தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் சினிமாவில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை கூறியிருந்தார் ஏஆர். ரஹ்மான்.
ஏஆர். ரகுமானுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இயக்குனரான சேகர் கபூர்.. ‘உங்களுடைய பிரச்னை என்ன தெரியுமா? நீங்கள் ஆஸ்கர் விருது வாங்கிவிட்டீர்கள். பாலிவுட்டில் ஆஸ்கர் என்பது இறப்பை முத்தமிடுவது. இது, பாலிவுட் உங்களை கையாள்வதைவிட நீங்கள் திறமையானவர் என்பதை நிருபித்துள்ளது’ என ரகுமானுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, தன்னையும் பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அவரின் ட்விட்டர் பக்கத்தில் (சேகர் கபூரை டேக் செய்து) அவர் பதிவிட்டுள்ளதாவது..
“ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் என்னை விலக்கி வைத்தது. யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை.
சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்துக்கு நேராகவே, நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறினர்.
என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்.
என்னால் எளிதாக ஹாலிவுட்டுக்கு செல்ல முடியும். ஆனால் நான் செல்லவில்லை. போகவும் மாட்டேன்.
இந்தியாவில் பணியாற்றிதான் ஆஸ்கர் வென்றேன். அமெரிக்காவில் உள்ள மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றிருக்கிறேன்.
மற்றவர்களை விட எனது மக்கள் மீது, எனக்கு நம்பிக்கை உள்ளது” என பதிவிட்டுள்ளார்.