‘பேட்ட’ தொடங்கி ‘தர்பார்-அண்ணாத்த’ படத்திலும் கனெக்ட்டாகும் விஜய்சேதுபதி

‘பேட்ட’ தொடங்கி ‘தர்பார்-அண்ணாத்த’ படத்திலும் கனெக்ட்டாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth vijay sethupathiதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த போதிலும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

பேட்ட படத்தை முடித்து முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் நடித்தார் ரஜினி.

தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினியின் இந்த இரு படங்களுடன் கனெக்டாகியிருக்கிறார் மக்கள் செல்வன்.

விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படத்திற்கு துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் இப்பட சிங்கிள் டிராக் தகவலை வெளியிட்டுள்ளனர்.

‘அண்ணாத்தே சேதி’ என்ற பாடலை வெளியிட இருக்கிறார்களாம்.

இதிலும் அண்ணாத்த என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

அதாவது டைட்டிலை போல பாடலிலும் ரஜினி படம் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடல் வருகிற திங்கட்கிழமை ஆகஸ்ட் 3 மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது.

96 படப்புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்து வருகிறார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க முக்கியமான கேரக்டரில் பார்த்திபன் நடிக்கிறார்.

தற்போதைய நவீன அரசியல் கதைக்களத்துடன் துக்ளக் தர்பார் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காங். தலைமைக்கு தலையாட்ட மாட்டேன்.; பாஜகவில் சேர்கிறாரா குஷ்பூ.?

காங். தலைமைக்கு தலையாட்ட மாட்டேன்.; பாஜகவில் சேர்கிறாரா குஷ்பூ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushbooஓரிரு தினங்களுக்கு முன் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது.

இதற்கு வழக்கம்போல ஆதரவும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு அவர்கள் பாஜக. அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கையை வரவேற்றுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்.. புதிய கல்வி கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வு என பதிவிட்டு இருந்தார்.

இதனால் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு உருவானது.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, குஷ்புவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்

மேலும் குஷ்பூ பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த தகவலை குஷ்பு மறுத்துள்ளார்.

காங். தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என்றும், நாட்டின் குடிமகனாக கருத்தை வெளியிடுவேன் என குஷ்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாகுகிறது.. தமிழக முதல்வர் சம்மதம்.?

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாகுகிறது.. தமிழக முதல்வர் சம்மதம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நடிகர் விஷால் தலைவராக இருந்து வந்த நிலையில் பதவிகாலம் முடிவடைந்துள்ளது.

விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தலைமையில் தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன.

மேலும் விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட உள்ளது.

மேலும் தயாரிப்பாளர் தானு தலைமையில் ஒரு அணியும் களத்தில் இறங்கவுள்ளது.

இந்தச் சங்கத்தில், 1200 தயாரிப்பாளர்கள் இருந்தாலும் கிட்டதட்ட 200 தயாரிப்பாளர்கள் படத்தை தயாரித்து வருகிறார்கள்.

மற்றவர்கள் தற்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர்கள் நலனுக்காக புதிய சங்கம் ஒன்றை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும் சிவா செயலாளராகவும் சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை பிரபல தயாரிப்பாளர்கள் இணைந்து தாய்ச் சங்கம் ஒன்றை வைத்துள்ளனர்.

தற்போது படம் தயாரிப்பவர்கள் ஒரு சங்கமாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே அந்த பாணியில் தமிழ்த் திரையுலகம் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தங்கை இலக்கியா மகன் பர்த்டே பார்ட்டியில் சிம்பு

தங்கை இலக்கியா மகன் பர்த்டே பார்ட்டியில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குக்கு பின் அதாவது அரசு அனுமதி கிடைத்த பின் இதன் சூட்டிங் தொடங்கப்படும்.

சிம்புவின் பட அப்டேட் வராதா? என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரின் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிம்புவின் தங்கை இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

இலக்கியாவின் மகன் ஜேசன் பிறந்தநாள் பார்ட்டியில் அந்த குழந்தையுடன் கேக் வெட்டியுள்ளார் சிம்பு.

இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது சிம்பு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Exclusive சீரியஸா சொல்றேன்.. எனக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க..; மெகா ஹிட் டைரக்டருடன் ரஜினி பேச்சு

Exclusive சீரியஸா சொல்றேன்.. எனக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க..; மெகா ஹிட் டைரக்டருடன் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Desingh Periyasamy is elated over Rajinis appreciation for Kannum Kannum Kollaiyadithaalசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காதா? என பல இயக்குனர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

அப்படியொரு இருக்கையில்… சீரியஸா சொல்றேன்.. எனக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று ஒரு இயக்குனரிடம் ரஜினி சொன்னால் எப்படி இருக்கும்..?

அப்படி ஒரு வாய்ப்பு அதுவும் ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்த அந்த டைரக்டருக்கு கிடைத்துள்ளது.

யார் அவர்? என்றா கேட்கிறீர்கள்.. அவர்தான் தேசிங் பெரியசாமி.

படத்தின் பெயர்… கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

துல்கர் சல்மான், ரித் வர்மா, ரக்சன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படத்தை இயக்கியவர் இவர்.

Viacom 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மசாலா கஃபே ஹர்ஷவர்தன் மற்றும் ரமேஷ்வர் இசையமைத்திருந்தனர்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்த போதிலும் கிட்டதட்ட 4 வருடங்களாக இப்பட வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியானது.

முதலில் ஓபனிங் கூட இல்லாத இந்த படத்திற்கு பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையால் பெரும் வரவேற்பு கிடைத்தது.

பின்னர் எவரும் எதிர்பாராத வகையில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தின் நிறைய காட்சிகளில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பது நிச்சயம் பலருக்கு புரிந்திருக்கும். அதற்கு காரணம் தேசிங்கு தீவிர ரஜினி ரசிகர் என்பதுதான்.

அப்படியிருந்த அவருக்கு ரஜினியிடம் இருந்து போன் கால் வந்தால் எப்படியிருக்கும்..?

இன்று ஜீலை 30ஆம் தேதி இந்த படத்தை பார்த்த ரஜினி அவர்கள் இயக்குனர் தேசிங் பெரியசாமியை அழைத்து பாராட்டியுள்ளார்.

படம் சூப்பர்.. எக்சலண்ட்.. ரொம்ப சூப்பர்.. நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு… சாரி.. இப்ப தான் படத்தை பார்க்க டைம் கிடைச்சது.

எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க.. சீரியசா சொல்றேன்.. திங்க் பண்ணுங்க.. என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட தேசிங் பெரியசாமி பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

அவரின் ட்விட்டரில்… இன்று முழுவதும் இந்த வார்த்தைகளே ஓடிக்கொண்டிருக்கிறது என பரவசத்துடன் பகிர்ந்துள்ளார்.

Desingh Periyasamy is elated over Rajinis appreciation for Kannum Kannum Kollaiyadithaal

kannum kannum kollaiyadithal movie team

நல்ல கதை இருக்கா..? ஓடிடி தளத்தில் இயக்குநராக வாய்ப்பு வழங்கும் எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்

நல்ல கதை இருக்கா..? ஓடிடி தளத்தில் இயக்குநராக வாய்ப்பு வழங்கும் எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20200730-WA0118தாகமெடுத்தவர்கள் தண்ணீரைத் தேடுகிறார்கள்; தண்ணீரும் தாகமெடுத்தவர்களையே தேடுகிறது” என்ற நிஜமொழிக்கேற்ப தகுதி வாய்ந்தவர்கள் நல்ல வாய்ப்பை தேடுகிறார்கள்.

நல்ல வாய்ப்பை தர நினைப்பவர்களும் திறமையானவர்களைதே தேடுகிறார்கள். வெப்சீரிஸ் மற்றும் ஓடிடி தளத்திற்கான திறமையான கதைகள் திரைக்கதைகள் உங்களிடம் இருந்தால் இதுவொரு சரியான வாய்ப்பு.

