5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்ற ’அப்பா காண்டம்’

5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்ற ’அப்பா காண்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Appa Kaandam 2019 Tamil Short Film crossed 5L views in 5 daysயூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் குறும்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்று இருக்கும் அதே வேளையில் இயக்குனர் ஆர்வா’விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வளர்ந்து வரும் இயக்குனர் ஆர்வா இந்த குறும்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இவர் இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார்…

இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகர் மற்றும் ஹரிஷ் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள்.

இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர்… அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் சிகரம் தொடு திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்தது இதுவே முதல் முறை.

அதற்கு காரணம் இயக்குனர் ஆர்வா, ஜாக்கிசேகர் திறமையின் மேல் வைத்த நம்பிக்கை எனலாம்.

இந்தி திரைப்படம் பொறுப்புள்ள நவீனகால அப்பா பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.

இந்த திரைப்படம் யூடியூபில் கடந்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு 70 வது குடியரசு தினத்தன்று வெளியானது. 26 நிமிஷம் ஓடும் இந்த குறும்படமானது வலையேற்றிய ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாஸிட்டிவ் கமெண்டுகளை பெற்றுள்ளது.

எதிர்கருத்துக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அதற்கு காரணம், படத்தில் நடித்த ஜாக்கி சேகரின் அப்பா கேரக்டர் போல தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று படம் பார்த்த ரசிகனை ஏங்க வைத்திருக்கிறது.

இதுபற்றி இயக்குனர் ஆர்வாவிடம் கேட்டபோது…

எனது முதல்படம் 5 அயிரம் பேர் பார்த்தால் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் 6 லட்சம் பார்வையாளார்கள் எனும் போது நான் சரியாக பயணித்திருப்பதாக எண்ணுகிறேன்.

பாஸிட்டிவ் கமெண்டுகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் நெகட்டிவ் கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

காண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது தமிழ் காண்டம் என்பதை குறிக்கும்.

உதாரணத்திற்கு சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம்.
பொதுவாக காண்டம் என்றால் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள்.

இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை என்று இயக்குனர் ஆர்வா, காண்டத்திற்கான விளக்கத்தை தெரிவிக்கிறார்.

சாம் இமயவனின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்த அதே வேளையில் ஏஆர் ரனோஜ்’ன் இசையும் பின்னனி இசையும் இந்த குறும்படத்துக்கு மெருகூட்டின என்றால் மிகையாகது.

படத்தொகுப்பை பிரதிப் காட்சிகளை கோர்வையாக்கி இந்த திரைப்படத்தை ரசிக்க வைத்து இருக்கின்றார்..
மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. தியாகராஜன் கவனித்துக்கொள்ள ரெட் ஸ்டுடியோ தயாரிப்பு மேற்பார்வை பணிகளை நெல்சன் பாபு மற்றும் பாபு மாதேவ் செய்து முடித்துள்ளனர்.

விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து அப்பா காண்டம் குறும்படத்தை தயாரித்து வழங்கியுள்ளார்கள்.

இந்த திரைப்படத்துக்கு தயாரிப்பு செலவாக சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்து இந்த குறும்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் ஸ்டுடியோ சார்பில் நிறைய குறும்படங்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Appa Kaandam 2019 Tamil Short Film crossed 5L views in 5 days

உலகளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல்களில் ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’

உலகளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல்களில் ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Australias green left weekly has listed tcl collectives magizhchi albumஇயக்குனர் பா.இரஞ்சித் தின் இசைக்குழுவான “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ” குழுவினரின் “மகிழ்ச்சி” ஆல்பம் சமீபத்தில் வெளியானது.

முழுக்க முழுக்க தனியிசைக்கலைஞர்களைக்கொண்டு பாடி இசையமைத்த இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது. தென்மா இசையமைத்திருந்தார்.

இந்தியாவில் நிலவும் சாதிய, வர்க்க, பாலின வேற்றுமைகளை சாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இன்னிலையில் உலக அளவில் அரசியல் பார்வையுடைய பத்து பாடல் தொகுப்புக்களில் “மகிழ்ச்சி” ஆல்பமும் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிரீன்லெப்ட் ஊடகத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் தொகுப்புக்களில் “மகிழ்ச்சி” என்கிற பாடலை கபாலி, காலா படப்புகழ் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Australias green left weekly has listed tcl collectives magizhchi album

Australias green left weekly has listed tcl collectives magizhchi album

தல 59 பிங்க் ரீமேக் தெரியும்.; தல 60 படம் எப்படி தெரியுமா..?

தல 59 பிங்க் ரீமேக் தெரியும்.; தல 60 படம் எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith starrer Thala 60 movie news updatesஅஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படம் மக்களின் வரவேற்பை பெற்று இன்னும் தியேட்டரிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை அடுத்து போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அஜித்.

