தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களாக திரையுலகினரால் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்பு என்றால் அது..”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021″ தான்.
அதை திரையுலகினர் எதிர்க்க காரணம் என்ன? என்பதை இங்கே பார்ப்போம்.
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021
பொதுவாக ஒரு திரைப்படம் மக்கள் பார்வைக்கு வரும் முன் சென்சார் செய்யப்படும்.
அந்த படத்திற்கு ‘யு, யு/ஏ அல்லது ஏ’ சான்றிதழை தணிக்கை குழு கொடுக்கும்.
தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வர இருக்கும் இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும்.
தணிக்கை குழு வழங்கும் சான்றிதழ்களோடு சேர்த்து வயது வாரியாகவும் சான்றிதழ்கள் அதாவது ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என வழங்க இருக்கிறது இந்த புதிய சட்டம்.
அதாவது சென்சார் வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்ய முடியும்.
இன்னும் சொல்லப்போனால் அந்த தணிக்கை சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா மூலம் அதிகாரம் கிடைக்கும்.
மேலும், இதில் படத்தின் கருவோ அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோ மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.
இந்த சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் இந்திய அரசு சார்பில் கருத்து கேட்கப்பட்டது.
(கருத்து கேட்புக்கு கடைசி நாள் நேற்று ஜூலை 2.)
இதுபோன்ற பல திருத்தங்களை இந்த சட்டம் முன் மொழியவுள்ளதால் தங்கள் கருத்துச் சுதந்திரம் தடைப்படும் என படைப்பாளிகள் அச்சம் கொல்கின்றனர்.
எனவே தான் இந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரையுலகினர் எதிர்க்கின்றனர்.
Celebs against cinematograph act 2021