தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆணியே புடுங்க வேணாம் என்ற படத்தலைப்பு, அறிவுக் கொழுந்துக செந்தில்பரிதி, சென்சார் அதிகாரிகள், தமிழ் சினிமா படைப்பாளிகள்
தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு போதிய சுதந்திரம் இல்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது.
சென்சார் செய்யும் அதிகாரிகளின் கெடுபிடிகளே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது சென்சார் அதிகாரிகளின் ஓவர் பிரச்சினையால் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளார் ஒரு இயக்குனர்.
ஆணியே புடுங்க வேணாம் என்று தலைப்பிடப்பட்டு இருந்த ஒரு படத்திற்கு தற்போது அறிவு கொழுந்துக என்று பெயரிட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் படத்தை சென்சாருக்கு அனுப்பிய பிறகே இந்த தலைப்பை மாற்றி வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் பிரஸ் மீட்டின் போது இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்தனர்.
செந்தில் பரிதி இயக்கியுள்ள இப்படத்தை இ. ஆனந்த் என்பவர் தயாரித்துள்ளார்.
வெங்கட் கௌதம் ஒளிப்பதிவு செய்ய, கவின் இசையமைத்துள்ளார்.
அடுத்த ஜீலை மாதம் 13ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.