தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்காள் மகன் நவீன் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இது பெரும் சர்ச்சையானது. இதனால் கோபமடைந்த இஸ்லாமிய மக்கள் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.
குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால், உயிர் தப்பினர்.
நவீன் வீட்டுக்கும், கோவிலின் நிர்வாகியான முனே கவுடா என்பவரின் வீட்டுக்கும் தீவைத்தனர். எம்.எல்.ஏ.வின் வீட்டு வாகனங்களுக்கும் தீக்கிரையாக்கப்பட்டது.
போலீஸ் வாகனங்களுக்கும், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல்பைர சந்திரா பகுதிகளில் தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வள்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர்.
போலீசார் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்ணீர்புகை வீசியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதனையடுத்து டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200 மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாசின் பாட்ஷா(வயது 28), வாஜித் அகமது(25) மற்றும் நாகவாராவை சேர்ந்த சேக்சுதீன்(24) ஆகிய இளைஞர்கள் பலியானார்கள்.
இதனால் இரு தரப்புக்கு பெரும் மோதல் உருவானது.
காவல்துறை மீது வன்முறையாளர்கள் கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வன்முறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 78 பேர் காயமடைந்தனர். கிட்டதட்ட 300 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.
தற்போது, அந்த பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது.
வன்முறைக்கு வித்திட்டதாக எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த முஜாமீல் பாட்ஷா, ஆயாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் , செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி, ”குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடத்திலிருந்து உத்தரபிரதேச அரசு நஷ்ட ஈடு வசூலித்தது. அதேபோல, கர்நாடகத்திலும் வசூலிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலீசிடம் இருந்து தப்பிட முடியாது” என தெரிவித்துள்ளார்.