தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா.
இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள்.
நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு 2020-ம் வருடம் குண்டூர் ஐ.ஜி. மகன் சைதன்யாவுடன் திருமணம் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கினார் நிஹாரிகா.
இதனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் செய்திகள் பரவின.
இந்நிலையில், ஹைதராபாத் அருகிலுள்ள குக்கட்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் நிஹாரிகா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நடிகை நிஹாரிகா தன் கணவர் சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
chiranjeevi daughter Niharika confirms divorced with husband Chaitanya