தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய நாடு முழுவதும் நாளை செப். 13ல் மருத்துவ படிப்பு தகுதிக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்..
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வுக்கு, மாணவர்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே வர தொடங்க வேண்டும்.
காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு தலா 100 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படுவர்.
மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்த பின் அங்கு தரப்படும் முகக் கவசத்தை தான் அணிந்து கொள்ள வேண்டும்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக் கூடாது.
வெளியில் தெரியும் படியான பாட்டிலில் தான் குடி தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
மாணவர்கள் படிவத்தில் கையெழுத்து போடும் முன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வினாத்தாள் கொடுக்கும் முன் தேர்வு கண்காணிப்பாளர் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
தேர்வு முடிந்த பின் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வரக் கூடாது.
Check NEET 2020 New Rules Amid COVID-19