BOX OFFICE KING என மீண்டும் நிரூபித்த ரஜினி.; 2.0 & சர்கார் ரெக்கார்டுகளையும் முறியடித்த ‘அண்ணாத்த’

BOX OFFICE KING என மீண்டும் நிரூபித்த ரஜினி.; 2.0 & சர்கார் ரெக்கார்டுகளையும் முறியடித்த ‘அண்ணாத்த’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி நேற்று தீபாவளியை முன்னிட்டு ரிலீசான படம் ’அண்ணாத்த.

சிவா இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளத்துடன் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. வெளிநாடுகளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 1200 திரையரங்குகளில் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தியது.

தமிழகத்தில் அதிகாலை 4.00 மணி முதல் சிறப்பு காட்சிகள் தொடங்கியது. கொட்டும் மழையிலும் ரசிகர்கள் படம் பார்க்க வந்திருந்தனர்.

படத்திற்கு 70% பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் 30% நெகட்டிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. ரஜினி நடிப்பு மற்றும் ஆக்சனை காட்சிகளை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் படத்தின் கதை பார்த்து பழக்கப்பட்ட பழைய கதை என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் நேற்றைய வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

சென்னையை பொறுத்தவரை ரஜினி நடித்த 2.0 படமே தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாகும்.

மேலும் சென்னையில் மொத்த வசூலில் 15 கோடிகளைத் தாண்டிய நான்கு படங்களில் மூன்று படங்கள் ரஜினி நடித்த (கபாலி உட்பட) படங்கள் தான். ஒன்றே ஒன்று மட்டும விஜய் நடித்த சர்கார் படமாகும்.

அண்ணாத்த படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூல் செய்துள்ளது. இது முதல் நாள் வசூலில் புதிய சாதனையாகும்.

(சில தியேட்டர்களில் டிக்கெட்டுக்கள் 500 முதல் 1200 ரூபாய் வரை விற்கப்பட்டது இந்த கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே இதில் அடங்கும்).

இதற்கு முன்பு, தமிழகளவில் முதல் நாளில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் ரஜினியின் 2.0 படம் 33 கோடியும்,, விஜய்யின் சர்கார் 31 கோடியும் வசூல் செய்தது.

அண்ணாத்த படம் ஆஸ்திரேலியாவில் நேற்று 1,14,047 ஆஸ்திரேலியன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது இந்திய ரூபாயில் சுமார் 63 லட்சங்கள் எனலாம்.

படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு குறித்து சில திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரவேற்பு குறித்து இயக்குநர் சிவா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…, “சாய் சாய்.. ‘அண்ணாத்த’ படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், சன் பிக்சர்ஸ், ஊடக நண்பர்கள், சினிமா விரும்பிகள், என்னுடைய அன்பான குடும்ப ரசிகர்கள், என்னுடைய டீம், என்னுடைய குடும்பம் அனைவருக்கும் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Annaatthe box office Collection Rajini break all records

அரசுப்பள்ளியில் இலவச வகுப்பெடுக்கும் வழக்கறிஞர் சுரேஷ் கண்ணன்.; மற்றவர்களும் செய்யலாமே!

அரசுப்பள்ளியில் இலவச வகுப்பெடுக்கும் வழக்கறிஞர் சுரேஷ் கண்ணன்.; மற்றவர்களும் செய்யலாமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30-40 ஆண்டுகளுக்கு முன் அரசுப்பள்ளி என்றாலே மிகப்பெரிய மரியாதை இருந்தது. அப்போது எல்லாம் ஊருக்கு ஓரிரு தனியார் பள்ளிகளே இருந்தன.

பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படித்தனர். ஆனால் கடந்த 10-20 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளுக்கு மதிப்பு கூடியது. இதற்கு காரணம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம்.

இந்த பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். மக்கள் வரிப்பணத்தில் அரசு சம்பளம் வாங்கும் இவர்கள் தங்கள் பணிகளை நிறைவாக செய்தால் ஏன்? தனியார் பள்ளிகளை இவர்கள் நாடவேண்டும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற கடுமையான சட்டங்கள் வந்தாலே ஆசிரியர்களின் அலட்சியம் குறையும். பள்ளிகளின் தரமும் தானாகவே உயரும்.

