தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தி லட்சக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா.
2020 தொடக்கம் முதல் மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை தொலைத்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 6 மாதங்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சின்ன குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக மருத்துவ வல்லுனர்களே தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து அடுத்தாண்டு (ஜீன் 2021) பாதி வரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதுவரை உலகில் ஓரிரு நாடுகளில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளில், எதுவும் 50 விழுக்காடு கூட எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை எனவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா நாடு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், நெடுநாள் பாதிப்புகளை அந்த மருந்து குணப்படுத்துமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Covid Vaccination Not Expected Until Middle Of Next Year says WHO