தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட்டின் BIG B என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன்.
இவர் சற்றுமுன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியளவில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் மும்பையும் முக்கியமானது.
அங்கு இதுவரை 91,745 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,244 பேர் வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்து அதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.
அதாவது… தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதன் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்திருப்பதாக அவரே பதிவிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து சில மணி நேரங்களில் அமிதாப்பின் மகனும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான நடிகர் அபிசேக்பச்சனும் தனக்கு கொரோனா தொற்று ரிசல்ட் பாசிட்டிவ் என வந்துள்ளதாக அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனால் இவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.
இதனிடையில் அபிசேக்பச்சனின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. அதாவது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
அதே போல் ஐஸ்வர்யா ராயின் மகளுக்கும் கொரோனா தொற்று இல்லை. அதுபோல் அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சனுக்கும் ரிசல்ட் நெகட்டிவ் என உறுதியாகியுள்ளது.
Amitabh Abhishek found Covid 19 positive Aishwarya Jaya result negative