தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு குறித்து தற்போது மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அதன் தொகுப்பு இது…
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னா பின்னமாக்கியிருப்பது வேதனையாக உள்ளது.
நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்.
21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம். உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி, ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.
ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசம் மற்றும் N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம்.
Y2k பிரச்னையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்.
இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.
உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் – இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதில் சில நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் இருக்கும். மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.
என பேசினார் பிரதமர் மோடி.
மேலும் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
Corona Lock down 4 will be in new form and with new rules says Modi