தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உடத்தரவு அமலில் உள்ளது.
முதன்முறையாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 14வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
அப்போதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்து வருவதாலும் 2வது முறையாக மே 3 வரை ஊரடங்கு இருக்கும் என அறிவித்தார் மோடி.
தற்போது மே 3 ஆம் நெருங்கி வரும் வேளையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு. அதாவது மே 4 முதல் மே 17 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் .
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Centre extends the Nation wide Corona lock down till May 17