இயக்குனரானார் காமெடி நடிகர் கோதண்டன்..; ரசிகர்கள் பாராட்டு.!

இயக்குனரானார் காமெடி நடிகர் கோதண்டன்..; ரசிகர்கள் பாராட்டு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருபவர்கள் ஏராளம்.

அந்த வரிசையில் முல்லை கோதண்டம் ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இதில் கோதண்டம் ஒரு சில படங்களில் தனியாகவே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

அந்த குறும்படத்தின் பெயர் ‘இருட்டில் வெளிச்சம்’.

இது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

15 நிமிட ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் பார்வையற்றவராக கோதண்டம் நடித்துள்ளார்.

கைகால் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அடுத்தவன் சொத்தை திருடியும் அடுத்தவர் பணத்தை அபகரித்தும் வாழ்கின்றனர்.

ஆனால் கண் பார்வையற்றவர்கள் இருட்டிலே வாழ்ந்தாலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வெளிச்சமாக வாழ்கிறார்கள் என்ற கருத்தை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் கோதண்டத்தின் நடிப்பையும் அவரது இயக்கத்தையும் நல்ல கருத்தையும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோ இதோ…

நயன்தாரா அறிக்கையால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்

நயன்தாரா அறிக்கையால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

திரைப்பட துறையில் முன்னணியில் இருக்கும் அவர் , தனது பாலிவுட் அறிமுகமான ‘ஜவான்’ படத்தில் பணிபுரிகிறார்.

இதில் ஷாருக்கான் நடித்தார் மற்றும் அட்லீ இயக்கியுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“இது எனக்கு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாகும், நான் நன்றியுணர்வுடன் நிறைந்துள்ளேன்.

எங்கள் ‘கனெக்ட்’டைப் பார்த்து ஆதரவளித்த அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.

தொடர்ந்து, உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, ரசிப்பவர்களுக்கு என் நன்றிகள் என்றார் நயன்.

அஜீத் குமாரின் ‘ஏகே 62’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இங்கே

அஜீத் குமாரின் ‘ஏகே 62’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படமும் தயாராகி வருகிறது, மேலும் ஒரு ரெட் ஹாட் அப்டேட்டும் இருக்கிறது .

விஜய்யின் ‘தெறி’ மற்றும் ‘சர்தார்’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வில்லியம்ஸ் மற்றும் சிவன் ஆகியோர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்காக ஒத்துழைத்துள்ளனர்.

‘ஏகே 62’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் கூட்டணி.; மல்யுத்த வீரர் மோகன்லால் உடன் கைகோர்க்கும் கமல்

மீண்டும் கூட்டணி.; மல்யுத்த வீரர் மோகன்லால் உடன் கைகோர்க்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்குகிறார்.

‘ஆமென்’ படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுத மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.

ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும்.

இந்த கதையில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறாராம்.

இந்த நிலையில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஏற்கனவே ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

சமூக விழிப்புணர்வு கொண்ட அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் ஃபேமிலி லைப்.; இப்போ டாக்டராகிய நடிகை பாவனா.!

திருமணத்திற்கு பின் ஃபேமிலி லைப்.; இப்போ டாக்டராகிய நடிகை பாவனா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகும் திறமையும் நிறைந்த நடிகை பாவனா.

மலையாள நடிகையான இவர் தமிழில் நடிகர் மாதவன், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாளத்தில பிரபலமான இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் ‘ஹன்ட்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் பாவனா.

இதில் இவர் டாக்டராக வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

நயன்தாராவுடன் ஒப்பிடுவது குறித்து முதல்முறையாக மனம் திறந்த த்ரிஷா

நயன்தாராவுடன் ஒப்பிடுவது குறித்து முதல்முறையாக மனம் திறந்த த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க முதலில் த்ரிஷா தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் சில காரணங்களால் அந்த பாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

நயன்தாராவுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “என்னை நடிகை நயன்தாராவுடன் ஒப்பிடும் நபர்களை சமூக வலைதளங்களில் வரவேற்கிறேன்.

நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினோம்.

இருவரும் ஒரே மாதிரியான நடிகர்களுடன் நடித்துள்ளோம். அது முக்கியமானது என்று நினைக்கிறேன். எங்கள் இருவரையும் ஒப்பிடுவதற்கான காரணம்.” என்றார் நடிகை த்ரிஷா.

More Articles
Follows