‘அம்மா’ ஜெயலலிதாவுக்காக சென்னை திரும்பிய அஜித்

‘அம்மா’ ஜெயலலிதாவுக்காக சென்னை திரும்பிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசிவா இயக்கத்தில் தல 57 படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் கடந்த சில நாட்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித் அறிந்துள்ளார்.

இதனால் மிகவும் வருந்நிய அவர் நிச்சயம் நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், ப்ளைட்டில் ஏறிவிட்டாராம் அஜித்.

அதற்குள் இங்கே ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டது.

தற்போது தமிழகம் திரும்பியிருக்கும் அஜித், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அஜித் வெளியிட்ட இரங்கல் கடிதம் இதோ…

ajith letter

அம்மாவுக்கு அஞ்சலி: உங்கள் ஹீரோவை போன்ற ‘போராளி’யின் குரல்

அம்மாவுக்கு அஞ்சலி: உங்கள் ஹீரோவை போன்ற ‘போராளி’யின் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalithaகண்ணீரில் தவிக்கிறோம்.

அம்மாவின் தன்னம்பிக்கை ஆளுமை,
வாழ்வை வெற்றிகான என்னும் ஒவ்வொருத்தனுக்கும்
ஓர் உதாரணம்.

தந்தை இழப்பு இரு வயதில்.
தாயின் இழப்பு இருபது வயதில்.
பின் சகோதரனின் இழப்பு.

எல்லாரையும் இழந்த பின்பும்,
எல்லோரையும் பெற்றார்.
மரண ஊர்வலத்தின்
மனித கூட்டம்,
வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சி்.

டீ கடையை வைத்து,
உண்மையாய் உழைத்த கட்சிகாரனையும், அமைச்சராக்கி வாழ்வித்தவர்.

இன்றைய அதிமுகவின்
பல கவுன்ஸிலர்கள், எம்.எல்.ஏக்கள்,
அமைச்சரகளின்
நேற்றைய வரலாற்றை, தெருவோரங்களில்தான் தேட முடியும்.

அம்மா என்ற
ஒற்றை வார்த்தையால் வாழ்வை வென்றவர்கள் இவர்கள்.
வேறு எந்த கட்சியிலும்
இன்று இது சாத்தியமில்லை.

யாரையம் நம்பி
என் வாழ்வோ, செயலோ,
வெற்றியோ இல்லை என்று
வாழ்ந்து காட்டியவர்.

அது ஆட்சியானாலும் சரி,
வழக்கானாலும் சரி
முடிவெடுத்து விட்டால்,
கடைசி நுனிவரை போராடி பார்த்தவர்.

அவரின் வெற்றியை மட்டுமே
உலகம் பார்க்க அனுமதித்தார்.
மரணத்திலும் அப்படியே.

அவரின்
ஒவ்வொரு போராட்டத்தின் நுணுக்கம், வழி
யாவும் அவர் மட்டுமே அறிந்தது.

வாழ நினைக்கும்,
வெல்ல நினைக்கும் எவருக்கும்
இவர் ஓர் ஆதர்சன உதாரணம்.

எவருமேயின்றி
வெல்ல துடிக்கும்
மனிதர்களில் ஒருவனின் மன அஞ்சலி இது.

கண்ணீர்களின்றி….
மற்றுமொரு போராளி…

‘பார்க்க தோணுதே’ ஹீரோவுக்கு செல்போனால் பிரச்சினை

‘பார்க்க தோணுதே’ ஹீரோவுக்கு செல்போனால் பிரச்சினை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paarka thonudhae movie story updatsவாசவி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் “பார்க்க தோணுதே“

ஜெய் செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு மணீஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜி ரமேஷ் கவனிக்க, படத்தொகுப்பை லெனின் சந்திரசேகர் செய்துள்ளார்.

இதில் அர்ஷா மற்றும் சாரா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, வெளுத்துக்கட்டு அப்பு, பாத்திமா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து, படக்குழுவினர் கூறியதாவது…

கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதையை காமெடியுடன் தெரிவித்துள்ளோம்.

எங்கள் பட நாயகனுக்கு எதிர்பாராத விதமாக கீழே கிடந்த ஒரு செல்போன் கிடைகிறது.

அதன்பின்னர் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது.

அதிலிருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் இதன் திரைக்கதை என்றனர்.

இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதா நினைவிடம்

எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதா நினைவிடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mgr memorial jayalalithaமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 5ஆம் தேதி) நள்ளிரவு 11.30 மணிக்கு அவரது பிரிந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் கல்லறைக்கு அருகாமையிலேயே புதைக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவை கேட்ட கட்சித் தொண்டர்கள் தற்போது சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் அனைத்து வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து செல்ல இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jayalalitha funeral at MGR memorial at Marina beach

‘இந்தியாவே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது..’ ஜெயலலிதாவுக்கு ரஜினி இரங்கல்

‘இந்தியாவே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது..’ ஜெயலலிதாவுக்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha rajinikanthநேற்று டிசம்பர் 5, 2016 நள்ளிரவு 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

இதனையறிந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முக ஸ்டாலின், கனிமொழி, விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்களை வரை தங்களை இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த இரும்பு பெண்மணியை இழந்த விட்டதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது…

“தமிழ்நாடு மட்டுமல்ல… இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்.

rajini amma rip

rajinikanth Condolence to chief minister jayalalithaa

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil nadu chief minister jayalalitha passed awayதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் நாளை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர் என பல்வேறு அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து லண்டன் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் திரும்பி சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

விரைவில் குணமாகி அரசு பணிகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:

* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.

* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.

* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.

* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.

* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு தனது தாய் சந்தியாவின் இயற்பெயரான வேதா நிலையம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

* 15 ஆண்டுகளில் 110 படங்களில் நடித்து முடித்தார் ஜெயலலிதா.

* சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.

* ஜெயலலிதாவை, 1984ல் மாநிலங்கள்வை உறுப்பினராகி, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது

*எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது.

*அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது.

*எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதலமைச்சர் ஆனபோதும், தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கே ஆதரவாக இருந்தனர்.

*எனவே, ஜானகி அம்மாள் அமைச்சரவை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார்.

*ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.

* 1991 தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

*2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறினார் ஜெயலலிதா.

*2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

*2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

இதன்மூலம் தமிழக அரசியலில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்த வரலாறு திரும்பியது.

More Articles
Follows