பிரபல முன்னணி ஓடிடி தளங்களில் மக்கள் படம் பார்ப்பதும் வெப்தொடர்கள் பார்ப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் புதிய முயற்சிகளுக்கும் திறமையான நபர்களுக்கும் வாய்ப்புகளை அமைத்துத் தரும் களமாக இருக்கிறது.

அப்படியான வாய்ப்புகளை வழங்கி, இணையத்தில் சிறப்பான கதையம்சம் தொழில்நுட்பம் நிறைந்த கதைகளை வெப்சீரிஸாகவும் திரைப்படமாகவும் கொண்டு வருவதற்கான ஒரு துவக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த பிரபல எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் நிறுவனம்.

வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களுக்கான மிகச்சிறந்த கதைகளோடு இருப்பவர்களுக்கு அற்புதமான களத்தை அமைத்து தர இருக்கிறது.

இந்நிறுவனம் தமிழில் பல டிவி சீரியல்களை வெற்றிகரமாக தயாரித்து வரும் நிறுவனமாகும். மேலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தற்போது ஓடிடி தளத்தில் தடம் பதித்து ஒரு வெப்சீரிஸை தயாரித்து முடித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இந்நிறுவனம் நேரடியாக ஓடிடி ப்ளாட்பாரத்திற்கு தமிழ் படங்களையும், தரமான வெப்சீரிஸ்களையும் முன்னணி ஓடிடி தளங்களோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது. ஒரு படைப்பு மிகச்சிறந்த படைப்பாக உருவாக கன்டென்ட் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வெப்சீரிஸ்களையும் திரைப்படங்களையும் தயாரிக்க இருக்கிறது.

இதற்காகவே கதை இலகா என்ற ஒரு பிரிவை உருவாக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. படம் இயக்கிய இயக்குநர்களில் இருந்து உதவி இயக்குநர்கள் வரை எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் நிறுவனத்தை கதை சொல்லுவதற்கு அணுகலாம்.

நீங்கள் சொல்லும் கதை பிடித்திருந்தால் அதற்கு அடுத்த முன்னெடுப்புகள் எல்லாமே வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும்.

கதை சொல்ல வருபர்கள் முதலில் இந்த 9840012308, 7418214608 போன் நம்பர்களுக்கு அழைக்கவும். நேரில் வர இயலாத சூழலில் இருப்பவர்கள் மெயிலில் கதை அனுப்பலாம். அதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது.

மேலும் இந்நிறுவனம் வெகுவிரைவில் இயக்குநர்கள் மற்றும் புரொடக்சன் நிறுவனங்களை இணைக்கும் ஒரு மிகப்பெரிய இணையதள சேவையையும் தொடங்க இருக்கிறது.

*முக்கியக்குறிப்பு*

தகுதியான திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களிடம் இருந்து, ஓடிடி ப்ளாட்பாரத்திற்கு வெப்சீரிஸ் மற்றும் திரைப்படத்திற்கான சிறந்த கன்டென்டை எதிர்பார்க்கிறோம்; வரவேற்கிறோம்

முதலில் நீங்கள் போனில் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் உங்களைப் பற்றிய அறிமுகத்தை அனுப்ப வேண்டும். அவர்கள் அதைப்பார்த்த பின் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் உங்களிடம் பேசுவார்.

இவை சரியாக நடந்த பின் உங்களுக்கு கதை சொல்வதற்கான நேரம் ஒதுக்கப்படும்.

நீங்கள் சொல்லும் கதைகள் திரைக்கதைகளுக்கான ரிசல்ட் முறையாக தெரிவிக்கப்படும். நல்ல கதைக்களுக்காகவும் இயக்குநர்களுக்காகவும் எங்கள் தயாரிப்புக் குழு காத்திருக்கிறது.

இது முழுக்க முழுக்க திறமையானவர்களுக்கான வாய்ப்பு. வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிகாண தயாராகுங்கள்.

வெற்றிபெற வாழ்த்துகள்

அன்புடன்
estrellastories.com

More Articles
Follows