தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் நீர்நிலைகளில் கடவுள் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறிய வழிப்பாட்டு தலங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் வழிப்பாடு நடத்த அனுமதி.
கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை என என்ற உத்தரவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.