தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருபவர்கள் ஏராளம்.
அந்த வரிசையில் முல்லை கோதண்டம் ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.
இதில் கோதண்டம் ஒரு சில படங்களில் தனியாகவே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.
அந்த குறும்படத்தின் பெயர் ‘இருட்டில் வெளிச்சம்’.
இது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
15 நிமிட ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் பார்வையற்றவராக கோதண்டம் நடித்துள்ளார்.
கைகால் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அடுத்தவன் சொத்தை திருடியும் அடுத்தவர் பணத்தை அபகரித்தும் வாழ்கின்றனர்.
ஆனால் கண் பார்வையற்றவர்கள் இருட்டிலே வாழ்ந்தாலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வெளிச்சமாக வாழ்கிறார்கள் என்ற கருத்தை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் கோதண்டத்தின் நடிப்பையும் அவரது இயக்கத்தையும் நல்ல கருத்தையும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வீடியோ இதோ…