‘அம்மா’ பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகிறது

‘அம்மா’ பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amma Jayalalithaa‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்..’ என்ற வார்த்தைகளை செயலாக்கி காட்டி வாழ்ந்தவர் ஜெயலலிதா.

இவர் கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார்களாம்.

பிரபல தெலுங்கு டைரக்டர் தசரி நாராயண ராவ் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகவுள்ள இப்படத்திற்கு அம்மா என்று பெயரிடவிருக்கிறாராம்.

இதற்காக இப்படத் தலைப்பை அவர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க எந்த நடிகை கொடுத்து வைத்திருக்கிறாரோ?

Amma Jayalalithaa’s biopic will be directed by Dasari Narayana Rao

 

‘சிம்பு படிச்சவர்தானே; திருந்த மாட்டாரா.?’ மகளிர் அமைப்புகள் கண்டனம்

‘சிம்பு படிச்சவர்தானே; திருந்த மாட்டாரா.?’ மகளிர் அமைப்புகள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu2014ல் டிசம்பரில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வந்த போது, சிம்பு பாடிய பீப் சாங்கும் வெளியானது.

இது சர்ச்சைக்குள்ளாகி பல வழக்குகள் சிம்பு மீது பாய்ந்தது.

தற்போது 2016ஆம் ஆண்டு முடிவில் சிம்பு பாடிய டிரெண்ட் சாங் வெளியானது.

இதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் சில வரிகள் உள்ளன. (அங்கே பீப் ஒலிக்கிறது)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

சிம்பு நடிக்க, யுவன் சங்கர் ராஜா இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இப்பாடலும் பிரச்சினையில் சிக்கும் என்று நாம் தெரிவித்திருந்தோம்.

அதுபோலவே தற்போது மகளிர் அமைப்புகள் இப்பாடலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.

“இவர்கள் எல்லாம் படித்தவர்கள்தானே. இப்படி ஒரு பாடலை பாடலாமா? சிம்பு திருந்த மாட்டாரா? இந்த போக்கை மாற்றிக் கொண்டு திருந்த வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Ladies association voice against Simbu’s Trend Song from AAA movie

ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘மாரியப்பனாக’ தனுஷ்.?

ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘மாரியப்பனாக’ தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Dhanushஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படமான 3 படத்தில் நடித்தார் தனுஷ்.

அதன்பின்னர் ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார்.

தற்போது பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறார் ஐஸ்.

இதில் தனுஷே மாரியப்பன் கேரக்டரில் நடிப்பார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

Will Dhanush act in Mariyappan Biopic directed by Aishwarya

சமந்தா இடத்தில் கீர்த்தி சுரேஷ்; சாவித்ரியாக நடிக்கிறார்!

சமந்தா இடத்தில் கீர்த்தி சுரேஷ்; சாவித்ரியாக நடிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha Keerthy Sureshதென்னிந்திய சினிமாவை தன் அழகிய நடிப்பால் கவர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் விரைவில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் இது தொடர்பாக சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமந்தா மற்றொரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ள இப்படத்திற்கு மகாநதி என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாவித்ரி பற்றி சில குறிப்புகள்…

  • நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்ரி.
  • தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
  • காஸ்ட்லி கார், பங்களா, அதிக சம்பளம் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கட்டியவர்,
  • ஆனால் இவரது கடைசிகால வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்தது.
  • போதை பழக்கத்திற்கு அடிமையாகி ஆதரவின்றி இறந்து போனதாக கூறப்படுகிறது.

Keerthy Suresh may act in Savitri’s biopic

அனிருத்துக்கு சான்ஸ் இருக்கு… ஆனா இல்ல

அனிருத்துக்கு சான்ஸ் இருக்கு… ஆனா இல்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஅனிருத் இசைக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு தொடர்ந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

ஆனால் அனிருத்தோ ரூ. 3 கோடியை சம்பளமாக கேட்க, அனிருத்தை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம்.

இதனால், சான்ஸ் இருந்தும் இல்லாமல் இருக்கிறாராம் அனிருத்.

‘பைரவா’ ரிலீஸில் சிக்கல்… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

‘பைரவா’ ரிலீஸில் சிக்கல்… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaaவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் வருகிற 10ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள தியேட்டர்கள் மூடச்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாம்.

விநியோகஸ்தர்கள் தியேட்டர்கள் உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ள லாபம் பங்கீடு பிரச்சினைதான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இப்பிரச்சினை தீரும் வரை பைரவா உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகாது என்பதால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

More Articles
Follows