தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டிபிடிக்கப்பட வில்லை.
தினம் தினம் கொரோனாவினால் பலியானர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மருத்துவ நிபுணர்களும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நலையில் கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற வைரஸ் உள்ளதாகவும், எனவே கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்று அதுல்யகங்கா என்ற அமைப்பு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.
இது குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியன இது குறித்து முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டது.
பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளில் மூழ்கி உள்ளதால், இது பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது என்று ஐசிஎம்ஆர் Indian Council of Medical Research தெரிவித்து விட்டதாம்.
Indian Council of Medical Research
Can Ganga river water treat Covid 19 ICMR says no