கொலைக்கார கொரோனா: முதல் கட்டம் முதல் முடிவு வரை ஒரு பார்வை

கொலைக்கார கொரோனா: முதல் கட்டம் முதல் முடிவு வரை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid 19 Know about the four stages of Corona Virusஇந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது 2 கட்டங்களை எட்டியுள்ளது. 3 வது கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

அது என்னங்க.. முதல் கட்டம். 2வது கட்டம் என்ற விழிப்புணர்வை நம்மிடையே பெரும்பாலானவர்களிடம் இல்லை. எனவே அதுபற்றிய ஒரு விரிவான விளக்கம் இதோ….

கொரோனா முதற்கட்டம் (Imported stage )

வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு திரும்பி இந்தியர்கள் தங்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமலே தாயகம் திரும்பி விடுகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக சென்றவர்கள் என விமான நிலைய சோதனைகளில் கண்டறியப்படுகிறது. இதுதான் முதற்கட்டம்.

கொரோனா 2வது கட்டம் உள்ளூர் பரவல் (Local transmission from infected)

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்வதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.

இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

அதாவது வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த நோய் தொற்றுகிறது. இதுதான் 2வது கட்டம்.

தற்போது நம் நாடு இந்தியா 2 ஆம் கட்டத்தில் உள்ளது.

கொரோனா 3வது கட்டம் (Community transmission)

கொரோனா வைரஸ் பாதிப்புப்புக்குள்ளானவர்கள் தங்களது நிலையை உணராமல் பல இடங்களுக்கும் செல்வதால் இது மேலும் பரவுகிறது.

அதாவது பொது இடத்தில் செல்லும்போது அவர்கள் தொடும் பொருட்கள் மனிதர்கள் மூலம் இந்த வைரஸ் கிருமி மற்ற மனிதர்களுக்கும் பரவிவிடுகிறது.

கொரோனா 4வது கட்டம்.. (Epidemic)

எதன் மூலமாக வைரஸ் பரவியது என அறியமுடியாத அளவிற்கு உள்நாட்டில் அதீத தன்மையுடன் வைரஸ் தொற்று பரவுவது நான்காவது கட்டமாகும்.

வரையறுக்கப்பட்ட அளவைத் தாண்டி அனைவருக்கும் பரவும் ஆபாயம் ஏற்பட்டால் அது Epidemic என அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதாவது வெளிநாட்டு பயணிகள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பரவும் கொள்ளைநோய் என்பதையே Epidemic எனக் குறிப்பிடுகிறோம்.

நாம் 3வது கட்டத்தை எட்டக்கூடாது என நம் அரசாங்கம் போராடி வருகிறது.

நாமும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் நாம் நினைத்துக கூட பார்க்க முடியாத கட்டத்தை எட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே சமூக இடைவெளியை ஏற்படுத்த நம்மை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருப்போம். கொரோனாவை நாம் கொல்வோம்.

Covid 19 Know about the four stages of Corona Virus

கொரோனா பாதித்தவர்கள் 66ஐ தாண்டியது.; எடப்பாடி பழனிச்சாமி வேதனை

கொரோனா பாதித்தவர்கள் 66ஐ தாண்டியது.; எடப்பாடி பழனிச்சாமி வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Edappadi Palanisamy talks about Corono updates in Tamilnaduகோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா என்ற கொடிய நோயை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன்பின்னர் அவர் கூறியதாவது…

நேற்றுவரை கொரோனா பாதித்துள்ளவர் எண்ணிக்கை 50 ஆக இருந்தது.

தற்போது மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.

இதில் 5 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அறிகுறியுடன் காணப்படும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல.

இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை.

கொரோனா தடுப்பு பணியில் ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

CM Edappadi Palanisamy talks about Corono updates in Tamilnadu

3000 கோடி சிலை… கொரோனா நிவாரணம்… மோடிக்கு நடிகரின் சாட்டையடி ஓவியம்

3000 கோடி சிலை… கொரோனா நிவாரணம்… மோடிக்கு நடிகரின் சாட்டையடி ஓவியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ponvannan indirectly slams Modis Statue of Unity உலகமே கொரோனா வைரசுக்கு பயந்து அதை தடுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

பல உயிர்களை கொரோனா கொன்று குவித்து வருவதால் அதை தடுக்க இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்களிடமும் நிவாரண நிதி கேட்டு வருகிறது.

இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.

நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாயை இழந்துள்ளனர்.

