தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் நாளை மே 31 தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.
ஒரு பக்கம் கொரோனா உயிர் பலி அதிகரித்து வந்தாலும் 2 மாதங்களாக மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
எனவே பிரதமருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் நடத்தி ஆலோசனையின் பிறகு பொது முடக்கம் நீட்டிப்பு என அறிவித்துள்ளனர்.
ஜூன் 30 வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜூன் 8ஆம் தேதி முதல் 3 கட்டங்களாகத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ஆம் தேதி முதல் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.
அதாவது அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அதில்
ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது
* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.
* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.
* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.
* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.
* ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.
* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Corona Lock down to continue in Containment zones till June 30