தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
அதன்பின்னர் மாதம் மாதம் மத்திய அரசு ஊரடங்கை நீடித்து வந்தாலும் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதாவது பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி அக்டோபர் 31ம் தேதி வரை இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தற்போது நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி வெளியான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் நவம்பர் 30 வரை பொருந்தும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எவ்வித கட்டுப்பாடு, முன்னனுமதி பெற அவசியம் இல்லை.
ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக கட்டுப்பாடு விதிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
BREAKING : Lokdown extended to November 30