தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது.
தற்போது சில வணிகங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தியேட்டர்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மட்டும் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை பார்த்தோம்.
இதனை தொடர்ந்து பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
அதில்…
முதலாவதாக… பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவேட்டில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், நேடிரயாக பள்ளி வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது-
மாணவர்களுக்கு மதிய உணவு உரிய முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்பட வேண்டும். எழுத்துப்பூர்வ தேர்வுகளை தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு அடுத்த 3 வாரங்களுக்கு தேர்வுகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Centre issues guidelines for reopening of schools from Oct 15th