‘வலிமை’ அப்டேட்.: படப்பிடிப்புக்கு வராத நடிகர்கள்.; வலியுடன் ரீ சூட் செய்த டைரக்டர்

‘வலிமை’ அப்டேட்.: படப்பிடிப்புக்கு வராத நடிகர்கள்.; வலியுடன் ரீ சூட் செய்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’.

யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் அஜித்துடன், ஹூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில் வெகு நாட்களாக வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

இதனிடையில் வலிமை குறித்து பட இயக்குனர் வினோத் & அஜித் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா இருவரும் தங்கள் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது…

ஊரடங்குக்கு முன்னர் சீனியர் நடிகர்களை வைத்து காட்சிகள் எடுத்தோம். ஊரடங்குக்கு பின்னர் சூட்டிங் தொடங்கிய போது கொரோனா பயத்தால் அந்த சீனியர் நடிகர்கள் வரவில்லை.

எனவே புதிய நடிகர்களை வைத்து மீண்டும் அதே காட்சிகளை எடுத்தோம்.

வெளிநாட்டில் ‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சி எடுக்கப்படவுள்ளது.

ஊரடங்கு முடிந்தபின் வெளிநாட்டுக்கு சென்று அந்த சண்டைக் காட்சியை எடுக்கவுள்ளனர்.

ஒருவேளை வெளிநாடு பயணம் ஊரடங்கால் தாமதமானால் மாற்று ஏற்பாடும் தயாராக உள்ளதாம்.

சண்டைக் காட்சிகள் தவிர சிறுசிறு பேட்ச் ஒர்க் உள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைப் பொறுத்தவரை, இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் முடிந்து விட்டது.

பினிஷிங் டச் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

Ajith movie Valimai Final shoot schedule updates

நடிகர் வெற்றியின் ‘மெமரீஸ்’ படத்திற்காக பாண்டிராஜ்-இமான்-ரகுமான் கூட்டணி

நடிகர் வெற்றியின் ‘மெமரீஸ்’ படத்திற்காக பாண்டிராஜ்-இமான்-ரகுமான் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத் தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான ‘மெமரீஸ்’ படத்தின் டீசர் இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

டீசர் வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் படமாக இருக்கும்.

மேலும் இப்படம் முற்றிலும் புதிய முயற்சி. இப்படத்தில் நடிகர் வெற்றியின் சிறந்த நடிப்பை காணலாம் என அப்படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் கூறியுள்ளார்.

இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் கொரோனா ஊரடங்கு முடிவில் அறிவிக்கப்படும்.

Vettris Memories teaser launched by Pandiraj Inman Rahman

Cast and Crew :

தயாரிப்பு- ஷிஜுதாமீன்ஸ்

கதாநாயகன்- வெற்றி

இயக்குனர்- ஷாம் பிரவீன்

ஒளிப்பதிவு- ஆர்மோ & கிரன்

படத்தொகுப்பு- சேன் லோகேஷ்

இசை- கவாஸ்கர் அவினாஷ்

வசனம்- அஜயன் பாலா

திரைக்கதை- ஷாம் பிரவீன் மற்றும் விபின் கிருஷ்ணன்

கலை – தென்னரசு

சண்டை பயிற்சி- அஷ்ரஃப் குருக்கள்

தயாரிப்பு மேலாண்மை- எஸ்.நாகராஜன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு- முகேஷ் ஷர்மா

மக்கள் தொடர்பு – ப்ரியா

JUST IN டாஸ்மாக் கடைகள் திறப்பு..; தமிழ்நாட்டில் ஜுன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு

JUST IN டாஸ்மாக் கடைகள் திறப்பு..; தமிழ்நாட்டில் ஜுன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (5)கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்து உத்தரவிட்டார்.

அந்த விவரம் வருமாறு…

சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு

11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள்

11 மாவட்டங்களில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ.பதிவுடன் அனுமதிக்கப்படும்

எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதி.

எலக்ட்ரீசியின், பிளம்பர், தச்சர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்கள், இ.பதிவுடன் செயல்பட அனுமதி

ஓட்டுநர் தவிர டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோவில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

11 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

*27 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்*

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்.

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி

அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதி

பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி.

உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் காலை 9 மணி வரை நடைபயிற்சி அனுமதி

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் இயங்கலாம்

வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி

27 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

ஏற்றுமதி நிறுவனங்கள் தவிர, இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மோட்டார் சைக்கிளில் செல்ல விரும்பினால், இ.பதிவு பெறுவது கட்டாயம்

ஐ.டி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20% பணியாளர்கள், அல்லது 10 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி

வீட்டுவசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்

வணிக நிறுவனங்கள் & கடைகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

கடைகளில் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை கட்டாயம்

கடைகளுக்கு வருவோர், பணிபுரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

அனுமதிக்கப்பட்ட கடைகள் ஏசி வசதி இன்றி செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

ஒரே நேரத்தில் கடைகளில், அதிகப்படியான வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது.