மேலும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் வசதிகள் சரியாக அமைக்கப்படவில்லை. பருவ வயதை எட்டிய மாணவிகளுக்கு இது பெரும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. புதுக்கோட்டையில் ஒரு பள்ளியில் கடந்தாண்டு 350 மாணவர்களே இருந்த நிலையில் தற்போது மாணவர்கள் சேர்க்கை 1000த்தை தொட்டு விட்டதாம். இதற்கு மேல் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்து விட்டாராம்.

தமிழக அரசின் நடவடிக்கையாலும் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் கூடி வருவதாலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கல்வி குறித்து இலவசமாக வகுப்பு எடுக்கள்ளதாக வழக்கறிஞர் செ. சுரேஷ் கண்ணன் முன்வந்துள்ளார்.

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும் இதனை வரவேற்பதாக கூறி பள்ளியில் வகுப்பெடுக்க அனுமதியளித்துள்ளார்.

வாரம் ஒரு முறை சட்டக்கல்வி வகுப்புகளை எடுக்கவுள்ளதாக CSK (எ) சி சுரேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இவர் தன் மகன் மற்றும் மகளை அரசுப் பள்ளிலேயே சேர்த்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக உள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும் அந்தப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1000 மாஸ்க் (முக கவசம்), சானிடைசர் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

இவரைப் போன்ற நல் உள்ளம் படைத்த நபர்கள் இது போன்ற கல்வி சேவைகளை செய்ய முன் வந்தால் அரசு பள்ளியின் தரமும் மாணவர்களின் அறிவும் மென்மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

Pudukottai BJP Legal Wing President Suresh Kannan taking Free Law class for Govt School Students

https://link.public.app/BRyu

ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ல் ரிலீஸாகும் ‘அரண்மனை 3’

ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ல் ரிலீஸாகும் ‘அரண்மனை 3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது.

‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுப் போக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

சுந்தர்.cயின் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை சந்தாதாரர்களுக்கு அளிப்பதில் ஜீ5 மகிழ்ச்சி கொள்கிறது.

Blockbuster Movie ‘Aranmanai 3’ to be released in ZEE5 on November 12th

‘ஜெய்பீம்’ பார்த்து விட்டு செங்கனியின் முன்னாள் காதலர் என்ன சொன்னார் தெரியுமா.?

‘ஜெய்பீம்’ பார்த்து விட்டு செங்கனியின் முன்னாள் காதலர் என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் 2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த அனைவருமே பாராட்டி வருகின்றனர். இது தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் இதை சூர்யா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி இருப்பார்கள் என தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சித்தார்த் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

‘ஜெய் பீம்’ படம் முழுவதும் அழுது கொண்டிருந்தேன். குற்ற உணர்ச்சியாகவும், அவமானமாகவும் உள்ளது.

தயாரிப்பாளர்கள் ஜோ மற்றும் சூர்யாவுக்குத் தலைவணங்குகிறேன். தன்னைப் பற்றி மட்டுமே திரையில் காட்டாத ஒரு படத்தை ஒரு பெரிய நடிகரால் எடுக்க முடியும் என சூர்யா நிரூபித்துகாட்டியுள்ளார்.

இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு நன்றி. நடிகை லிஜோமோல் ஜோஸ் தன் தோள்களில் படத்தை தாங்கியிருக்கிறார். ஒட்டுமொத்தப் படமும் அவர் தோளில் அமர்ந்துள்ளது.

செங்கனி வாழ்க்கையை அவரது கண்களே சொல்கின்றன. வாழ்த்துக்கள் மணிகண்டன். ஒவ்வொரு நடிகரும், படக்குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

‘ஜெய் பீம்’ படத்தை நாம் எடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும். என்னவொரு வெற்றி. ஜெய்பீம் என்றால் அன்பு. ஜெய்பீம் என்றால் ஒளி”.

இவ்வாறு சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

எல்லாம் சரி.. செங்கனியின் முன்னாள் காதலர்? என தலைப்பில் உள்ளதே என்றுதானே கேட்கிறீர்கள்..

மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இந்த லிஜோமோல் ஜோஸ்.

இவர் தான் தமிழில ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தில் சித்தார்த்துக்கு காதல் மனைவியாக நடித்திருந்தார். அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடித்து பாராட்டு பெற்றவர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அருண் ஆண்டனி என்பவரை லிஜோமோல் ஜோஸ் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

(இப்போ சொல்லுங்க லிஜா மோலின் முன்னாள் ரீல் கணவர் சித்தார்த் தானே)

Sengani ex lover praises jai bhim movie

sivappu manjal pachai

10 மாதங்களில் 30 நகரங்கள்..; அஜித்தின் BIKE TOUR MAP வரைப்படம் இதோ

10 மாதங்களில் 30 நகரங்கள்..; அஜித்தின் BIKE TOUR MAP வரைப்படம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்தாண்டு 2022 பொங்கலுக்கு ரிலீசாகிறது.

இந்த படத்தில் தன் பணிகளை முடித்து கொடுத்துவிட்டு பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்.

அண்மையில் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம், அதன்பின்னர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லை, அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இவை அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

ராஜஸ்தான் அருகே ஒரு மலையின் உச்சியில் அஜித் நிற்கும் படங்கள் நமக்கே மரண பயத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில் தல அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் என்பவர் தன் டிவிட்டரில் பதிவில் அஜித் பயணம் செய்த இந்தியா ரூட் வரைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் கடந்த 10 மாதங்களாக 3 கட்டமாக அஜித் சென்ற 30 நகரங்களின் வரைப் படத்தையும் எந்த வழியாக அந்த ஊர்களை அடைந்தனர் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Thala Ajith’s bike tour map goes viral

‘அண்ணாத்த’ அணி இறங்கி வந்தும் அடங்காத நயன்தாரா..; அடுத்தவன் கெட்டால் நமக்கென்ன? அதானே..

‘அண்ணாத்த’ அணி இறங்கி வந்தும் அடங்காத நயன்தாரா..; அடுத்தவன் கெட்டால் நமக்கென்ன? அதானே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இதில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன், சதீஷ், வேலராமமூர்த்தி, ஜெகபதிபாபு, அபிமன்யுசிங், லிவிங்ஸ்டன், கொளப்புள்ளி லீலா, அர்ஜய், கபாலி விஸ்வந்த், பாலா, ரெடின் கிங்கிஸ்லி, (மறைந்த) நடிகர் தவசி, ஜார்ஜ் மரியன் என கோடம்பாக்கத்தின் பாதி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் புரோமோசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சன் டிவியில் நாளை மதியம் அண்ணாத்த சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் நடிகைகளில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இதன் புரோமோக்கள் ஜாலியாக உள்ளது.

ஒருவேளை ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருந்தால் அவர் கூட கலந்துக் கொண்டு இருப்பார் போல. எந்திரன் மற்றும் 2.0 படத்திற்காக டிவி புரோமோக்களில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார். (அது தனி இண்டர்வியூ என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை.

நடிகைகளில் குஷ்பூ மீனாவுக்கு இல்லாத ரசிகர் பட்டாளாமா? நயன்தாராவுக்கு இருக்கிறது?

குஷ்பூக்கு கோயில் கட்டிய கூட்டம் கூட தமிழ்நாட்டுல இருக்காங்க. அப்படியிருக்கையில் இத்தனை பிரபலங்கள் கலந்துக் கொண்டும் நயன்தாரா கலந்துக் கொள்ளாதது என்னவோ.?

அண்மையில் நயன்தாரா தயாரித்து நடித்த நெற்றிக்கண் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் விஜய் டிவிக்காக கலந்துக் கொண்டார்.

சொந்த காசு போட்டு படம் எடுத்தா மட்டும் நயன் கலந்துக் கொள்வாரா? அதுசரி.. அடுத்தவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன? இதான் நயன்தாரா பாலிசி போல…

தனக்கு வந்தா மட்டும் ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி கதைதான்..

Nayanthara’s no promotion policy creates controversy

More Articles
Follows