தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திணறி வருகிறது.
ஆனால் பள்ளி பயிலும் மாணவர்கள் மட்டும் ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டம் தான் எனலாம்.
ஏனென்றால் பள்ளித் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதனையடுத்து காலேஜ் மாணவர்களும் தங்களை ஆல் பாஸ் ஆக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
ட்விட்டர் தளங்களில் ட்ரெண்ட்டிங்கிலும் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதனையடுத்து அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்.
அரியர் மாணவர்களின் அரசனே என வாசகங்களை டிசைன் செய்துள்ளனர்.