*27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறப்பு*

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்புக்கு அனுமதி

டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி.

பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் மாஸ்க் அணிவது கட்டாயம்

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்

பொதுஇடங்கள், வீடுகளின் அருகாமையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

வெளியில் சென்று திரும்புவோர், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கைகழுவுவது அவசியம்.

TN extends lock down until June 21st

‘தி பேமிலி மேன் 3’ பாகத்தின் கதை இதுதானா.? இந்தியாவை குறி வைக்கும் சீனா

‘தி பேமிலி மேன் 3’ பாகத்தின் கதை இதுதானா.? இந்தியாவை குறி வைக்கும் சீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

family man 3தி பேமிலி மேன் வெப் சீரிஸின் கதை நம்மில் பலர் அறிந்த ஒன்றுதான்.

இந்தியாவின் ரா அமைப்பில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் திவாரி சர்வதேச சதி திட்டங்களை எப்படி முறியடித்தார் என்பது கதைக்களம்.

சிறப்பு அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்க அவரது மனைவியாக பிரியாமணி நடித்து இருந்தார்.

தற்போது இதன் 2வது சீசன் பலத்த எதிர்ப்புக்கு இடையே வெளியாகியுள்ளது. 2வது சீசனில் சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்க இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர்.

இதில் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி சர்ச்சைகள் கிளம்பி இருந்தன என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

3வது பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இரண்டாவது சீசன் இறுதியில் காட்டி இருந்தனர்.

அதில்…. ‘தி பேமிலி மேன்’ 3வது சீசனில் கொரோனா பாதிப்பு காட்சிகளை காட்டுகிறார்கள்.

அதன்பிறகு ஒரு சீனாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் லேப் டாப்புடன் பணி புரிகிறார்.

தனது லேப் டாப்பை திறந்து ஒருவருடன் உரையாடுகிறார்.

“நான் நாகாலாந்தையும், அருணாச்சல பிரதேசத்தையும் கவர் செய்து விட்டேன் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என மெசேஜ் அனுப்புகிறான்.

உடனே அனுமதி கிடைத்த உடன் தொடர் முடிகிறது.

இந்தியா மீது கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறது சீனா என்பதை காட்டியிருக்கிறார்கள்.

The family man 3 story is leaked ?

மச்சானை இழந்த சில தினங்களில் அப்பாவையும் இழந்த நகைச்சுவை நடிகர்

மச்சானை இழந்த சில தினங்களில் அப்பாவையும் இழந்த நகைச்சுவை நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரான பால சரவணன் தன் தந்தை ரங்கநாதன் கொரோனா தொற்றால் இழந்துள்ளார்.

இவரது தந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மையில் தான் தன் தங்கையின் கணவரையும் (32 வயது) கொரோனா தொற்றுக்கு பறி கொடுத்தார் நடிகர் பாலசரவணன்.

அப்போதே கொரோனாவை அலட்சியமாக கருத வேண்டாம் என நடிகர் பாலசரவணன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil comedy actor dies due to corona

balasaravanan father

‘சிங்காரச் சென்னை 2.0’.. முதல்வர் ஸ்டாலின் போடும் அடுத்த ஸ்கெட்ச்

‘சிங்காரச் சென்னை 2.0’.. முதல்வர் ஸ்டாலின் போடும் அடுத்த ஸ்கெட்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singara chennai stalin‘சிங்காரச் சென்னை’ என்ற பெயர் வரக் காரணமாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஸ்டாலினும் தான்.

27 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக முக ஸ்டாலின் பதவி வகித்த காலக்கட்டம் அது.

அப்போது ​ ‘சிங்காரச் சென்னை’ என்ற அழகான திட்டத்தைத் தொடங்கினார்.

அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவின் அதிமுக அரசு அந்த திட்டத்தைக் கண்டுக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் தற்போது முக ஸ்டாலினே தமிழக முதல்வராக உள்ளார்.

எனவே தன் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், சிங்கரா சென்னை 2.0 திட்டப் பணி ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் முதல்வர்.

அதன்படி சென்னையை அழகுபடுத்தல், பாரம்பரியத்தை பேணுதல், கலாச்சாரம் மற்றும் கலைகளை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆரோக்கியம், போக்குவரத்து மற்றும் இயக்கம், நகர்ப்புற இடங்களை மறுபரிசீலனை செய்தல் என முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

இந்த நகரத்தை அழகுபடுத்தலில் ‘Project Blue’ முக்கியமானதாய் பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்கள், அண்ணா டவர் பூங்காவை மறுவடிவமைப்பு போன்ற பாரம்பரிய அடையாளங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.

பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Corporation to launch Singara Chennai 2.0

More Articles
Follows