தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் பல உயிரிழப்புகள் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் வீட்டில் உள்ளே அடங்கி கிடங்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 4-வது முறையாக இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது…
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
உலகில் பல நாடுகள் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றன.
ஊரடங்கால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.
எனவே கொரோனாவை தடுப்பதற்காக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
ஏப்ரல் 20-ம் தேதி வரை கண்டிப்புடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.
அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்த பகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்படும். தளர்வுகளுக்கு பிறகு கொரோனா மீண்டும் பரவினால் நிச்சயம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Corona lockdown extend till May 3 few conditional relief from April 20 says Modi