த படத்தின் சில வசனங்கள் அரசியல் கட்சி தலைவர்களை மறைமுக கலாய்துள்ளது.
ஒரு காட்சியில் எம்ஜிஆர் அவருடைய சினிமாவில் ஏன் 3 முறை அடிவாங்குவார்? என தெரியுமா? என ரஜினி கேட்பார்.
அதன்பின்னர் அவரே பதில் சொல்வார். தன் எதிரியின் பலம் என்ன? என்பதை தெரிந்துக் கொள்வதற்காக தான் அந்த அடிகளை வாங்குவார் என்பார்.
மற்றொரு காட்சியில் சிறை கைதிகள் செல்போன்களில் பேசிக் கொண்டு இருப்பார்கள்.
அப்போது ஜெயில்ல செல்போன் வச்சிருக்காங்க என்பார். தென்னிந்தியாவில் ஒரு கைதி வெளியே ஷாப்பிங் போய்ட்டு வராங்க சார் என்பார் ஒரு அதிகாரி. அதற்கு ரஜினி.. ஓஹ்ஹஉ என்று கிண்டலாக ஒரு சவுண்ட் விடுவார்.
அதுபோல் மற்றொரு காட்சியிலும் கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவை கலாய்த்து வசனங்கள் இருக்கும்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது…
“தர்பார் படத்தில் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருளால் வரும் பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களை காட்டியுள்ளனர்.
அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலா அவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
அதே சமயத்தில் சினிமா வாயிலாக நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார் அமைச்சர்.
Darbar Rajini slams Sasikala Jail shopping incident