தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது 2 கட்டங்களை எட்டியுள்ளது. 3 வது கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.
அது என்னங்க.. முதல் கட்டம். 2வது கட்டம் என்ற விழிப்புணர்வை நம்மிடையே பெரும்பாலானவர்களிடம் இல்லை. எனவே அதுபற்றிய ஒரு விரிவான விளக்கம் இதோ….
கொரோனா முதற்கட்டம் (Imported stage )
வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு திரும்பி இந்தியர்கள் தங்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமலே தாயகம் திரும்பி விடுகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக சென்றவர்கள் என விமான நிலைய சோதனைகளில் கண்டறியப்படுகிறது. இதுதான் முதற்கட்டம்.
கொரோனா 2வது கட்டம் உள்ளூர் பரவல் (Local transmission from infected)
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்வதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.
இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
அதாவது வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த நோய் தொற்றுகிறது. இதுதான் 2வது கட்டம்.
தற்போது நம் நாடு இந்தியா 2 ஆம் கட்டத்தில் உள்ளது.
கொரோனா 3வது கட்டம் (Community transmission)
கொரோனா வைரஸ் பாதிப்புப்புக்குள்ளானவர்கள் தங்களது நிலையை உணராமல் பல இடங்களுக்கும் செல்வதால் இது மேலும் பரவுகிறது.
அதாவது பொது இடத்தில் செல்லும்போது அவர்கள் தொடும் பொருட்கள் மனிதர்கள் மூலம் இந்த வைரஸ் கிருமி மற்ற மனிதர்களுக்கும் பரவிவிடுகிறது.
கொரோனா 4வது கட்டம்.. (Epidemic)
எதன் மூலமாக வைரஸ் பரவியது என அறியமுடியாத அளவிற்கு உள்நாட்டில் அதீத தன்மையுடன் வைரஸ் தொற்று பரவுவது நான்காவது கட்டமாகும்.
வரையறுக்கப்பட்ட அளவைத் தாண்டி அனைவருக்கும் பரவும் ஆபாயம் ஏற்பட்டால் அது Epidemic என அழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதாவது வெளிநாட்டு பயணிகள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பரவும் கொள்ளைநோய் என்பதையே Epidemic எனக் குறிப்பிடுகிறோம்.
நாம் 3வது கட்டத்தை எட்டக்கூடாது என நம் அரசாங்கம் போராடி வருகிறது.
நாமும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் நாம் நினைத்துக கூட பார்க்க முடியாத கட்டத்தை எட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஆகவே சமூக இடைவெளியை ஏற்படுத்த நம்மை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருப்போம். கொரோனாவை நாம் கொல்வோம்.
Covid 19 Know about the four stages of Corona Virus