BREAKING பிகில் ஆடியோ: விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டிய ஆனந்த்ராஜ்?

BREAKING பிகில் ஆடியோ: விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டிய ஆனந்த்ராஜ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anandraj speech about Vijays Political entry at Bigil audio launchஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

டிவி நடிகை ரம்யா மற்றும் மிர்ச்சி சிவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஒரு ரசிகன் தலைவனுக்கு அடித்தால் அது விசில். ஒரு தலைவன் தன் ரசிகனுக்கு அடித்தால் அதான் பிகில் என பன்ச் பேசினார் சிவா.

திரளான ரசிகர்கள் மத்தியில் விஜய் மற்றும் அவரது பெற்றோர்களும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் பிகில் படத்தில் நடித்துள்ள ஆன்ந்த்ராஜ் மேடையில் பேசி வருகிறார்.

அவர் பேசியதாவது….

இந்த சத்தம்தான் மாநிலம் தாண்டி, நாட்டை தாண்டி, கண்டம் தாண்டி, ஆகாயம் வரை செல்லும்.

விஜய்யின் மகனுடன் நான் நடிக்க வேண்டும். அவன் நடிக்க வந்த பிறகு விஜய் எங்க இருப்பாருன்னு நீங்க தான் முடிவு செய்யனும் என பேசினார் ஆனந்த் ராஜ்.

இது விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டும் வகையில் இருப்பதால் அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Anandraj speech about Vijays Political entry at Bigil audio launch

B.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணேஷ் பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்”

B.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணேஷ் பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kattilஇயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர். மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும், இந்திய தேசியவிருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா, இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்பு வகித்தவர். 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவர்.

கட்டில் திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே “யமுனா” என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் தமிழின் பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர், சர்வதேச விருது பெற்ற பல படங்களில் இவரது பங்களிப்பு உள்ளது.

“கட்டில்” படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இந்த படத்தைப்பற்றி கூறும்போது “நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறைக்கு குறிப்பாக இணைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக“கட்டில்” திரைப்படம் இருக்கும். இந்திய திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் ஜனரஞ்சகத்தோடு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இதன் நடிக, நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வரும்” என்று கூறினார்.

திருமணத்தை வெறுக்கும் நடிகைகள் வரலட்சுமி & த்ரிஷா.; ஏன்.?

திருமணத்தை வெறுக்கும் நடிகைகள் வரலட்சுமி & த்ரிஷா.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Actress Trisha and Varalakshmi refuse to get marriedசினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் 35 வருடங்களாலும் ஆனாலும் இளைஞர்கள் போல் காதல் செய்து நடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் நடிகைகளின் மார்கெட் குறைந்த காலம்தான். அவர் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கோயிலே கட்டினாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்களுக்கு ஹீரோயின் வேடம் கிடைப்பது இல்லை.

அதுவும் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். சினிமாவை விட்டே ஒதுக்கிவிடுவார்கள்.

எனவே சில நடிகைகள் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் நடித்து வருகின்றனர்.

முக்கியமாக த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, வரலட்சுமி உள்ளிட்டோர் 30 வயதை கடந்தும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

அனுஷ்கா யாரை திருமணம் செய்துக் கொள்வார் என்பது புதிராக உள்ளது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்வாரா நயன்தாரா? அல்லது சிம்பு, பிரபுதேவா போல இவரையும் கழட்டி விடுவாரா? என்பது இதுவரை தெரியவில்லை.

இதில் நடிகை த்ரிஷா ராணாவுடன் காதல் கொண்டார். அது முறியவே வருண் மணியன் என்பவரை நிச்சயம் செய்தார். ஆனால் அதுவும் திருமணத்தில் முடியவில்லை.

எனவே திருமண வாழ்க்கையை வெறுப்பதாக கூறி வருகிறார்.

அதுபோல் சமீபத்தில் நடந்த கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் தான் திருமணம் செய்துக் கொள்ள போவதில்லை என அறிவித்தார் வரலட்சுமி.

இவரும் விஷாலும் நெருக்கமாக இருந்து பின்னர் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Why Actress Trisha and Varalakshmi refuse to get married

BREAKING ஹிந்தி எதிர்ப்பு: ரஜினி பதிலடியால் ஆடி போன அமித்ஷா

BREAKING ஹிந்தி எதிர்ப்பு: ரஜினி பதிலடியால் ஆடி போன அமித்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amit Shah latest reaction to Hindi Imposition in Indiaகடந்த 14ஆம் தேதி ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமித் ஷா, நாடு முழுவதும் இணைக்கும் மொழி இந்தி எனக் கூறியிருந்தார்.

எனவே மற்ற மொழி பேசும் மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் இருந்து பயங்கர எதிர்ப்பும் உருவானது.

இதற்கு பல பேர் பலவிதமாக கருத்து கூறினாலும் அமித்ஷா அமைதி காத்தார்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பேசியது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழிகள் பேசும் இந்தியாவில் ஹிந்தி போன்ற பொது மொழி தேவையில்லை என்று காலையில் தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

தற்போது மாலை வேளையில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

‘பூர்வதயா இந்துஸ்தான்’ என்ற நிகழ்ச்சி ஒன்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பேசியுள்ளதாவது..

‘இந்தி தினத்தன்று நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வருகிறேன். நான் இந்திய மொழிகளை வலிமைபடுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.

மேலும் ஒரு குழந்தை தனது தாய்மொழியில் படிக்க தெரிந்தால் மட்டும் தான் சிறப்பாக படிக்க முடியும். தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.

மொழிகளை வலிமைப்படுத்த தவறினால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று நமது மொழி எது எனத் தெரியாமலே போய்விடும்” என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.

Amit Shah latest reaction to Hindi Imposition in India

BREAKING பிகில் & கைதி படத்துடன் மோதும் ‘பெட்ரோமாக்ஸ்’

BREAKING பிகில் & கைதி படத்துடன் மோதும் ‘பெட்ரோமாக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petromax clash with Bigil and Kaithi on Diwaliஇந்தாண்டு தீபாவளி வருகிற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பே அதாவது 24ஆம் தேதி படங்கள் வெளியாகவுள்ளன.

நிறைய படங்களின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் தமன்னாவின் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

தமன்னா நடிப்பில் திகில் கலந்த காமெடியில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ்.

அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருடன் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட், பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.

இப்படம் தெலுங்கில் டாப்ஸி, கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Petromax clash with Bigil and Kaithi on Diwali

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vasanthஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,
“இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.”

இவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். செப்டெம்பர் 15ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.

More Articles
Follows