வேலை காரணமாக தங்கள் குடும்பதை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

போக்குவரத்து இல்லாத காரணத்தாலும் மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினாலும் நிறைய மக்கள் நடந்தே செல்ல துணிந்துவிட்டனர்.

கொரோனா நிவாரண நிதி மற்றும் நடந்து செல்லும் மக்கள் இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் நடிகர் பொன்வண்ணன் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார்.

நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கீழே, ஏராளமான தொழிலாளர்கள் நடந்து செல்வது போன்று ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதிலிருந்து நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ரூ. 3000 கோடியில் மக்கள் வரிப்பணத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி நிறுவினார். அப்போது அதற்கு மக்களிடம் அனுமதி கேட்கவில்லை.

தற்போது கொரோனா தடுப்பு நிதிக்காக மக்களிடமே கையேந்தி நிற்கிறார். அந்த பணத்தை வைத்து மக்களுக்கு உதவி இருக்கலாம்.

மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து நிற்கின்றனர். ஆனால் மோடி வைத்த சிலை மட்டும் வானுயர உயர்ந்து நிற்கிறது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.

ஆக மக்களின் அவலத்தை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Actor Ponvannan indirectly slams Modis Statue of Unity

Actor Ponvannan indirectly slams Modis Statue of Unity

WhatsApp Status 15 நொடியாக குறைய இதான் காரணம்; பாத்து செய்யுங்கப்பு

WhatsApp Status 15 நொடியாக குறைய இதான் காரணம்; பாத்து செய்யுங்கப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

COVID 19 WhatsApp reduces Status video time to 15 seconds கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளிலும் இது போன்ற நடவடிக்கைகள் உள்ளதால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிகின்றனர். இதனால், இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
செல்போனிலேயே தங்கள் நேரத்தை கழிக்கின்றனர்.

மேலும் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

அதே சமயத்தில் கொரோனா குறித்த வரும் தகவல் உண்மையா? என ஆராயாமல் பார்வேட் செய்கின்றனர்.

இதனால் தவறான தகவல்களும் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

இதனால் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த, வாட்ஸ் அப் வீடியோ ஸ்டேட்டஸ்க்கான கால அளவு குறைத்துள்ளது.

இதற்கு முன்பு வரை 30 நொடிகள் வீடியோ ஸ்டேட்டஸ் இருந்தது. ஆனால், தற்போது முதல் 15 நொடிகளே வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

மேலும் பல செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் இண்டர்நெட் டேட்டாவை பார்த்து சிக்கனமாக பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்தனர்.

ஆக.. மக்களே பாத்து செய்யுங்கப்பா…

COVID 19 WhatsApp reduces Status video time to 15 seconds

BREAKING ஆயுதமின்றி வீரர்களை போருக்கு அனுப்பலாமா.? அரசுக்கு கமல் கேள்வி

BREAKING ஆயுதமின்றி வீரர்களை போருக்கு அனுப்பலாமா.? அரசுக்கு கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal request to Govt regarding Medical equipment for Doctorsஉலகமெங்கும் கொரோனா வைரஸ் தன் கோரதாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால் பல உயிர்கள் தினம் தினம் செத்து மடிகிறது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1 வாரம் ஆகி விட்டநிலையில் மக்கள் வெளியே சென்றுவருவதால் இதன் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது.

ஒரு பக்கம் மருத்துவர்கள் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த போராடி கொண்டிருக்க மற்றொரு பக்கம் வெட்டியாக வெளியே திரியும் மக்களை கட்டுப்படுத்த காவல்துறை போராடி வருகிறது.

துப்புரவு தொழிலாளர்களும் பத்திரிகையாளர்களும் கொரோனா பீதியிலும் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமங்லஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் கூறியுள்ளதாவது…

Kamal Haasan
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

என அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

Kamal request to Govt regarding Medical equipment for Doctors

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Daksha team is helping the TN Govt to battle Corona Virusகொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் தீவிரமாக பணியாற்சி வருகின்றனர்.

அரசின் உள்ளாட்சித் துறை மூலமாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினியும் வீதி வீதியாக தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியானது பெரிய பணி என்பதால் சுகாதாரத் துறை பணியாளர்களைக் கொண்டு முழுமையாக செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

ட்ரோன்களிலும் வைத்து பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?

இந்த நிலையில் உள்ளாட்சி துறைக்கு உதவிடும் வகையில் நடிகர் அஜித் ஆலோசனை வழங்கிய தக்ஷா என்ற அமைப்பைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலரும் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Ajiths Daksha team is helping the TN Govt to battle Corona Virus

More Articles
Follows