இது ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு தற்காலிகமாக தல 59 என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்க யுவன் இசையமைக்கிறார்.

இப்படத்தை அடுத்து தல 60 படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த தல 60 படமானது அஜித் ரசிகர்களை கவரும் வகையில் மாஸ் மற்றும் கமர்ஷியலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Ajith starrer Thala 60 movie news updates

நாங்க ஆட்சிக்கு வரும்போது போலீஸ் யூனிபார்மை மாற்றுவோம்.. : சீமான்

நாங்க ஆட்சிக்கு வரும்போது போலீஸ் யூனிபார்மை மாற்றுவோம்.. : சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We will change TN Police uniform while we come to rule says Seemanசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீமான் கலந்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் பேசும்போது…

“பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது.. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும்..

அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது..

காக்கியை பார்த்தாலே பலருக்கு வெறுப்பு வருகிறது. எங்கள் ஆட்சி வரும்போது போலீஸ் யூனிபார்மை மாற்றுவோம். வேறு கலர் கொடுப்போம்.

ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன.

அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம்.

அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை.. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை.

தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள்.. அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.

இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.” எனப் பேசினார் சீமான்.

We will change TN Police uniform while we come to rule says Seeman

sri priyanka miga miga avasaram

நயன்தாராவுக்கு லேட்டா கிடைச்சது எனக்கு உடனே கிடைச்சிட்டு..: ஸ்ரீ பிரியங்கா

நயன்தாராவுக்கு லேட்டா கிடைச்சது எனக்கு உடனே கிடைச்சிட்டு..: ஸ்ரீ பிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sri Priyanka speech at Miga Miga Avasaram trailer launchசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது…

“நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன்.

அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்.

இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும்.

தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்.

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது.

ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது.. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை..

ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்” என்றார்.

நடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன் பேசும்போது…

“ஸ்ரீ பிரியங்கா வருத்தப்பட தேவையில்லை இங்கே தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
ஆனால் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும்.. நம்மைப் போன்ற பெண்களைப் பார்த்துத்தான் இன்னும் தமிழ் பெண்கள் இந்த சினிமாவிற்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள்.

அதற்கு நாம் ஒரு காரணமாக இருப்போம். ஆனால் இப்போதுள்ள படங்களில் குடும்பம் பந்தம் பற்றி காணப்படுவதில்லை அப்படிப்பட்ட படங்கள் வரும்போது தான் பெண்கள் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்“ என கூறினார்.

Actress Sri Priyanka speech at Miga Miga Avasaram trailer launch

Miga Miga avasaram மிக மிக அவசரம்

அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி

அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jakki sherofகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் ..

சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.

எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி பேசினோம்..

இந்த படம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன ?

· இதில் நான் அகோரியாக நடிக்கிறேன்..

டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான காரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன்..

ஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்…என் உருவத்தை மட்டும் அல்ல..என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்..

டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்..

நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன்..ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்…

சிவபக்த அகோரியாக நடிக்கிறேன்…நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.

அகோரி என்றால் ஆ…ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல..

அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம்.

எனக்கே இது புது வேடம் தான் டைரக்டர் சொன்னதை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன்.

நான் அடிக்கடி சென்னை வருவேன்..

80 ம் வருட நடிகர் நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன்..

ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி சாம்பார் ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள்..ரேவதி ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.

நிறைய பேர் அந்த நடிகை இந்த நடிகை எப்படி டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கேட்கிறார்கள்…அவர்கள் பேர் எல்லாம் எனக்கு தெரியாது…நான் நிறைய படங்களை பார்ப்பது கிடைதாது…

எல்லோருமே சிறப்பாக நடிக்கிறார்கள்..நல்லா டான்ஸ் ஆடுகிறார்கள்..இல்லா விட்டால் சினிமா துரத்தி விட்டிருக்குமே..

என்னை பொருத்தவரை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள்..

ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை ,சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.

இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார்..

படம் பற்றி டைரக்டர் கஸ்தூரி ராஜா கூறியபோது…

இந்த காரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான்..

அவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை நிறைய வேலை வாங்கும் ..மலை ,காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும்..அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது..என்று சொல்லி விட அதற்கப்புறம் வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது.

கதையை கேட்டு முடித்த அவர் இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம்.. இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கு..என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம் என்று கேட்க ஆடிப் போய் விட்டேன்..

என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார் அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாக பாண்டி முனி வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார் கஸ்தூரிராஜா.

More Articles
Follows